என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகாதசி விரதம்"

    • மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி இந்த பூஜையை செய்யலாம்.
    • ஆமலகி ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர்.

    பெருமாளுக்கு உகந்த ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களை விடவும் மிகவும் புண்ணியம் வாய்ந்தது. ஒருவர் வாழ்நாளில் ஒரே ஒருமுறை ஏகாதசி விரதம் கடைபிடித்தாலும் அவரது வாழ்நாளில் மட்டுமின்றி, அடுத்த பிறவியிலும் கூட அவனுக்கு அது நன்மையை தரும் என்பது நம்பிக்கை.

    மாசி மாதம் வளர்பிறை சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஆமலகி ஏகாதசியாக கொண்டாடுகிறோம். ஆமலகி என்றால் நெல்லிக்கனி என்று அர்த்தம். அதனால் இந்த ஏகாதசி அன்று நாம் நெல்லி மரத்தை வழிபாடு செய்வதன் மூலம் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களும் அழிந்த பிறகு விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்டு பூமியில் விழுந்த ஒரு நீர் துளி தான் நெல்லி மரமாக வளர்ந்தது என்று புராணங்களில் கூறப்படுகிறது.

    அதனால் நெல்லி மரத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் பரிபூரணமாக குடியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நெல்லிக்கனியை தானமாக தருவதன் மூலம் நமக்கு அளவில்லா நன்மைகள் கிடைக்கும். அதே போல் நெல்லிக்கனியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

    அப்படிப்பட்ட நெல்லி மரத்தை இந்த மாசி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி நாளான நாளை(வெள்ளிக்கிழமை) வழிபாடு செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலன்களை தரக் கூடியதாகும். அதே போல் ஒவ்வொரு ஏகாதசியில் பெருமாள் ஒவ்வொரு பொருளிளும் எழுந்தருளி அருள் செய்வதாக ஐதீகம். அப்படி திருமால், நெல்லிக்காய் மரத்தில் எழுந்தருளி வாசம் செய்யும் ஏகாதசி என்பதால் இதற்கு ஆமலகி ஏகாதசி ஆகும். அதனால் தான் இந்த நாளில் நெல்லி மரத்தை பெருமாளாகவும், மகாலட்சுமியாகவும் கருதி பூஜை செய்து, வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.

    வீட்டில் நெல்லி மரம் இல்லை என்றால், நெல்லி மரம் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று பூஜை செய்ய வேண்டும். வீட்டில் நெல்லி மரம் இருந்தால் வீட்டிலேயே இந்த பூஜையை செய்து கொள்ளலாம்.

    இதற்காக நெல்லி மரத்திற்கு அடியில் கூட்டி சுத்தம் செய்துவிட்டு, நெல்லி மரத்தை சுற்றி மஞ்சள் தண்ணீரை தெளித்து விடவும். பிறகு நெல்லி மரத்திற்கு மஞ்சள் சந்தனம் தடவி, குங்கும பொட்டு வைத்து மரத்திற்கு கீழே அரிசிமாவால் சின்னதாக கோலம் போட வேண்டும்.

    கோலப்பொடியை பயன்படுத்தாமல் அரிசி மாவால் கோலம் போட்டுவிட்டு கொஞ்சம் உதிரிபூக்களை எடுத்து அந்த நெல்லி மரத்திற்கு மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி இந்த பூஜையை செய்யலாம்.

     

    கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த பூஜையை செய்துவிட்டு அந்த மரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டில் பழம், பிரசாதம் என்ன வேண்டுமென்றாலும் வைத்து பூஜையை மேற்கொள்ளலாம். இந்த பூஜையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள் 108 ஒரு ரூபாய் நாணயங்கள்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் 108 ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அந்த மரத்திற்கு அடியில் வைத்து மனம் உருகி விஷ்ணு பகவானையும் மகாலட்சுமியும் வேண்டிக் கொண்டால், உங்களுக்கான அருள் ஆசி உடனடியாக கிடைக்கும். இறுதியாக கணவன் மனைவி இருவரும் தம்பதியராக அந்த மரத்திற்கு நமஸ்காரம் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்து இந்த பூஜையை செய்து பூஜை நிறைவடைந்த உடன் பூஜையில் வைத்த பொருட்களை வீட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பூ, பழம், பிரசாதம் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். கிண்ணத்தில் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.

