search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi 18"

    • ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம்.
    • ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப பழைய காலத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆனி இந்த மூன்று மாதங்களில் இருக்கக் கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழைபொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் வரும். இந்த புது வெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப்பெருக்கு.

    சங்க நூல்களில்பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப்பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    ஆடி 18-ம்பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

    இதனால்தான் இந்த நாட்களில் இது போன்றெல்லாம் செய்வது செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை

    ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும்.

    அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள்,பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது.

    இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணுபற்றிய நூல்களைபடிக்கலாம்.

    இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம்பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

    பொதுவாக ஆடி மாதத்தை ‘நிலையற்ற மாதம்’ என்பர். அட்சயத் திருதியை போலவே ஆடிப் பெருக்கும் நல்ல காரியங்கள் துவங்குவதற்கு உகந்த நாள்.
    அட்சயத் திருதியை போலவே ஆடிப் பெருக்கும் நல்ல காரியங்கள் துவங்குவதற்கு உகந்த நாள். பொதுவாக ஆடி மாதத்தை ‘நிலையற்ற மாதம்’ என்பர். அந்த மாதத்தில் எந்த ஒரு காரியம் செய்தாலும், அது ஆடிப் போய் விடும் என்று சொல்லப்படும். ஆனால், இந்த ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு தினம் விதிவிலக்கு.

    ஆடி 18-ஆம் தேதி அன்று எந்த நட்சத்திரம், திதி வந்தாலும் கவலை வேண்டாம். அன்றைய தினம் புதிய தொழில், புது முயற்சி, வியாபார முன்னேற்றம் போன்றவற்றை தாராளமாக மேற்கொள்ளலாம் என்கிறார்கள் அருளாளர்கள். இந்த தினத்தில் துவக்கப்படுகிற எந்த ஒரு நற்செயலும் பன்மடங்கு விருத்தி அடைந்து, கூடுதல் நன்மை அளிக்கும். இன்றைக்குத் துவங்குகிற வங்கிக்கணக்குகள், சேமிப்புகள் போன்றவை பன்மடங்கு பெருகும்.

    வீட்டுக்குத் தேவையான ஜவுளிகள், நகைகள், இதர பொருட்கள் வாங்க உகந்த தினம். என்றும் மங்களம் தரும் பொருட்கள் வாங்கலாம். உதாரணத்துக்கு மஞ்சள், குங்குமம், நாட்டுச் சர்க்கரை போன்றவை.

    வெண்மை நிறம் கொண்ட பொருட்களை வாங்கினால், வீட்டில் சுபிட்சம் வளரும். குறைந்த பட்சம் உப்பு, அரிசி. படிக்கின்ற குழந்தைகளுக்கு எழுது பொருட்கள், பாடம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கலாம்.

    எனவே, இன்றைய தினம் நதி தேவதைகளை - பெண் தெய்வங்களை வணங்கி நம் மனதில் இருக்கிற மாசுகள் அகல பிரார்த்தித்துக் கொள்வோம்.

    ஆடி 18-க்கு என்ன சிறப்பு?

    இந்து சமயம் தொடர்பான பண்டிகைகளும் பெருவிழாக்களும் பெரும்பாலும் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகின்றன. ஆனால், பல லட்சக்கணக்கானோர் கொண்டாடும் இந்த ஆடிப்பெருக்கு மட்டும் ஆடி மாதத்தின் 18-ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு என்ன நட்சத்திரம், என்ன திதி - இப்படி எதுவும் பார்ப்பது கிடையாது.
    ஆடிப்பெருக்கை நீர்நிலைகளில் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயும் வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்வது என்று பார்க்கலாம்.
    நீராடி முடித்த பின் வீட்டை சுத்தமாக்குங்கள். பூஜையறையை நன்றாகத் துடைத்து, மாக்கோலம் போடுங்கள். ஒரு பித்தளைச் செம்பில் அரைத்த மஞ்சள் விழுதையோ, அல்லது மஞ்சள் பொடியையோ குறிப்பிட்ட அளவு போடவும். பிறகு, சுத்தமான நீரை செம்பில் விடவும். விரலால் கலக்கவும். இப்போது நீரானது மஞ்சள் நிறத்துக்கு மாறி இருக்கும். கொஞ்சம் உதிரிப்பூக்களையும் இந்த செம்பில் போட்டு விட்டு, பூஜையறையில் வைக்கவும்.

