search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ekadasi Fasting"

    • பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அமலாகி ஏகாதசி .
    • ஏகாதசி அன்று விரதம் இருப்பது நிலையான பலனைத் தரும்.

    `அமலாகி' என்றால் நெல்லிக்காய். பத்மபுராணத்தின் படி, நெல்லிக்காய் மரம், விஷ்ணுவுக்கு உரியது. இந்த மரத்தில், ஸ்ரீஹரியும், லட்சுமி தேவியும் வசிக்கிறார்கள். இதன் காரணமாக, அமலாகி ஏகாதசி நாளில், விஷ்ணுவை அம்லா (நெல்லி) மரத்தடியில் அமர்ந்து வழிபடுகின்றனர். பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அமலாகி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இது, "ஆம்லா ஏகாதசி'' என்றும், "ரங்பர்னி ஏகாதசி'' என்றும் அழைக்கப்படுகிறது.

    மார்ச் 20,2024 புதன்கிழமை, அமலாகி ஏகாதசி. ஏகாதசி திதி ஆரம்பம். மார்ச் 20, 2024 மதியம் 12:21 மணிக்கு ஏகாதசி திதி முடிவடைகிறது. அமலாகி ஏகாதசி அன்று விரதம் அனுசரித்து, பகவான் ஸ்ரீமன் நாரயணனை வணங்குவதன் மூலம், அனைத்து பாவங்களில் இருந்தும் விமோசனம் கிடைக்கும். ஏகாதசி அன்று, விரதம் இருப்பது நிலையான பலனைத் தரும்.

    மகாபாரதத்தில் கிருஷ்ணர், யுதிஷ்டிரருக்கு ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். இன்று விரதம் இருந்து, நாளை துவாதசி பாராயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் முழுபலன் கிட்டும்.

    • ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு.
    • திருமாலை வழிபட்டால் குறையாத செல்வமும், வெற்றிகளும் தேடி வரும்.

    ஒவ்வொரு மாதத்தில் வரும் ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. அது போல் மார்கழி - தை மாதத்தில் தேய்பிறை திதியில் வரும் ஏகாதசிக்கு சுபலா ஏகாதசி என்று பெயர். இந்த நாளில் விரதம் இருந்து திருமாலை வழிபட்டால் குறையாத செல்வ வளமும், வெற்றிகளும் தேடி வரும். முழு உபவாசம் இருந்து, அதற்குரிய முறையில் ஏகாதசி விரதம் இருந்தால் நாம் நினைக்கும் காரியங்கள் நினைத்தபடி நடக்கும்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை :

    * ஏகாதசி விரதம் இருப்பவர் அன்றைய தினத்தில் அரிசி உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    * ஏகாதசி திதி முடியும் வரை விரதத்தை தொடர வேண்டும். ஏகாதசி திதி முடிவதற்கு முன் விரதத்தை முடிக்கக் கூடாது.

    * ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தரையில், புதிய விரிப்புக்கள் விரித்து தான் படுக்க வேண்டும்.

    * மாமிசம், மதுபானங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    * ஏகாதசி அன்று எந்த மரத்தில் இருந்து பூக்களையோ, இலைகளையோ பறிக்கக் கூடாது. இது அமங்களமான செயலாக கருதப்படுகிறது.

    * ஏகாதசி அன்ற அதிகாலையில் எழுந்து, குளித்து, விரதத்தை துவக்க வேண்டும்.

    * விளக்கேற்றி, பழங்கள், பூக்கள், பஞ்சாமிர்தத்தை கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும். அதோடு தேங்காய், வெற்றிலை பாக்கு, நெல்லிக்காய், கிராம்பு போன்றவற்றையும் படைக்க வேண்டும்.

    * ஏகாதசி நாளன்று இரவில் உறங்கக் கூடாது. அதிகாலையில் எழுந்தது முதல் திருமாலின் நாமங்களீன் உச்சரித்தபடி இருக்க வேண்டும்.

    * முழு நாளும் உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உப்பை தவிர்க்க வேண்டும்.

    * மறுநாள் துவாதசி திதியில் யாராவது ஒருவருக்கு அன்ன தானம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    ×