search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman police"

    • பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
    • போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..

    ஆவடி:

    ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரியும் சசிகலா, போதைப் பொருளுக்கு எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றை அவரே அழகாக பாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.

    பெண் போலீஸ் எழுதி பாடிய பாடலின் ஒரு சில வரிகள் வருமாறு:

    உனக்கும் வேணா, எனக்கும் வேணாம் போதை தானுங்க... ஒன்னா சேர்ந்து ஓரம் கட்ட சேர்ந்து பாடுங்க.

    போதையில்லா மேடையிலே நடனம் ஆடுங்க.. வாழ்க்கை ஒரு வீணையப்பா பார்த்து வாசிங்க.

    கஞ்சாவத்தான் நஞ்சாகத்தான் எண்ணிப்பாருங்க...

    கஞ்சா போதையைத்தான் கைவிடனும் தம்பி.. குடும்பம் இருக்குதுப்பா உங்களைத்தான் நம்பி..

    போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..

    • ரூ.1.5 லட்சம் மோசடி செய்த பெண் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த பெண் போலீஸ் சேர்மக்கனி அறிமுகம் ஆனார்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே சத்திரப்பட்டி பெரிய கொல்லம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் லதா. இவருக்கு கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த பெண் போலீஸ் சேர்மக்கனி அறிமுகம் ஆனார்.

    இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் பேறுகால விடுப்பில் இருப்பதாகவும், அதனால் லதாவின் தங்கை நடத்தி வரும் தீப்பெட்டி ஆபீசை லீசுக்கு தருமாறும் லதாவிடம் சேர்மக்கனி கேட்டார். லதாவும் அதற்கு ஏற்பாடு செய்தார்.

    லீசுக்கான தொகையை சேர்மக்கனி சரியாக கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவசர தேவைக்கு ரூ.1.5 லட்சம் தேவைப்படுவதாக கேட்டு வாங்கினார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் செக் ஒன்றை சேர்மக்கனி கொடுத்தார்.

    ஆனால் அந்த காசோலை வங்கியில் இருந்து திரும்ப வந்தது. விசாரணையில் அந்த காசோலை வேறு ஒருவருடையது என தெரியவந்தது. இதனால் மீண்டும் சேர்மக்கனியிடம் பணத்தை தருமாறு லதா கேட்டார்.

    அப்போது பணம்கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதுகுறித்து சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லதா வழக்கு தொடர்ந்தார்.

    கோர்ட்டு உத்தரவுப்படி சாத்தூர் தாலுகா போலீசார் பெண் போலீஸ் சேர்மக்கனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் போலீசாரின் திறமைகளை பறை சாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
    • புதுவை மாநில காவல் துறை சார்பில் கடலோரக்காவல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் மற்றும் போலீசார் வரவேற்றனர்.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு போலீஸ் துறையில் பெண் போலீசார் கால் தடம் பதித்து 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதையொட்டி பெண் போலீசாரின் திறமைகளை பறை சாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னையில் இருந்து பாய் மர படகு மூலம் புறப்பட்டு பழவேற்காடு வழியாக கோடியக்கரை வரை சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் பயண நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் கடந்த 10-ந் தேதி தொடங்கியது. 1,000 கி.மீ. தொலைவிலான இந்த பயணத்தை 4 பாய்மர படகுகளில் 30 பெண் போலீசார் மேற்கொண்டனர். இந்த பாய்மர படகு பயணத்தில் பெண் போலீஸ் உயரதிகாரிகளான கூடுதல் டி.ஜி.பி.பாலநாகதேவி, ஐ.ஜி.க்கள் மகேஸ்வரி, பவானீஸ்வரி, டி.ஐ.ஜி. கயல்வழி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கோடியக்கரை சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பினர்.

    இந்நிலையில் நேற்று காலை புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். அவர்களை புதுவை மாநில காவல் துறை சார்பில் கடலோரக்காவல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் மற்றும் போலீசார் வரவேற்றனர். பின்னர் அந்த குழுவினர் இங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை துறைமுகம் சென்றடைகின்றனர். 

    • ஊர்க்காவல் படைவீரர் தேர்வில் வெற்றி பெற்று ஊர்க்காவல் படைவீரராக பணியில் சேர்ந்தார்.
    • ஆரம்பத்தில் பயிற்சி சிரமமாக இருந்தாலும் பாடங்களைப் படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்தது என்றார்.

