search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarashwathi"

    • பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம்பொருளின் ஆனந்தக்கூத்து தரிசனம் பெற்றனர்.
    • திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம் பொருளின் ஆனந்தக் கூத்து தரிசனம் பெற்றனர்.

    இதை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் சிவானந்தக்கூத்து காண விரும்பினார்கள்.

    பிரம்மன் விஷ்ணு லட்சுமி சரஸ்வதி பராசக்தி இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் பூமியில் உள்ள தில்லை வனத்தை அடைந்தனர்.

    ஆகாயத்தலத்துப் பொன்மேனி அழகனைத் தொழுது போற்றிப் பூஜை செய்து வழிபட்டனர்.

    தில்லையம்பலத்தை பொன்னம்பலமாக்கிப் பொற்கூரை வேய்ந்து திருப்பணி செய்தனர்.

    திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பரமேஸ்வரன் மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று (ஆருத்திரா) தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்த நடனத் திருக்காட்சி கொடுத்து அருளினார்.

    ஆனந்த நடராஜரின் திருக்காட்சி கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த தேவர்களும், தேவியர்களும் விழுந்து வணங்கிப் பணிந்தனர்.

    பிரம்மன் இறைவனது திருநடனத்திற்கு கீதம் பாடலானார். மகாவிஷ்ணு புல்லாங்குழல் ஊதினார்.

    ருத்திரன் மிருதங்கம் வாசித்தார். பராசக்திபாடினாள். சரஸ்வதி வீணை வாசித்தாள்.

    லட்சுமி தாளம் போட்டாள். நந்தி குடமுழா இயக்கினார்.

    இவ்வாறு எல்லோரும் கண்டு களித்துப்பணி புரியப் பரமன் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் ஆனந்த நடனக் காட்சியளித்தார்.

    • தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.
    • பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர்.

    தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.

    அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

    மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

    தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும்.

    பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு,

     தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும்.

    அப்படி செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி

    எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.

    வீட்டிலே நாம் இம்மாதிரி தீப பூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

    அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.

    தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும்.

    லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    • அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும்.
    • பத்தாம் நாளில் சிவ சக்தி ஐக்கிய ரூபிணியாகவும் வழிபடுதல் வேண்டும்.

    அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும்.

    புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள்

    நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    நவராத்திரி முதல் மூன்று தினங்கள் துர்க்கைக்கு உரியதாகும். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு உரியதாகும்.

    இறுதி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கு உரியதாகும்.

    நவராத்திரி ஒன்பது தினங்களிலும் அம்பாள் ஒன்பது வகையான திருக்கோலங்களுடன் ஆராதிக்கப் பெறுகிறாள்.

    முதல் நாளில் மூன்று வயதுள்ள பாலையாகவும், இரண்டாம் நாளில் ஒன்பது வயதுள்ள குமாரியாகவும்,

    மூன்றாம் நாளில் பதினைந்து வயதுள்ள தருணியாகவும், நான்காம் நாளில் பதினாறு வயதுள்ள சுமங்கலியாகவும்,

    ஐந்தாம் நாளில் ரூபிணியாகவும், ஆறாம் நாளில் ஸ்ரீவித்யா ரூபிணியாகவும், ஏழாம் நாளில் மகா துர்க்கையாகவும்,

    எட்டாம் நாளில் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாளில் சும்பன், நிசும்பனைக் கொன்ற சரஸ்வதி தேவியாகவும்,

    பத்தாம் நாளில் சிவ சக்தி ஐக்கிய ரூபிணியாகவும் வழிபடுதல் வேண்டும்.

    நவராத்திரியில் கோவிலில் விசேஷ பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள் யாவும் நடைபெறும்.

    இல்லங்களிலும் கொலு வைத்துக் கொண்டாடுவார்கள்.

    நவராத்திரியில் கன்னிகை பூஜை, சுமங்கலி பூஜை ஆகியவை மிகப் பிரதானமானவையாகும்.

    நவராத்திரியாகிய ஒன்பது தினங்களிலும் இல்லங்களுக்கு வரும் பெண்களுக்கு நீராடுவதற்காக பச்சிலை,

    பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், கோரோஜனம், காசுகட்டி, எண்ணெய், மஞ்சள், குங்குமம்,

    பன்னீர், சந்தனம், மருதோன்றி ஆகியவைகளை கொடுக்கலாம்.

    ஒன்பது நாட்களும் பூஜை நடத்த இயலாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களிலாவது

    பூஜையை செய்தால் ஒன்பது நாள் விரதப் பலனும் உண்டு.

    அஷ்டமி ஒரு நாளாவது அவசியம் பூஜை செய்தாலும் நவராத்திரி விரதப் பலன் உண்டு.

