search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தர்கள்"

    • ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர்.
    • சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார்கள்.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார். அதன்படி, 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம். மேலும், அந்த சித்தர்கள் எங்கு குடிகொண்டு உள்ளனர் என்பதை இங்கு விரிவாக காண்போம்.

    அஸ்வினி - காலங்கி நாதர் சித்தர் இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய கோவில்களில் உள்ளது.

    பரணி -போகர் சித்தர் இவருக்கு பழனி முருகன் கோவிலில் தனி சமாதி உள்ளது.

    கார்த்திகை - ரோமரிஷி சித்தர் இவருக்கு ஜீவசமாதி இல்லை. (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என கூறப்படுகிறது).

    ரோகிணி - மச்சமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

    மிருகசீரிடம் - பாம்பாட்டி சித்தர் மற்றும் சட்டமுனி சித்தர். பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் ஜீவசமாதி ஸ்ரீரங்கத்தில் உள்ளது.

    திருவாதிரை - இடைக்காடர் இவரது ஜீவசமாதி திருவண்ணாமலையில் உள்ளது.

    புனர்பூசம் - தன்வந்தரி சித்தர் இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவசமாதி ஆனவர்.

    பூசம் - கமலமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருவாரூரில் உள்ளது.

    ஆயில்யம்- அகத்தியர் சித்தர் இவரது ஒளிவட்டம் குற்றாலம் பொதிகை மலையில் உள்ளது.

    மகம் - சிவ வாக்கிய சித்தர் இவரது ஜீவசமாதி கும்பகோணத்தில் உள்ளது.

    பூரம் - ராமதேவ சித்தர் இவரது ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை.

    உத்திரம் - காகபுஜண்டர் இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

    ஹஸ்தம் - கருவூரார் சித்தர் இவரது சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

    சித்திரை - புண்ணாக்கீசர் சித்தர் நண்ணாசேர் என்ற இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.

    சுவாதி - புலிப்பாணி சித்தர் இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

    விசாகம் - நந்தீசர் சித்தர் மற்றும் குதம்பை சித்தர் நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

    அனுஷம் - வால்மீகி சித்தர் இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

    கேட்டை - பகவான் வியாசருக்கு உரிய நட்சத்திரம் இவரை நினைத்தாலே போதும். அந்த இடம் வருவார்.

    மூலம் - பதஞ்சலி சித்தர் இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

    பூராடம் - ராமேதவர் சித்தர் இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

    உத்திராடம் - சித்தபிரான் கொங்கணர் இவர் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் திருப்பதி ஆகும்.

    திருவோணம் - தட்சிணாமூர்த்தி சித்தர் இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

    அவிட்டம் - திருமூலர் சித்தர் இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

    சதயம் - கவுபாலர் சித்தர் இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

    பூரட்டாதி - ஜோதிமுனி சித்தர் இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

    உத்திரட்டாதி - டமரகர் சித்தர் இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

    ரேவதி - சுந்தரானந்தர் சித்தர் இவரது ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

    எனவே, 27 நட்சத்திரக்காரர்களும் அவரவர்களுக்குரிய ஜீவசமாதி இடங்களுக்கு சென்று வணங்கினால் சித்தர்களின் அருளை முழுமையாக பெற்றலாம்.

    • ஆனால் இன்றைய இளைய சமுதாயத்திடம் இந்த குணங்களைப் பார்ப்பது அரிதாகி விட்டது.
    • பல நல்ல செயல்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    வாழும் தெய்வங்கள்!

    சிறு வயதில் நாம் வளர்க்கப்படும் விதம், வாழும் சூழ்நிலை கொண்டே ஒருவரது மன இயல்பு அமையும்.

    இதனை நன்கு அறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.

    எனவே தான் விடியற்காலையில் எழ வேண்டும். குளித்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஸ்லோகம், பக்திப் பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டும்.

    அதனை காலை, மாலை சொல்ல வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும். தீயதினை ஒதுக்க வேண்டும் என வாழ்க்கை முறைகளை கட்டுப்பாடு என்ற பெயரில் கெடு பிடியாய் வைத்திருந்தனர்.

    இன்றைக்கு நாம் பார்க்கிற பெரியோர்களிடம் நிதானம், பண்பு இருக்கின்றது. எதிலும் ஒரு நியாயம் இருக்கின்றது.