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ்துறையில் கடந்த 2022-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 382 போலீசாருக்கு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பல்வேறு பயிற்சிகள் பெற்ற போலீசாருக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் போலீஸ் நிர்வாகம், செயல்பாடுகள், சிறப்பு சட்டங்கள் ஆகிய 3 பிரிவுகளில் ராஜேஸ்வரி என்ற பெண் போலீஸ் சிறப்பிடம் பிடித்தார். அதோடு பெஸ்ட் இன் இன்டோர் என்ற பரிசையும் ராஜேஸ்வரி வென்றார்.

    மேலும் பயிற்சி பெற்றவர்களில் பெஸ்ட் ஆல் ரவுண்டராக ராஜேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கிடையே தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்ட பிறகும் போராடி ராஜேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவை முத்திரையர் பாளையம் சாணரபேட்டை புதுதெருவை சேர்ந்த ராஜேஸ்வரி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படைவீரர் தேர்வுக்கு விண்ணப்பித்தார்.

    எஸ்.எஸ்.எல்.சி. முடித்து டிப்ளமோ படித்திருந்த ராஜேஸ்வரிக்கு போலீஸ் பணிக்கு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் நிராகரிக்கப்பட்டார். ஆனாலும் ஊர்க்காவல் படைவீரர் தேர்வில் வெற்றி பெற்று ஊர்க்காவல் படைவீரராக பணியில் சேர்ந்தார்.

    அதோடு சென்னை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த ராஜேஸ்வரி தனது கல்வித்தகுதி பிளஸ்-2 வுக்கு சமமானது என தீர்ப்பும் பெற்றார். ஆனால் தீர்ப்புக்கு முன்பு போலீஸ் பணிக்கான தேர்வு முடிந்துவிட்டது. இருப்பினும் மனம் தளராத ராஜலட்சுமி 2015 முதல் 2022-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றினார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்க ராஜேஸ்வரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற ராஜேஸ்வரி கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்று பெஸ்ட் ஆல் ரவுண்டர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

    இவரது கணவர் செந்தில் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

    ஊர்க்காவல் படையில் இருந்த போது பல்நோக்கு பணியாளர் பணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போலீசில் சேர வேண்டும் என்ற வைராக்கியத்தில் அந்த வாய்ப்பை உதறினேன். ஆரம்பத்தில் பயிற்சி சிரமமாக இருந்தாலும் பாடங்களைப் படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்தது என்றார். 

    • விருதுநகர் அருகே பெண் போலீசை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • பழைய பஸ் நிலையம் தாய்மார்கள் பாலூட்டும் அறையில் ஒரு வாலிபர் படுத்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் லட்சுமிநகரைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 21). இவர் அதிகாலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு தாய்மார்கள் பாலூட்டும் அறையில் ஆலங்குளம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (26) என்ற வாலிபர் படுத்திருந்தார். அதைப்பார்த்த சிவானந்தம் வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    அப்போது அங்கு வந்த பெண் போலீஸ் ஒருவரும் அவரை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் ரஞ்சித் அவர்கள் இருவரையும் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். மேலும் பாலூட்டும் அறையின் கண்ணாடியை உடைத்து சிவானந்தத்தையும் அடித்து உதைத்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ்நிலையத்தில் சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டார்.

    • உமா மகேஸ்வரி ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்
    • கயத்தாறு தெற்கு கோனார் கோட்டைப்புதூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    நெல்லை:

    பாளை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் பாளை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

    பெண் காவலர்

    இவரது மனைவி உமா மகேஸ்வரி.ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.கடந்த ஒரு வருடமாக உமா மகேஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கயத்தாறு தெற்கு கோனார் கோட்டைப்புதூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    தற்கொலை

    இந்நிலையில் இன்று காலை உமாமகேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தும் சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை க்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் போலீஸ் இளவரசி குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார்.
    • பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    வேலூர்:

    வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தலைமை பெண் காவலராக வேலை செய்பவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த போது போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளி கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டு இருந்தார்.

    இந்த சத்தத்தை கேட்ட இளவரசி அவரது அருகில் சென்று பார்த்தார். அப்போது பெண் ஒருவர் பிரசவ வலியால் அழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெண்ணுடன் 6 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று இருந்தது.

    இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு வந்த இளவரசி அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் பெண் போலீஸ் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். இதுகுறித்து பெண் கூறியதாவது:-

    திருமணம் ஆன சில மாதங்களில் கணவர் தன்னை விட்டு சென்றதாகவும், தனது அண்ணன்கள் பிச்சை எடுத்து பணம் தர வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார். இதனால் இப்பகுதியில் பிச்சை எடுத்து வருவதாக கூறினார்.