    ஆமலகி ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர். ஒரு பசு தானம் செய்தாலே மிகவும் சிறந்தது என்ற நிலையில், ஆயிரம் பசுக்களை தானம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். கடன் தீரவும் பணப்பிரச்சனை தீரவும் பெருமாள் ஆசியுடன் லட்சுமியின் அருளும் நமக்கு சேர்த்தே தான் கிடைக்க வேண்டும். எனவே அவர்களுக்கே உகந்த ஆமலகி ஏகாதசி நாளில் இந்த வழிபாடு செய்யும் பொழுது அதிக பலனை பெறலாம்.

    குபேரனுக்கே அருள் கொடுத்த நெல்லி

    நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதை குறித்து புராணங்கள் கூறும் தகவல்கள்...

    செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை இழந்து தவித்த போது சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். "நெல்லி மரங்களை நட்டு வளர்த்து விட்டு அவை வளர்ந்ததும் என்னை வந்துப்பார்" என்றார் சிவபெருமான்.

    செல்வத்துக்கும் நெல்லிமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த குபேரன் சிவபெருமானின் கட்டளை என்பதால் எதுவும் பேசாமல் ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை வளர்த்தார். நாள்கள் கடந்து விட்டன. நெல்லி மரங்கள் அனைத்தும் பூ பூத்தன. காய் காய்த்து காய்களெல்லாம் இனித்தன.

    குபேரனின் வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பியது. சூழ்ச்சி செய்து செல்வம் பறித்தவர்கள் அவற்றை எல்லாம் கொண்டு வந்து குபேரனிடம் கொடுத்தார்கள். இழந்த நாடுகள் எல்லாம் திரும்ப கிடைத்தன. குபேரனைவிட பெரிய அரசரெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்டத் தொடங்கினார்கள்.

    குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக் கணைகள் எப்படி இது சாத்தியம். மீண்டும் சிவபெருமானிடம் சென்றார். "நெல்லி மரங்கள் வளர்ந்ததா? இழந்த செல்வம் கிடைத்ததா?" என்றார் சிவபெருமான். "நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த காரியத்தைப் புரிந்துக் கொள்ள முடியவில்லையே" என்றார் குபேரர்.

    நீ வைத்தவை நெல்லி மரங்கள் அல்ல லட்சுமிதேவி. உரிய முறையில் அவற்றுக்கு நீர் ஊற்றினாய். அதனால் செய்த பாவங்கள் தொலைந்து லட்சுமிதேவியின் அருளைப் பெற்றாய்" என்றார் சிவபெருமான்.

    மேலும் ஒருநாள் தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரம். அதனால்தான் இதனை தெய்வீக மரம் என்று சொல்கிறார்கள் என்கின்றன புராணக்கள்.

    இழந்ததை மீட்டு தரும் நெல்லி சாதம் தானம்

    பெருமாளின் அம்சமாக கருதப்படுவது நெல்லிமரம். மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படும் இதற்கு ஹரிபலம் என்றும் பெயருண்டு. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி உணவில் நெல்லிக்காயை உணவில் சேர்ப்பது அவசியம். நெல்லிமரத்தடியின் நிழலில் வழங்கும் தானத்திற்கு பலன் அதிகம். நெல்லி மரத்தை தானம் செய்தாலும் பலன்கள் அதிகம் கிடைக்கும். நெல்லி மரத்தை தானம் செய்வதன் மூலம், ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.