    ஒரு பித்தளைத் தட்டில் தாம்பூலம், மஞ்சள், குங்குமம், உடைத்த தேங்காய், பழங்கள் போன்றவற்றை வைக்கவும். என்னென்ன ஸ்லோகங்கள் சொல்லி கடவுளை வழிபடுவீர்களோ, அதுபோல் வணங்கவும். பிறகு, காவிரி உட்பட அனைத்து நதி தேவதைகளையும் மனதாரப் பிரார்த்திக்கவும்.

    சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து அதை நிவேதனம் செய்யவும். பிறகு, ஆரத்தி காண்பிக்கவும். பூஜையறையில் இருக்கிற அம்மன் படங்களுக்கு பூக்களைத் தூவி வணங்கவும். அருகில் இருக்கின்ற சுமங்கலிகளை வீட்டுக்கு அழைத்தோ, அல்லது நீங்கள் அவர்களது வீட்டுக்குச் சென்றோ, தாம்பூலமும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமும் தரவும்.

    மஞ்சள் கரைக்கப்பட்ட நீரை அனைவரும் வணங்கி விட்டு, வீட்டில் இருக்கிற துளசிச் செடிகளுக்கு விடவும். மரம், செடிகளுக்கும் விடலாம். கிணற்றிலும் சேர்க்கலாம். 
    தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்கு 'களை' கட்டியது. #aadi18, #aadiperukku
    தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

    ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்குகளை கட்டியது.
    திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். படித்துறையில் அவர்கள் பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப்பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக் கொருவர் கழுத்தில் அணிவித்தனர். புதுமண தம்பதிகள் காவிரியில் பினித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர்.

    காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். மேலும் படித்துறைகளில் ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தன.

    கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, டபீர் படித்துறை, திருக்காட்டுப் பள்ளியிலும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை, துலா கட்டம், சீர்காழி, திருவாரூரில் ஆடிப்பெருக்கு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டனர்.

    புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது மணமக்கள் அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்தும் விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொரு வர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர்.

    அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டிகையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். இதேபோல் திருச்சி காவிரி கரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, திருவளர்ச் சோலை, கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்தி ரம், முசிறி, முக்கொம்பு காவிரி ஆற்றிலும் ஆடிப்பெ ருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


    பவானி கூடுதுறையில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். 3 நதிகள் (காவிரி, பவானி, அமுதநதி) சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று பொங்கி வரும் காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கூடுதுறைக்கு இன்று புதுமணத் தம்பதிகள் ஜோடி ஜோடியாக வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி மணமாலையை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
    தங்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டி வழிபட்டனர்.



    பல பெண்கள் ஆற்றில் முளைப்பாரியை விட்டு வழிபட்டனர். இதேபோல விவசாயிகள் பலரும் தங்களது குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி படித்துறையில் தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கட்டும் என வேண்டி வழிபட்டனர்.

    இப்படி பலதரப்பட்ட பக்தர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து இருந்ததால் பவானி நகர், மக்கள் வெள்ளத்தால் குலுங்கியது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடங்கி காவிரி கரை நெடுக புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.

    புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது திருமண மாலைகளை வாழை இலைகளில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். புதுமண தம்பதிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பழைய மஞ்சள் கயிறுகளை மாற்றி புதிய மஞ்சள் கயிறுகளையும் அணிந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆற்றில் காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. #aadi18, #aadiperukku
    ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.
    பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் மனித இனத்துக்கு பஞ்சம் இல்லாமல் தர வேண்டும் என இயற்கையை வழிபடுவதே ஆடிப்பண்டிகையின் நோக்கம். குறிப்பாக காவிரி கரையில் வசிக்கும் மக்கள் இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

    அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடங்கி காவிரி கரை நெடுக புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    சேலம், நாமக்கல், ஈரோடு தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் மேட்டூர் அணை முனியப்பன் கோவிலுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்கு வைத்து உணவு சமைத்து அதனை அருகில் உள்ள அணை பூங்காவுக்கு எடுத்து சென்று உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினர்.