    பெண் போலீஸ் இளவரசி குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார். பிச்சைக்கார பெண்ணிற்கு போலீசார் பிரசவம் பார்த்த சம்பவம் வேலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    நெல்லை மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாரை ஆபாசமாக படம் எடுத்த வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரி கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது30). இவர் கயத்தாறில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நடராஜனுக்கும், அவரது மனைவி முருகம்மாள் (29) என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் தனது தாய் வீட்டில் வசித்து வரும் முருகம்மாள், தனது கணவர் மீது பாளை தாலுகா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் மகளிர் போலீசார், நடராஜன் மற்றும் அவரது மனைவியை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது தனது நகைகளை கணவர் நடராஜன் அடமானம் வைத்துள்ளதாக முருகம்மாள் புகார் தெரிவித்தார். அதனை மீட்டு மனைவியிடம் வழங்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் நடராஜன் மனைவியின் நகைகளை மீட்டு கொடுக்கவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

    அப்போது தன்னை செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளதாக போலீசில் முருகம்மாள் தெரிவித்தார். இதையடுத்து நடராஜனின் செல்போனை வாங்கி மகளிர் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன.

    மேலும் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசாரை, அவர்களுக்கே தெரியாமல் மோசமான கோணங்களில் படம் எடுத்து வைத்திருந்தார். போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த போது பெண் போலீசாரை அவர் தனது செல்போனில் ரகசிய மாக படம் எடுத்துள்ளார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு பாளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ஆபாச படங்கள் வைத்திருந்தது, பெண் போலீசாரை அனுமதி இல்லாமல் செல்போனில் படம் பிடித்தது ஆகிய பிரிவின் கீழ் நடராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். 

    கொருக்குப்பேட்டையில் போலீஸ் நிலையத்தில் சென்னையில் உறவினர்கள் யாரும் இல்லாததால் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலேயே நடத்தப்பட்டது.
    ராயபுரம்:

    சென்னை கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி என்ற பெண் போலீஸ் 2½ ஆண்டாக பணியாற்றி வருகிறார்.

    இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. 2008-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பணியாற்றிய இவர் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கருத்தரித்த மகாலட்சுமி. வளைகாப்பு நிகழ்ச்சி தனக்கு நடத் தப்படுமா? என்ற கவலையில் இருந்துள்ளார். உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லாததால் வெளியூரில் இருந்து உறவினர்களை வரவழைக்க விரும்பவில்லை.

    குழந்தை பிரசவத்துக்கு தாய் வீட்டிற்கு செல்லும் முன் நடத்தப்படும் வளைகாப்பு நடைபெறுமா என்ற மன உளச்சலில் சக பெண் போலீசாரிடம் கூறி வருத்தம் அடைந்தார்.

    இதுபற்றி பெண் போலீசார் சக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மகாலட்சுமிக்கு எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பிரசவத்துக்கு செல்லும் முன் வளைகாப்பு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலேயே நடத்த தடபுடலான ஏற்பாடு செய்யப்பட்டது.

    குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி, சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் மோகன் ஆகியோர் தலைமையில் சீமந்த விழாவை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமியையும் அவரது கணவரையும் அமர வைத்து மாலை அணிவித்து சம்பிரதாய முறைகளை செய்தனர்.

    பூ, குங்குமம் வைத்து வளையல்கள் கைகளில் பூட்டப்பட்டு மகாலட்சுமியை மணப்பெண் போல ஜோடித்தனர். பெண் காவலர்கள் மட்டுமின்றி ஆண் காவலர்களும் நிலையத்தில் பணிபுரிந்த சக ஊழியர்கள் அனைவரும் சீர்வரிசை தட்டுகளுடன் 5 வகை சாதம் கலந்து நலங்கு வைத்து விமரிசையாக கொண்டாடினர்.

    போலீசாரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களை கூறினர். பெண் காவலர் மகாலட்சுமியுடன் ஒவ்வொருவரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    பொதுவாக போலீஸ் நிலையத்தில் காதல் திருமணங்களும், காதல் ஜோடியை இணைத்து வைக்கும் சம்பவங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஒன்று சேர்ந்து வித்தியாசமாக தன்னுடன் பணிபுரியும் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடத்துவதை காட்டிலும் சிறப்பாக அமைந்திருந்தது.
    பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PollachiAbusecase
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் ராதிகா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

    பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டுக்கு சாதாரண உடையில் சென்று விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற விதிகளை காவல் துறையினர் பின்பற்றவில்லை.