    கலைக்கும், பொருளுக்கும், சக்திக்கும் இந்த ஒன்பது நாட்களும் அம்பாளை பிரார்த்தனை, பாராயணம் செய்தால்

    அவள் இம்மூன்று பலன்களையும் முச்சக்திகளின் உருவெடுத்து நமக்கு தருவாள்.

    • ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன.
    • எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது.

    ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன.

    இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள்.

    மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர்.

    சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர்.

    எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது.

    எனவே தான் மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.

    • ஆதி பராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.
    • தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

    கல்வி, இசை, புகழ், செல்வம் தானியம், வெற்றி, பூமி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.

    ஆதி பராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.

    லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும்.

    சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும்.

    பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும்.

    எனவேதான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள்.

    தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

    இதற்கு காரணம், தேவியால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக,

    பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகிய மும்மூர்த்திகளும் உருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர்.

    எனவே, சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.

    • சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
    • செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும்.

    சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

    அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

    சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.

    சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இட்டும்,

    படத்திற்கு பூக்கள் வைத்தும் அலங்கரிக்க வேண்டும்.

    அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து

    அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.

    சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம்.

    வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும்.

    செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும்.

    இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.

    எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து,

    "சுக்லாம் பரதரம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்புஜம்! ப்ரசந்த வதனம் தீயாயேத் சர்வ விக்நோப சாந்தயே"

    என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.

    சரஸ்வதி பூஜையின் போது "துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம" என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று.

    பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.

    கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருள செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.

    பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம்.

    சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.

    நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள்

    சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும்.

    • பாராயணம் துதிகளில் மங்கள சண்டிகை துதி மகிமை வாய்ந்தது.
    • இதனை நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி நாளில் படிப்பது மிகவும் சிறப்பு.

    பாராயணம் துதிகளில் மங்கள சண்டிகை துதி மகிமை வாய்ந்தது.

    இதனை நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி நாளில் படிப்பது மிகவும் சிறப்பு.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி நாளிலும் கூட இதைப் பாராயணம் செய்வதால் நன்மை உண்டாகும்.

    அம்பிகையிடம் ஏதாவது கோரிக்கை வைத்து, அது நிறைவேற தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை படிப்பதும் வழக்கம்

    மிகவும் சிறப்பு வாய்ந்த அந்த மங்கள சண்டிகை துதி வருமாறு:

    ரட்ச ரட்ச ஜகன் மாதா

    சர்வ சக்தி ஜெய துர்கா

    ரட்ச ரட்ச ஜகன் மாதா

    சர்வ சக்தி ஜெய துர்கா

    மங்கள வாரம் சொல்லிட வேண்டும்.

    மங்கள கன்னிகை ஸ்லோகம்

    இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்.

    படைப்பவள் அவளே

    காப்பவள் அவளே

    அழிப்பவள் அவளே சக்தி

    அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே

    அடைக்கலம் அவளே சக்தி

    ஜயஜயசங்கரி கவுரி மனோகரி

    அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி

    சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி

    திருவருள் தருவாள் தேவி

    கருணையில் கங்கை

    கண்ணனின் கங்கை

    கடைக்கண் திறந்தால் போதும்

    வருவினை தீரும், பழவினை ஓடும்

    அருள் மழை பொழிபவள் நாளும்

    நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்

    காளி எனத் திரிசூலம் எடுத்தவள்

    பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்

    நாமம் சொன்னால் நன்மை தருபவள்!

    நாமம் சொன்னால் நன்மை தருபவள்!!

    • அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் “எழுத்தறிநாதர்“ என்ற பெயர் பெற்றார்.
    • பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன.

    விஜயதசமியைக் கல்வித் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.

    பல குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக இருக்கவும், கையெழுத்து திருந்தவும்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலுக்கு அழைத்து செல்லலாம்.

    இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு அரசர் தனது கணக்கு பிள்ளையை கோவில் கணக்குகளை எடுத்து வருமாறு பணித்தார்.

    அந்நேரத்தில் அவர் கணக்கை சரிவர எழுதி முடிக்கவில்லை.

    எப்படி கணக்கை முடித்துக் கொடுப்பது என்று தெரியாமல் விழித்தபடியே சன்னதியில் இருக்கும் சிவபெருமானை வழிபட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்.

    ஆனால் மறுநாள் காலையில் அரசர் கணக்கு பிள்ளையை அரண்மனைக்கு அழைத்து பாராட்டினார்.

    கணக்கு பிள்ளைக்கோ எதுவும் புரியவில்லை.

    இதுவரை பார்த்த கோவில் கணக்குகளிலேயே நீங்கள் சமர்ப்பித்த கணக்குதான் மிகச் சரியாக இருந்தது என்று சொன்னார் அரசர்.