    மேட்டூரை சுற்றியுள்ள கோவில்களில் உள்ள சாமி சிலைகள், ஈட்டிகள், அரிவாள்களை மேள தாளம் முழங்க எடுத்து வந்த பக்தர்கள் காவிரியில் சுத்தப்படுத்தி மீண்டும் அதனை கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 18 ஆயிரத்து 267 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மேட்டூர் அணை காவிரி பாலம் படித்துறை, மட்டம், பாம்பு புற்று படித்துறை, மேற்கு கால்வாய் ஆகிய 4 இடங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதுடன், கரையில் நின்று போட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது திருமண மாலைகளை வாழை இலைகளில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். புதுமண தம்பதிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பழைய மஞ்சள் கயிறுகளை மாற்றி புதிய மஞ்சள் கயிறுகளையும் அணிந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆற்றில் காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அந்த பகுதிகளில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    மேட்டூர் அரசு பள்ளி வளாகம், பொன்நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேட்டூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஈரோடு மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் மாதையன் குட்டையில் இருந்து மேற்கு மெயின் ரோடு வழியாக பஸ் நிலையத்திற்கு வந்து சென்றன.

    சேலம் மார்க்கமாக வரும் பஸ்கள் துணை கலெக்டர் இல்ல சாலை வழியாக மாதா கோவில் அருகே மேற்கு பிரதான சாலை வழியாக பஸ் நிலையம் வந்து சென்றன. இதே போல மேலும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது.

    எடப்பாடி சுற்று வட்டார பகுதி மக்கள் இன்று காலை முதலே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் குவிந்தனர். காவிரியில் புனித நீராடிய சுமங்கலி பெண்கள் பழைய தாலி கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறை அணிந்து கொண்டனர். இதனால் கணவருக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

    புதுமண தம்பதிகள் காவிரி கரையில் சிறப்பு பூஜை செய்து தங்களின் திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். அந்த பகுதியில் உள்ள உற்சவ மூர்த்தி சிலை மற்றும் கோவிலில் உள்ள பூஜை பொருட்களை மேள தாளங்கள் முழங்க எடுத்து வந்து காவிரி ஆற்றில் சுத்தப்படுத்தி மீண்டும் கோவில்களுக்கு எடுத்து சென்றனர்.

    சேலத்தில் இருந்து பூலாம்பட்டிக்கு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்ட தொடங்கியது.
    தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

    காவிரி கரையோரங்களில் ஆடி-18 விழா ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மேட்டூர், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உற்சாகப்படும்.

    தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

    தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு களை இழந்து காணப்பட்டது. இந்தாண்டில் மேட்டூரில் இருந்து கடந்த மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் 22-ந் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை பகுதி வரை சென்றுள்ளதால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்ட தொடங்கியது.

    திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். படித்துறையில் அவர்கள் பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப் பெண்கள், அங்குள்ள விநாயகருக்கு முன்பு தழை வாழையிட்டு அதில் எள், வெல்லம் கலந்த பச்சரிசி வாழைப் பழம், பேரிக்காய், விளாம்பழம் கொய்யாப் பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவை படையலிட்டு வழிபட்டனர்.

    மேலும் செந்நிறப் பனை ஓலையுடன் கருக மணி வளையல் சுற்றிய காதோலைக் கருகமணியுடன் மஞ்சள், குங்குமம், மஞ்சள் இழைக்கயிறுகள் ஆகியவற்றையும் வைத்து தீப, தூபங்கள் காட்டி வழிபாடு செய்தனர். பின்னர் வெல்லங் கலந்த பச்சரிசி மற்றும் பேரிக்காய் முதலிய பழ வகைகளை அனைவருக்கும் வழங்கினர்.

    பெண்களுக்கு மஞ்சள் கயிறு அணிவித்த காட்சி.

    கன்னிப்பெண்கள், திருமணமான பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிவித்தனர்.

    மேலும் புதுமண தம்பதிகள் காவிரியில் பினித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர். மேலும் திருமணமாத கன்னிபெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டியும், தங்களது வாழ்வில் மகிழ்ச் சியும், வளமும் நிலைத் திருக்க வேண்டும் என்றும் வேண்டினர்.