    நெல்லிக்காயை தானம் செய்வதால் நோய்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பல கிடைக்கும். அதை தானம் செய்வதன் மூலம், நபர் செல்வமும் செழிப்பும் பெறலாம். நெல்லிக்காய் தானம் செய்வதன் மூலம், அறிவு பெற்று மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

    வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் நெல்லிக்காயில் செய்த நெல்லிக்காய் சாதம் பிரசாதமாக தயாரித்து கோவிலுக்குச் சென்று அங்குள்ள எளியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் தானம் செய்யுங்கள். நெல்லி சாதம் தானம் செய்ய செய்ய நீங்கள் இழந்தவை யாவும் திரும்ப அடைவீர்கள். உங்களை ஏமாற்றி அடைந்த சொத்துக்கள் கூட திரும்ப கிடைக்கும். தொலைத்த பொருட்கள் உங்களை தேடி தானாக வந்து சேரும். விட்டு சென்ற உறவுகளும், உங்கள் பிரிவின் துயர் நீக்க உங்களை புரிந்து கொண்டு மீண்டும் உங்களை வந்தடைவார்கள். எளிய இந்த தானத்தை பரிகாரமாக ஆறு வாரங்கள் செய்து பாருங்கள், நல்ல பலன்கள் கிட்டும்.

    நெல்லியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. நெல்லிக்காயை உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு, அஜீரண பிரச்சனையையும் குறைக்கும். இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகி சருமத்தில் பொலிவு ஏற்படும்.

    ஆன்மீக ரீதியாக நெல்லி நீரில் குளிப்பதை கங்கையில் நீராடி காசியில் வசித்த புண்ணியத்திற்கு சமம் என்கின்றனர். நெல்லி ஆயுள் விருத்தி தரக்கூடியது அதனால் தான் கோபுர உச்சியில் கலசத்திற்கு கீழே நெல்லி வடிவில் ஒரு கல்லை வைப்பார்கள் அதற்கு ஆமலகம் என்று பெயர்.

    ஞாயிறு, வெள்ளி, அமாவாசை, சஷ்டி, சப்தமி, நவமி திதிகளில் நெல்லிக்கனியை பயன்படுத்தக் கூடாது. நெல்லி மரமானது நேர்மறை எண்ணங்களை நம்மை சுற்றி உண்டாக்க கூடியது. அவ்வாறு நேர்மறை எண்ணங்கள் நம்ம சுற்றி அதிகம் ஓடும்போது நாமும் நல்லதை பற்றியே யோசிப்போம். மேலும் நெல்லி மரம் லட்சுமியின் அம்சம் என்பதால் வீட்டில் வைத்து வளர்த்து வணங்கி வந்தால் செல்வம் அதிகமாக சேரும்.

    லட்சுமி அருள் தரும் தமிழ் மந்திரம்

    நவகிரகங்களில் சுக்கிரனுடைய ஆளுமை பெற்றது நெல்லி. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லிமரத்தை வழிபட்டு வந்தால் ஏற்றம் உண்டாகும் என்கின்றன ஜோதிட நூல்கள். பழனியில் உள்ள திருஆவினன்குடி முருகன் ஆலயத்தின் தல மரம் நெல்லி ஆகும். ஆமலகி ஏகாதசி அன்று நெல்லி மரத்துக்கு பூஜை செய்து கீழக்கண்ட லட்சுமி மந்திரத்தை கூற வேண்டும்.

    அகலகில்லேன் இறையுமென்று

    அலர்மேல் மங்கை உறை மார்பா

    நிகரில் புகழாய் உலகம் மூன்று

    உடையாய் என்னை ஆள்வானே

    நிகரில் அமரர் முனிக்கணங்கள்

    விரும்பும் திருவேங்கடத்தானே

    புகல் ஒன்றில்லா அடியேன் உன்

    அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

    • விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.
    • ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

    மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இ

    ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி. வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன.

    அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.

    தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை :

    * ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து, விரதத்தை துவக்க வேண்டும்.

    * விளக்கேற்றி, பழங்கள், பூக்கள், பஞ்சாமிர்தத்தை கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும். அதோடு தேங்காய், வெற்றிலை பாக்கு, நெல்லிக்காய், கிராம்பு போன்றவற்றையும் படைக்க வேண்டும்.

    * ஏகாதசி விரதம் இருப்பவர் அன்றைய தினத்தில் அரிசி உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    * ஏகாதசி திதி முடியும் வரை விரதத்தை தொடர வேண்டும். ஏகாதசி திதி முடிவதற்கு முன் விரதத்தை முடிக்கக் கூடாது.

    * ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தரையில், புதிய விரிப்புக்கள் விரித்து தான் படுக்க வேண்டும்.

    * மாமிசம், மதுபானங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    * ஏகாதசி அன்று எந்த மரத்தில் இருந்து பூக்களையோ, இலைகளையோ பறிக்கக் கூடாது. இது அமங்களமான செயலாக கருதப்படுகிறது.

    * ஏகாதசி நாளன்று இரவில் உறங்கக் கூடாது. அதிகாலையில் எழுந்தது முதல் திருமாலின் நாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.

    * முழு நாளும் உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உப்பை தவிர்க்க வேண்டும்.

    * மறுநாள் துவாதசி திதியில் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    • ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம்.
    • ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப பழைய காலத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆனி இந்த மூன்று மாதங்களில் இருக்கக் கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழைபொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் வரும். இந்த புது வெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப்பெருக்கு.

    சங்க நூல்களில்பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப்பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    ஆடி 18-ம்பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

    இதனால்தான் இந்த நாட்களில் இது போன்றெல்லாம் செய்வது செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை

    ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும்.

    அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள்,பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது.

    இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணுபற்றிய நூல்களைபடிக்கலாம்.

    இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம்பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

    • ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது.
    • பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி.

    ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது.

    இந்நன்னாளில் விரதம் இருப்போருக்கு திருமாலே பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.

    விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம் என்று உமையவளிடம் பரமசிவனே கூறுகிறார்.

    பல்வேறு புராணங்கள் ஏகாதசி விரதத்தின் பெருமையையும், அதனால் அளப்பரிய நலனைப் பெறலாம் என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன.

    பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி.

    அந்த அமிர்தத்தைப் போன்று விஷ்ணுவின் அருளை நமக்கு அளிக்கக்கூடிய விரதம் ஏகாதசி விரதம்.

    இந்த விரதத்தை எவரெல்லாம் மேற்கொள்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும்.

    அவர்களுக்கு மரண பயமோ நரக வாசமோ இல்லை.

    • ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.
    • பகவான் ஸ்ரீமன் நாராயணனை துதிக்க வேண்டும்.

    மாசி மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை இரண்டிலுமே வரும் ஏகாதசி தனித்துவமானவை. இந்த ஏகாதசிகளில் விரதமிருந்தால் திருமாலின் அருள் பரிபூரணமாகக்கிடைக்கும். வாழும் போதே துன்பங்கள் இன்றி, இன்பமான வாழ்க்கை வாழ வழிசெய்யும். மாசி மாதம் வளர்பிறையில் வரும் ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.

    இந்த ஏகாதசியில் விரதம் இருந்து, நெல்லி மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால், வீட்டில் உள்ள பணம் தொடர்பான பிரச்னைகள் நீங்கி, செல்வச் செழிப்பு ஏற்படும். ஏகாதசி உபவாசம் இருந்து பகவான் ஸ்ரீமன் நாராயணனை துதிக்க வேண்டும். அன்று இந்த பாசுரம் பாடலாம்.

    ``சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்

    சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து

    ஆர்வினவிலும் வாய் திறவாதே

    அந்தகாலம் அடைவதன்முன்னம்

    மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து

    மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி

    ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு

    அரவதண்டத்தில் உய்யலும்ஆமே''.

    • ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான்.
    • ஸ்ரீ ரங்கத்தில் சந்தன மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும்.

    மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இன்று ஸ்ரீ ரங்கத்தில் நம் பெருமாளுக்கு சந்தன மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும்.

    ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி, வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன.

    அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.

    தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள். இந்த பாசுரத்தை சொல்லி வழிபடுங்கள்.