    கணக்குப்பிள்ளை கணக்குப் பேரேட்டை வாங்கிப் பார்த்தார்.

    பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன.

    சிவபெருமானே தன்னைப் போல அரசரிடம் வந்து கணக்கை காட்டிய உண்மையை உணர்ந்தார் கணக்கர்.

    இந்த உண்மையை அரசரிடம் தெரிவித்ததோடு கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி நின்றார்.

    அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் "எழுத்தறிநாதர்" என்ற பெயர் பெற்றார்.

    ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில் எழுதுகிறார்கள்.

    தினமும் இந்த வழிபாடு இக்கோவிலில் நடக்கிறது.

    பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் இங்கு அர்ச்சனை செய்தால் நன்கு பேசும் திறன் உண்டாகிறது.

    • ஆறாம் நாள்: செம்பருத்தி மற்றும் சிவந்த நிறமுள்ள மலர்கள்.
    • ஒன்பதாம் நாள்: செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்கள்.

    ஒவ்வொரு அம்பிகைக்கும் உகந்த மலர்கள் உள்ளன.

    அவற்றைத் தேர்ந்தெடுத்து பூஜித்தல் அவசியம்.

    முதல் நாள்: வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை மலர்களால் மகேஸ்வரியை அர்ச்சிக்க வேண்டும்.

    இரண்டாம் நாள்: மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்வது நலம் பயக்கும்.

    மூன்றாம் நாள்: மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நான்காம் நாள்: ஜாதிமல்லி மற்றும் மணமுள்ள மலர்களால் அர்ச்சனை செய்யவும்.

    ஐந்தாம் நாள்: முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உகந்தது.

    ஆறாம் நாள்: செம்பருத்தி மற்றும் சிவந்த நிறமுள்ள மலர்கள்.

    ஏழாம் நாள்: மல்லிகை, முல்லை போன்ற சுகந்த மணமுள்ள மலர்களால் அர்ச்சிப்பது விசேஷம்.

    எட்டாம் நாள்: ரோஜா போன்ற சுகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    ஒன்பதாம் நாள்: செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் வளம் பெருகும்.

    • பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.
    • இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

    ஒன்பது நாள்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள்.

    இந்நாளே விஜயதசமி வெற்றி தருகிற பத்தாம் நாள்.

    பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.

    இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

    நவராத்திரி பத்து நாட்களும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி ஆகிய

    மூன்று நாட்களில் மட்டுமாவது (7, 8, 9) தேவி வழிபாடு செய்யலாம்.

    அதுவும் முடியாதவர்கள் மகா அஷ்டமி 8ம் நாள் அன்று நிச்சயம் தேவி வழிபாடு செய்ய வேண்டும்.

    • சரஸ்வதியை “ஆற்றங்கரை சொற்கிழத்தி” என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன
    • அமைதிப்பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை.

    சரஸ்வதி வைரத்தின் அழகு.

    அமைதிப்பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை.

    ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.

    சரஸ்வதியை "ஆற்றங்கரை சொற்கிழத்தி" என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.

    இவளுக்குத் தனிக் கோவில் இருக்கும் ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள கூத்தனூர்.

    அஷ்ட சரஸ்வதிகள்

    1. வாகீஸ்வரி, 2. சித்ரேஸ்வரி, 3. துளஜா, 4, கீர்த்தீஸ்வரி, 5. அந்தரிட்ச சரஸ்வதி, 6. கட சரஸ்வதி, 7. நீல சரஸ்வதி, 8. கினி சரஸ்வதி.

    கடைசி மூன்று நாள் நிவேதன வினியோகம்:

    7. எலுமிச்சை சாதம், 8. பாயாசம், 9. அக்கார அடிசில்.

    • லட்சுமி மலரின் அழகு. அருள்பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.
    • முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

    லட்சுமி மலரின் அழகு. அருள்பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.

    செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி என்றும் அழைப்பதுண்டு.

    லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள்; பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.

    இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகின்றன.

    முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

    இவளுக்குத் தனிக்கோயில் இருக்குமிடம் திருப்பதியில் உள்ள திருச்சானூர்.

    அஷ்ட லட்சுமிகள்

    1. ஆதிலட்சுமி, 2, மகாலட்சுமி, 3. தனலட்சுமி, 4. தானியலட்சுமி, 5. சந்தானலட்சுமி, 6. வீரலட்சுமி, 7. விஜயலட்சுமி, 8. கஜலட்சுமி இவர்கள் லட்சுமியின் அம்சங்கள்.

    இடை மூன்று நாள் நிவேதன வினியோகம்.

    4. கதம்ப அன்னம், 5. தயிர் சாதம், 6. தேங்காய் சாதம்.

    ×