    இன்று அதிகாலை முதலே புஷ்ய படித்துறையில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போலீசார் பெண்கள் மற்றும் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க கோரி ‘மைக்’கில் எச்சரிக்கை செய்த வண்ணம் செய்தனர்.

    காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். மேலும் படித்துறைகளில் ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தன.

    இதேபோல் கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, டபீர் படித்துறை, மற்றும் காவிரி கரையோரங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கரைகளில் பழங்கள், மலர்களை வைத்து பூஜை செய்து காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதில் திருமணமாகாத கன்னிபெண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா ‘களை’ கட்டியது. காவிரி கரையில் பூஜை செய்து விநாயகரை பெண்கள் வழிபட்டனர். காவிரியின் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலா கட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி துலா கட்டத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். பின்னர் படித்துறையில் படையிலிட்டு, ‘‘ பொங்கி வரும் காவிரியே... எங்களது வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பொங்க செய்வாயாக’’ என்று ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    துலா கட்டத்தில் போலீசாரும், மற்றும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விடாதவாறு பைபர் படகுகளில் சென்று தீயணைப்பு துறையினர் கண்காணித்தனர்.

    சீர்காழி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி திருவாரூர் முள்ளியாறு, ஒடம்போக்கி, கோரையாறு, பாண்டவையாறு, பாமினி ஆற்றின் கரைகளிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டனர்.
    விவசாயிகள் இன்று தாங்கள் தொடங்கும் விவசாயம் நல்ல பலனை தர வேண்டும் என ஆற்றில் குளித்து புத்தாடை அணிந்து விரதத்துடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.
    தமிழ் மாதமாகிய ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையே ‘ஆடி 18’. இதனை ஆடி பெருக்கு எனவும் கூறுவர். பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் மனித இனத்துக்கு பஞ்சம் இல்லாமல் தர வேண்டும் என இயற்கையை வழிபடுவதே இப்பண்டிகையின் நோக்கம்.

    இயற்கை அன்னையை அம்மனாக பாவித்து இம்மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் விழா எடுப்பர். ஆடி மாதத்தில் ஆறு, குளம், ஏரி அனைத்திலும் நீர் வளம் பெருகி இருக்கும். எனவே இம்மாதத்தில் விவசாயத்தை தொடங்குவர். இதனால் தான் ‘ஆடி பட்டம் தேடி விதை’ எனும் பழமொழியும் உண்டானது. விதை போடுவதும், நாற்று நடுவதும் இம்மாதத்தில் நடக்கும்.

    தமிழகத்தின் அனைத்து நீர் வளங்களுக்கும் நன்றி சொல்லி குதுகலமாய் விவசாயத்தை தொடங்கும் இயற்கையோடு இணைந்த தமிழ் சமுகத்தின் இணையற்ற விழா எனலாம். பார்வதி (அம்மன்) தேவிக்கு அரிசியினால் பல வகையான பண்டங்களை தயாரித்து படைத்து பாட்டிசைத்து வணங்குவர்.

    நீர் வளத்தை கொடுக்கும். ஆறுகளை அட்சசையும் மலர்களையும் தூவி வணங்குவர். பெரும்பாலும் இப்பண்டிகை ஆற்றங்கறைகளை ஒட்டி வாழும் மக்களே வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். அதிலும் காவிரி நதி கறை மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தாங்கள் தொடங்கும் விவசாயம் நல்ல பலனை தர வேண்டும் என ஆற்றில் குளித்து புத்தாடை அணிந்து விரதத்துடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.

    மாவுவிளக்கு செய்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்து, மஞ்சள் திரியுடன் விளக்கை ஏற்றி மாவிலையில் வைத்து ஆற்றில் பெண்கள் விடுவர். நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே சேர இவ்வாறு செய்யும் போது ஆற்றில் மிதந்து செல்லும் மாவிவிளக்குகள் காண்பவர்களின் நெஞ்சை மகிழ்விக்கும். 
    காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
    காவிரியை வழிபட்டு அனைத்து நலன் களையும் பெறுவதற்கு இந்த ஆடிப்பெருக்கு தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘கணவன் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும்... தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை வணங்குவார்கள் மணமான பெண்கள்.

    திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். அதோடு, திருமணம் ஆன தினத்தன்று அணிந்து கொண்ட மலர் மாலைகளை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்து, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர்.

    ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் தலைமையில் இவை அனைத்தும் காவிரிக் கரையில் நடைபெறும். சிறுவர்கள் ‘சப்பரத் தட்டி’ எனப்படும் சிறு மரத் தேர்களை உருட்டிக் கொண்டு ஆற்றங்கரையில் விளையாடுவர்.

    விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கிற காவிரிக்கு மங்களப் பொருட்களை அர்ப்பணித்து, பெண்கள் தங்கள் கழுத்திலும், உடன் வந்திருக்கிற ஆண்கள் தங்கள் கைகளிலும் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொள்வார்கள்.

    அன்றைய தினம் பெண்கள் நீராடி விட்டு, புத்தாடை அணிந்து கொள்வர். ஆற்றங்கரையில் ஓரிடத்தை சுத்தம் செய்து விட்டு தீபம் ஏற்றி வைப்பர். அங்கு வாழையிலைகளைப் பரத்துவார்கள். பசுஞ்சாணத்திலோ அல்லது மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வைத்து வாழையிலையில் மங்களப் பொருட்களை வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம், தாலிப்பொட்டு, தேங்காய், கண்ணாடி வளையல்கள், பனையோலையால் ஆன காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, காப்பரிசி, அவல் போன்றவற்றை வைப்பதுண்டு.

    சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை வீட்டில் இருந்தே எடுத்து வந்து வைப்பார்கள். குடும்பத்தில் இருக்கிற அனைவரும் கூடி இருக்கும்போது காவிரித் தாயைப் போற்றி அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். பிறகு, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனம் செய்து விட்டுக் கற்பூரம் காண்பிப்பார்கள். இதே தீபத்தை காவிரிக்கும் காண்பித்து வணங்குவார்கள்.

    அதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, புஷ்பம் போன்றவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர். வாழைமட்டையில் தீபமும் ஏற்றி நீரில் மிதக்க விடுவர்.

    காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

    ஆடிப்பெருக்குக்கு ஏற்றவாறு காவிரி ஆற்றில் வெள்ளம் புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா முன்கூட்டியே களை கட்டிவிட்டது.
    ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று காவிரி பாய்ந்து செல்லும் பகுதிகளில் ஆடிப் பெருக்கு விழா சிறப்பாக நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா ஒப்புக்குத்தான் நடந்ததே தவிர களைகட்டவில்லை. ஏனெனில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை.

    தண்ணீருக்கு பதிலாக பாறைகளும் வெறும் மணலாகவும் காட்சியளித்தது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் காவிரி ஆறு பொங்கி வருகிறது. ஆடிப்பெருக்குக்கு ஏற்றவாறு வெள்ளம் பெருக்கு புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா முன்கூட்டியேகளை கட்டிவிட்டது.

    ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் இடங்களில் முக்கிய இடமாக கருதப்படுவது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை ஆகும். பவானி, காவிரி, அமுத நதி ஆகிய மூன்று நதி கள் சங்கமிக்கும் இடம்தான் பவானி கூடுதுறை.

    இங்கு அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா பவானி கூடுதுறையில் அமர்க்களமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.



    ஈரோடு மாவட்டம் மட்டு மல்லாமல் திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் நாளை அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிகிறார்கள். இவர்கள் பொங்கி வரும் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள். புதுமண தம்பதிகள் தங்களது மணமாலையை ஆற்றில் விட்டு வழிபடுகிறார்கள்.

    சுமங்கலி பெண்கள் தங்கள் வாழ்க்கை நாயகன் நலமுடன் வாழ வேண்டி வணங்கி புது தாலிக்கயிறு அணிவார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு ஏற்ற மணவாளன் கிடைக்க வேண்டியும், திருமண வாழ்க்கைகை கூட வேண்டியும் வழிபடுகிறார்கள்.