    புதிதாக வெளியான நான்கு வீடியோக்கள் தொடர்பாக தனி தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை சி.பி.ஐ. பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #PollachiAbusecase
    திருச்சியில் பெண் போலீஸ் கர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆயுதப்படை அலுவலகம் உள்ளது. இங்கு போலீசாக தாரணி (22) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஆயுதப்படை அலுவலகத்தில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அப்போது அவரது அறைக்கு தற்செயலாக சென்ற மற்றொரு பெண்போலீஸ் தாரணி வி‌ஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பெண் போலீஸ் தாரணி தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே கடந்த 10 நாட்களில் எடமலைப்பட்டிபுதூர் பட்டாலியனில் வேலை பார்த்த முத்து என்ற போலீஸ்காரர் அலுவலகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தார். திருச்சி பெண்கள் சிறை வார்டன் செந்தமிழ்செல்வி, காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தார். இந்தநிலையில் தாரணி தற்கொலைக்கு முயன்றது திருச்சி போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து ஆயுதப்படை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தாரணிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. அவர் கர்ப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த அவர் மேலும் 4 நாட்கள் கூடுதலாக மருத்துவ விடுப்பு நீட்டிப்பு செய்துள்ளார்.

    விடுப்பு முடிந்ததும் நேற்று ஆயுதப்படை அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விடுப்பு நீட்டித்தது குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தாரணி கர்ப்பமடைந்தது குறித்து தெரிவித்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் விடுப்பை நீட்டித்ததாகவும், அதற்கான மருத்துவ சான்றிதழ் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தாரணி கர்ப்பம் அடைந்தது குறித்து கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதில் ஏற்பட்ட மனஉளைச்சலில் தான் தாரணி அங்கிருந்த கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாக கூறப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்பாக ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜிடம் விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே ஆயுதப்படை, போலீஸ் நிலையங்களில் பெண் போலீசாருக்கு சில போலீசார் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவதூறாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக புதிதாக திருமணமாகிய பெண் போலீசாரிடம் ஏட்டுக்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிண்டலாக பாலியல் பேச்சு பேசி அருவருப்பாக நடந்து கொள்வதாக பெண் போலீசார் புலம்புகிறார்கள்.

    சில பெண் போலீசார் இதை தவறாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் வயது குறைந்த சில பெண் போலீசார் இதுபோன்ற பாலியல் கிண்டல் பேச்சுக்களைகேட்டு மனம் உடைந்து போகிறார்கள். இது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் போலீசார் வட்டாரத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. #tamilnews
    பாகூரில் குடும்ப தகராறில் பெண் போலீஸ் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

    பாகூர்:

    விழுப்புரம் அருகே வெள்ளையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது35). இவர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பாகூரை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (41) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே வெங்கடேச பெருமாளுக்கும், சாந்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். சாந்தி சோரியாங்குப்பத்தில் உள்ள தனது அக்கா சாத்தகி வீட்டில் தங்கி போலீஸ் வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே வெங்கடேசப்பெருமாள் மனைவியிடம் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் வெங்கடேசப்பெருமாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனை அறிந்த சாந்தி நேற்று தனது அக்காள் சாத்தகி மற்றும் அக்காள் கணவர் சிவானந்தம் ஆகியோருடன் பாகூரில் உள்ள வெங்கடேசபெருமாள் வீட்டுக்கு வந்தார். அங்கு வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி 2-வது திருமணம் செய்யலாம் என்று அவர்கள் வெங்கடேச பெருமாளிடம் தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மாறிமாறிக் தாக்கி கொண்டனர். வெங்கடேச பெருமாளுக்கு ஆதரவாக அவரது தங்கை புவனேஸ்வரி மற்றும் உறவினர்கள் குமாரவேலு, ராம்கி, இந்திரா ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் வெங்கடேசபெருமாள் தரப்பினர் ஆத்திரம் அடைந்து சாந்தி, அவரது அக்காள் சாத்தகி மற்றும் அவரது கணவர் சிவானந்தம் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதுபோல சாந்தி தரப்பினர் தாக்கியதில் வெங்கடேசப்பெருமாள், குமாரவேலு, புவனேஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து இருதரப்பினரும் பாகூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வீரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி ஆகியோர் விசாரணை நடத்தி இருதரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்தனர். மேலும் வெங்கடேசபெருமாள் தரப்பை சேர்ந்த குமாரவேலு, ராம்கி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே மோதலில் பெண் போலீஸ் சாந்திக்கு கத்திக்குத்தில் காயம் அடைந்ததால் கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த சம்பவம் காரணமான இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பாகூர் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×