    `துப்புடையாரை அடைவதெல்லாம்

    சோர்விடத்துத் துணையாவ ரென்றே

    ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்

    ஆனைக்குநீ அருள்செய் தமையால்

    எய்ப்புஎன்னை வந்துநலியும்போது

    அங்குஏதும் நானுன்னை நினைக்க

    மாட்டேன்

    அப்போதைக்கு இப்போதே சொல்லி

    வைத்தேன்

    அரங்கத் தரவணைப் பள்ளியானே!'

    • பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அமலாகி ஏகாதசி .
    • ஏகாதசி அன்று விரதம் இருப்பது நிலையான பலனைத் தரும்.

    `அமலாகி' என்றால் நெல்லிக்காய். பத்மபுராணத்தின் படி, நெல்லிக்காய் மரம், விஷ்ணுவுக்கு உரியது. இந்த மரத்தில், ஸ்ரீஹரியும், லட்சுமி தேவியும் வசிக்கிறார்கள். இதன் காரணமாக, அமலாகி ஏகாதசி நாளில், விஷ்ணுவை அம்லா (நெல்லி) மரத்தடியில் அமர்ந்து வழிபடுகின்றனர். பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அமலாகி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இது, "ஆம்லா ஏகாதசி'' என்றும், "ரங்பர்னி ஏகாதசி'' என்றும் அழைக்கப்படுகிறது.

    மார்ச் 20,2024 புதன்கிழமை, அமலாகி ஏகாதசி. ஏகாதசி திதி ஆரம்பம். மார்ச் 20, 2024 மதியம் 12:21 மணிக்கு ஏகாதசி திதி முடிவடைகிறது. அமலாகி ஏகாதசி அன்று விரதம் அனுசரித்து, பகவான் ஸ்ரீமன் நாரயணனை வணங்குவதன் மூலம், அனைத்து பாவங்களில் இருந்தும் விமோசனம் கிடைக்கும். ஏகாதசி அன்று, விரதம் இருப்பது நிலையான பலனைத் தரும்.

    மகாபாரதத்தில் கிருஷ்ணர், யுதிஷ்டிரருக்கு ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். இன்று விரதம் இருந்து, நாளை துவாதசி பாராயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் முழுபலன் கிட்டும்.

    • பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம்.
    • பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

    நித்ய கர்மங்களை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும்.

    ஏகாதசியன்று துளசி இலை பறிக்கலாகாது. ஆதலால் முதல் நாளே பூஜிப்பதற்கு அதை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    மகா விஷ்ணுவுக்கு வேத விதிப்படி பூஜை செய்ய வேண்டும்.

    அன்று சக்தியிருப்பின் நிர்ஜலமாக இருப்பது உத்தமம்.

    பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசமிருப்பது அகமாதமம்.

    பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசமிருப்பது அகமாதமம்.

    சக்தியில்லாவர் கடைசி வழியை பின்பற்றலாம். அன்று எவருக்கும் அன்னதானம் செய்யக்கூடாது. பகலில் தூங்கக்கூடாது.

    இரவில் பகவத் பஜனை அல்லது புண்ய கதாச்ரவணம் முதலியவைகளால் கண்விழிக்க வேண்டும்.

    கோபம், பரநிந்தை, க்ரூரமான வார்த்தை, கலஹம், தாம்பூலம், சந்தனம், மாலை, கண்ணாடி பார்த்தல், ஸ்த்ரீ ஸங்கம் முதலியவைகளை விட வேண்டும்.

    எப்போதும் அவர் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.

    துவாதசியன்று காலைக்கடனை முடித்து பகவத் பூஜை செய்ய வேண்டும்.

    ஓர் அதிதிக்கு அன்னமளித்து நாம் பூஜிக்க வேண்டும்.

    அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் இவைகளை அவசியம் பூஜிக்க வேண்டும்.

    இங்ஙனம் ஓர் பக்ஷத்திற் கோர்முறை ஏகாதசி உபவாசமிருந்தால் தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    பாபம் அகலும், சந்ததி, செல்வம் பெருகும், சுவர்க்கம் கிட்டும். மனம் நிர்மலமாகும். ஞானம் சுரக்கும். மோட்ச நந்தம் பெறுவர்.

    ஏகாதசி விரதம் அன்று செப்புக் கிண்ணியில் ஜலம் வைத்து அதில் துளசி தளம் போட்டு வைத்து நீர் மட்டும் பருகுவார்கள்.

