என் மலர்
இந்தியா

பீகார் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவு
- 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
- இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.
234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இன்று முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர்.
121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
அதிகபட்சகமாக பெகுசாராய் தொகுதியில் 67.32% வாக்குகளும் குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகளும் பதிவாகி உள்ளன. மாலை 6 மணியுடன் முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றது.
இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.