    ஆனால் இன்றைய இளைய சமுதாயத்திடம் இந்த குணங்களைப் பார்ப்பது அரிதாகி விடுமோ என்ற அச்சம் இருக்கின்றது.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என, ஒருவர் இவர்களிடம் கட்டுப்பட்டால் தான் வாழ்க்கை சிதறி அழியாமல் ஒருவழிப்படும், ஒழுக்கம் வரும்.

    தனி மனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கமாக மாறும். ஒழுக்கமான சமுதாயம் என்பது பூமியில் சொர்க்கம். இன்று சமுதாயம் வன்முறையாய் மாறி இருப்பதன் காரணமே தனி மனித ஒழுக்கமின்மைதான்.

    நாட்டில் வன்முறைகளும், பொய்களும், தவறுகளும் கூடிக் கொண்டே தான் இருக்கின்றது. ஆயினும் உலகம் நன்கு இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

    பல நல்ல செயல்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. காரணம் ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாத நல்ல சக்திகளும், கண்ணுக்குத் தெரியும் நல்ல சக்திகளும் ஒவ்வொரு தனி மனிதனையும் அதன் மூலம் சமுதாயத்தினையும் நல்வழி படுத்திக் கொண்டிருக்கின்றன.

    இச்சக்திகளை நாம் சித்தர்கள் எனலாம், மகான்கள் எனலாம், அவதார பிறப்புகள் எனலாம், யோகிகள் எனலாம், வாழும் தெய்வங்கள் எனலாம்.

    எந்த ஆரவாரமும் இன்றி இவர்கள் மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருக்கின்றார்கள். பதிலுக்கு இவர்களுக்கு நம்மிடமிருந்து எதுவுமே தேவையில்லை.

    அத்தகு கருணையும், அன்பும் மனித சமுதாயத்தின் மீது இவர்களுக்கு உண்டு. இதுவே இன்றும் நாம் இந்த அளவாவது வாழ்ந்து கொண்டிருப்பதன் ரகசியம்.

    'தெய்வங்கள் மனிதர்களாகத் தோன்றி அவ்வப்போது நிலை தடுமாறும் மக்களை நல்வழிப்படுத்துவார்கள். இதற்கு உதாரணம் தான் ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும்'

    சாமி, மகான்கள், சித்தர்கள் எல்லோரும் நாம் முழு முனைப்பாய் முறையான வேண்டுதல்களை வைத்தால் சரியானவற்றைச் செய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நல்வழியில் நற்சிந்தனையில் செயல்படுவோம்.

    • சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி.
    • சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம்.

    சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப்படுகிறது. சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப்படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.

    இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.

    அகத்தியர் அருளிய "அகத்திய பூரண சூத்திரம்" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப்பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

    பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு

    பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக

    ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்

    இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து

    மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி

    மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு

    தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்

    சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.

    - அகத்தியர்.


    நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா

    நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது

    சொல்லந்த மானகுரு நாதன்றானும்

    சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு

    நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா

    நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு

    சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா

    தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.

    - அகத்தியர்.

    சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப்படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம்.

    இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

    • சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகவும், அதிசயம் பல நடந்த கோவிலாகவும் கருதப்பட்டு வருகிறது.
    • கோவிலில் திருப்பணிகள், கட்டுமான பணிகளை உடனே ஆரம்பித்து விரைவில் முடிக்க ஆவண செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செ யலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் அருகே நெடார் ஆலங்குடி கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரம்மபுரீ ஸ்வரர், நித்திய கல்யாணி அம்பாள் சன்னதிகள் உள்ளன.

    இக்கோவில் முதன்மை திருக்கோயில் என்ற வகைபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பா ட்டில் உள்ளதுஇக்கோவிலில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது.

    சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகவும், அதிசயம் பல நடந்த கோவிலாகவும் மக்களிடையே கருதப்பட்டு வருகிறது.

    ஆனால், தற்போது இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரை இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதுபோ ன்ற கோவில்களை அதன் பழமை மாறாது காப்பது அரசின் கடமையாகும்.

    இக்கோவிலை புதுப்பிப்ப தற்கும், திருப்பணிகள் செய்வதற்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    எனவே, அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு கோவிலில் திருப்பணிகள், கட்டுமான பணிகளை உடனே ஆரம்பித்து விரைவில் முடிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×