    குறிப்பாக விவசாய பெருமக்கள் தங்களின் விவசாய நிலங்களை செ(கொ)ழிக்க வைக்கும் காவிரி தாயை வணங்கி மகிழ்வார்கள். இப்படி நாளை பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழாவை அமர்க்களமாக கொண்டாட ஒரு லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு செல்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். ஆழமான பகுதி யில் பக்தர்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் ஓரமாக எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் ஆற்றில் பரிச லில் சென்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    ஆடி 18 பண்டிகையின்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் காவேரி அம்மனுக்கு தாய்வீட்டு சீதனங்களை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது.
    தமிழ்நாட்டில் காவிரி கரையோரத்தில் அமைந்த முதல் சிவாலயமான தேசநாதேஸ்வரர் கோவில் ஒகேனக்கல்லில் உள்ளது. இந்த கோவில் வளாகத்திற்குள்தான் காவிரி ஆற்றின் சிறப்பை போற்றும் வகையில் காவேரியம்மன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி தாயே அம்மன் வடிவில் இங்கு எழுந்தருளியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

    குருச்சேத்திர போர் முடிந்த பின்னர் போரினால் ஏற்பட்ட பாவங்களை போக்க பஞ்சபாண்டவர்கள் கங்கை நதியில் குளித்தனர். அப்போது பாவங்கள் நீங்க கங்கையில் குளித்தால் மட்டும் போதாது, குடகு மலையில் அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டு கிடக்கும் பொன்னி நதியில் குளிக்க வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினார். அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதியை விடுவிக்க வேண்டி பஞ்சபாண்டவர்கள் விநாயகரை வழிபட்டனர். இதனால் மகிழ்ந்த விநாயகர் காக்கை வடிவில் குடகுமலைக்கு சென்று அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதிநீரை தென்திசை நோக்கி தள்ளிவிட்டார்.

    இந்த பொன்னி நதிநீர் வேகமாக ஓடி ஒகேனக்கல்லில் அஷ்வமேத யாகம் செய்து கொண்டிருந்த பிரம்மாவின் யாக குண்டத்தில் விழுந்து அருவிகளாக துள்ளிக்குதித்தது. தென்னாடு செழிக்க உருவான இந்த நதிக்கு காவிரி என்று அகத்திய மாமுனிவர் பெயர் சூட்டினார். பொன்னி நதி, காவிரி என்று பெயர் பெற்ற இடமான ஒகேனக்கல்லில் ஆற்றங்கரையில் ஒரு சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கத்தை பிரம்மதேவர் தினமும் வழிபட்ட இடம்தான் தற்போது ஒகேனக்கல்லில் தேசநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடமாகும்.

    ஒகேனக்கல் ‘மத்திய ரங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அகத்தியர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடத்தில் 13-ம் நூற்றாண்டில் தேசநாதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. மைசூர் மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் இந்த கோவிலை சிறப்பான முறையில் பராமரித்தனர். காவிரி ஆறு உருவானது தொடர்பான புராணத்தில் விநாயகருக்கு முக்கிய இடம் உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி ‘கணேச தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு குளித்தால் விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தேசநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு பிரம்மா பூஜைகள் செய்து வழிபட்டதாகவும், இதனால் இந்த கோவில் ‘தென்னகத்தின் காசி’ என பொருள்படும் ‘தட்சிணகாசி’ என்றும் அழைக்கப்படுகிறது. தேசநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் காவேரி அம்மனுக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒகேனக்கல் தவிர வேறு எங்கும் காவிரித்தாய்க்கு தனிக்கோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    காவிரி ஆற்றின் பிறப்பிடமான குடகு மலையில் பெண் குழந்தை போன்ற வடிவில் உள்ள காவிரி அம்மன், ஒகேனக்கல்லில் உள்ள கோவிலில் குமரி பெண்ணாக 3½ அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு வந்து வணங்குபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கும், குழந்தை பேறு உள்பட கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பல வகையான தோஷபரிகாரங்கள் மற்றும் கடன் தொந்தரவுகள் நீங்க இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    குருச்சேத்திர போரில் பயன்படுத்திய ஆயுதங்களை பாண்டவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கழுவி பாவங்கள் போக நீராடிய நாள் ஆடி மாதம் 18-ம் நாள் என்று கூறப்படுகிறது. இதனால் ஆடி 18 பண்டிகையின்போது காவேரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா நடக்கிறது. அப்போது காவிரி ஆறு உற்பத்தியாகும் இடமான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு தாய்வீட்டு சீதனமாக அரிசி, பருப்பு, வளையல், புடவை, ரவிக்கை மற்றும் அச்சுவெல்லம் ஆகியவற்றை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. 
    ×