என் மலர்
இந்தியா

இருப்பவர்களையே கையாள முடியவில்லை..! காஷ்மீர் பற்றி பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு உமர் அப்துல்லா பதிலடி
- காஷ்மீர் பாகிஸ்தானின் முக்கிய உயிர்நாடி- பாகிஸ்தான் பிரதமர்.
- அவர்களால் ஏற்கனவே இருப்பவர்களையே சமாளிக்க முடியவில்லை- உமர் அப்துல்லா.
காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் "காஷ்மீர் பாகிஸ்தானின் முக்கிய உயிர்நாடி. அது ஒரு நாள் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக மாறும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா "நாம் அவர்களுடன் சேரப் போகிறோமா? அவர்களால் ஏற்கனவே இருப்பவர்களையே சமாளிக்க முடியவில்லை. நம்மை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்?" என பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானால் காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் பேசும்போது மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இந்திய தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியா அதை திரும்ப பெறும் எனத் தெரிவித்து வருகிறார்கள்.