    ஒரு சிலர் "நிர்ஜலோபவாசம்" அதாவது ஜலமின்றி உமி நீர்க் கூட பருகாமல் இருப்பதுண்டு.

    ஏகாதசி விரதம் எல்லோருக்கும், முக்கியமாக மத்வமதஸ்தர்கள் வெகு சிறப்பாக அனுஷ்டானம் செய்வார்.

    "ஏகாதசி மரணம், துவாதசி தகனம்" என்ற பழமொழிப்படி ஏகாதசி திதியில் ஒருவன் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண் ணிய பலமாக கூறுகிறது.

    ஏகாதசி உபவாச மிருந்து, துவாதசி அதிகாலையில் நீராடி இறைவனைப் பூஜித்து ஒருவருக்கு வஸ்திரம், அன்னதானம், தாம்பூலம், தட்சிணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கிறது.

    • பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.
    • தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு “ஏகாதசி” என்று பெயரிட்டார்.

    "முரன்" என்றொரு அசுரன் இருந்தான்.

    தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

    அதோடு, எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான்.

    முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரண் அடைந்தார்.

    அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன், தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார்.

    அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார்.

    தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.

    பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

    சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.

    பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.

    அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக, தன் உடைவாளை உருவினான்.

    அப்போது, திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள்.

    முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினாள்.

    பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.

    தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு "ஏகாதசி" என்று பெயரிட்டார்.

    மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு "உற்பத்தி ஏகாதசி" என்று அருளினார்.

    • இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது.
    • அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

    இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது.

    அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

    கம்பம் என்ற நகரில் வைகானசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான்.

    ஒரு நாள், கனவில் அவனுடைய பெற்றோர்கள் நரகத்தில் இருப்பது போலவும், அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவனிடம் அழுது முறையிடுவது போலவும் கண்டான்.

    இதற்கு ஏதாவது பரிகாரம் உடனே செய்ய வேண்டும் என வைகானசன் முடிவு செய்தான்.

    காட்டில் கடும் தவம் புரிந்து வந்த முனிபுங்கர் என்ற முனிவரைச் சந்தித்து அவன் ஆலோசனைக் கேட்டான்.

    தன்னுடைய ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்த முனிவர் வைகானசனிடம், "நீ, உன் மனைவி, குழந்தைகளுடன் ஏகாதசி விரதமிருந்து அதை உன் மூதாதையர்களுக்க அர்ப்பணம் செய்" என்று ஆலோசனை கூறினார்.

    அவனும், அவ்வாறே செய்ய, அதன் பலனாக, அவனுடைய பெற்றோர்கள் நரகத்திலிருந்து விடுபட்டு மைந்தனை வாழ்த்தி, சொர்க்கம் புகுந்தனர்.

    அதனால்தான், பெற்றோரை இழந்தவர்கள், இவ்விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை அவர்களுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

    அமாவாசையிலிருந்தும், பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி. அதற்கடுத்த நாள் ஏகாதசி.

    ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி.

    • பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.
    • ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது

    ஏகாதசி விரதமிருப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமியன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

    ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.

    அதே போல, ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன.

    அதன்பின், ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி, சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.

    பாரணையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும்.

    பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.

    ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது. எனவே, தேவையான துளசி இலையை, முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    • அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.
    • மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும், முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர்.

    சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.

    சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறினார் எனில், கூறுவதற்கு வேறு சிறப்பு இல்லை.

    கிருஷ்ண பட்சத்தில் வரும் உற்பத்தி ஏகாதசியைப் போல, சுக்ல பட்சத்தில் வரும் மற்றொரு ஏகாதசி, "மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.

    வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.

    திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும்.

    அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.

    திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, திருமால் கோவிலுக்கோ அல்லது வீட்டிலேயோ திருமாலின் படத்தின் முன் அமர்ந்தோ, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும்.

    பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.

    அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.

    மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    ×