என் மலர்

    நீங்கள் தேடியது "woman police"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகர் அருகே பெண் போலீசை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • பழைய பஸ் நிலையம் தாய்மார்கள் பாலூட்டும் அறையில் ஒரு வாலிபர் படுத்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் லட்சுமிநகரைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 21). இவர் அதிகாலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு தாய்மார்கள் பாலூட்டும் அறையில் ஆலங்குளம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (26) என்ற வாலிபர் படுத்திருந்தார். அதைப்பார்த்த சிவானந்தம் வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    அப்போது அங்கு வந்த பெண் போலீஸ் ஒருவரும் அவரை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் ரஞ்சித் அவர்கள் இருவரையும் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். மேலும் பாலூட்டும் அறையின் கண்ணாடியை உடைத்து சிவானந்தத்தையும் அடித்து உதைத்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ்நிலையத்தில் சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உமா மகேஸ்வரி ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்
    • கயத்தாறு தெற்கு கோனார் கோட்டைப்புதூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    நெல்லை:

    பாளை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் பாளை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

    பெண் காவலர்

    இவரது மனைவி உமா மகேஸ்வரி.ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.கடந்த ஒரு வருடமாக உமா மகேஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கயத்தாறு தெற்கு கோனார் கோட்டைப்புதூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    தற்கொலை

    இந்நிலையில் இன்று காலை உமாமகேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தும் சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை க்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண் போலீஸ் இளவரசி குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார்.
    • பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    வேலூர்:

    வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தலைமை பெண் காவலராக வேலை செய்பவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த போது போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளி கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டு இருந்தார்.

    இந்த சத்தத்தை கேட்ட இளவரசி அவரது அருகில் சென்று பார்த்தார். அப்போது பெண் ஒருவர் பிரசவ வலியால் அழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெண்ணுடன் 6 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று இருந்தது.

    இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு வந்த இளவரசி அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் பெண் போலீஸ் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். இதுகுறித்து பெண் கூறியதாவது:-

    திருமணம் ஆன சில மாதங்களில் கணவர் தன்னை விட்டு சென்றதாகவும், தனது அண்ணன்கள் பிச்சை எடுத்து பணம் தர வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார். இதனால் இப்பகுதியில் பிச்சை எடுத்து வருவதாக கூறினார்.

    பெண் போலீஸ் இளவரசி குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார். பிச்சைக்கார பெண்ணிற்கு போலீசார் பிரசவம் பார்த்த சம்பவம் வேலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லை மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாரை ஆபாசமாக படம் எடுத்த வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரி கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது30). இவர் கயத்தாறில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நடராஜனுக்கும், அவரது மனைவி முருகம்மாள் (29) என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் தனது தாய் வீட்டில் வசித்து வரும் முருகம்மாள், தனது கணவர் மீது பாளை தாலுகா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் மகளிர் போலீசார், நடராஜன் மற்றும் அவரது மனைவியை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது தனது நகைகளை கணவர் நடராஜன் அடமானம் வைத்துள்ளதாக முருகம்மாள் புகார் தெரிவித்தார். அதனை மீட்டு மனைவியிடம் வழங்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் நடராஜன் மனைவியின் நகைகளை மீட்டு கொடுக்கவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

    அப்போது தன்னை செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளதாக போலீசில் முருகம்மாள் தெரிவித்தார். இதையடுத்து நடராஜனின் செல்போனை வாங்கி மகளிர் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன.

    மேலும் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசாரை, அவர்களுக்கே தெரியாமல் மோசமான கோணங்களில் படம் எடுத்து வைத்திருந்தார். போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த போது பெண் போலீசாரை அவர் தனது செல்போனில் ரகசிய மாக படம் எடுத்துள்ளார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு பாளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ஆபாச படங்கள் வைத்திருந்தது, பெண் போலீசாரை அனுமதி இல்லாமல் செல்போனில் படம் பிடித்தது ஆகிய பிரிவின் கீழ் நடராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொருக்குப்பேட்டையில் போலீஸ் நிலையத்தில் சென்னையில் உறவினர்கள் யாரும் இல்லாததால் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலேயே நடத்தப்பட்டது.
    ராயபுரம்:

    சென்னை கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி என்ற பெண் போலீஸ் 2½ ஆண்டாக பணியாற்றி வருகிறார்.

    இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. 2008-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பணியாற்றிய இவர் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கருத்தரித்த மகாலட்சுமி. வளைகாப்பு நிகழ்ச்சி தனக்கு நடத் தப்படுமா? என்ற கவலையில் இருந்துள்ளார். உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லாததால் வெளியூரில் இருந்து உறவினர்களை வரவழைக்க விரும்பவில்லை.

    குழந்தை பிரசவத்துக்கு தாய் வீட்டிற்கு செல்லும் முன் நடத்தப்படும் வளைகாப்பு நடைபெறுமா என்ற மன உளச்சலில் சக பெண் போலீசாரிடம் கூறி வருத்தம் அடைந்தார்.

    இதுபற்றி பெண் போலீசார் சக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மகாலட்சுமிக்கு எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பிரசவத்துக்கு செல்லும் முன் வளைகாப்பு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலேயே நடத்த தடபுடலான ஏற்பாடு செய்யப்பட்டது.

    குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி, சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் மோகன் ஆகியோர் தலைமையில் சீமந்த விழாவை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமியையும் அவரது கணவரையும் அமர வைத்து மாலை அணிவித்து சம்பிரதாய முறைகளை செய்தனர்.

    பூ, குங்குமம் வைத்து வளையல்கள் கைகளில் பூட்டப்பட்டு மகாலட்சுமியை மணப்பெண் போல ஜோடித்தனர். பெண் காவலர்கள் மட்டுமின்றி ஆண் காவலர்களும் நிலையத்தில் பணிபுரிந்த சக ஊழியர்கள் அனைவரும் சீர்வரிசை தட்டுகளுடன் 5 வகை சாதம் கலந்து நலங்கு வைத்து விமரிசையாக கொண்டாடினர்.

    போலீசாரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களை கூறினர். பெண் காவலர் மகாலட்சுமியுடன் ஒவ்வொருவரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    பொதுவாக போலீஸ் நிலையத்தில் காதல் திருமணங்களும், காதல் ஜோடியை இணைத்து வைக்கும் சம்பவங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஒன்று சேர்ந்து வித்தியாசமாக தன்னுடன் பணிபுரியும் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடத்துவதை காட்டிலும் சிறப்பாக அமைந்திருந்தது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PollachiAbusecase
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் ராதிகா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

    பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டுக்கு சாதாரண உடையில் சென்று விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற விதிகளை காவல் துறையினர் பின்பற்றவில்லை.

    புதிதாக வெளியான நான்கு வீடியோக்கள் தொடர்பாக தனி தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை சி.பி.ஐ. பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #PollachiAbusecase
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருச்சியில் பெண் போலீஸ் கர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆயுதப்படை அலுவலகம் உள்ளது. இங்கு போலீசாக தாரணி (22) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஆயுதப்படை அலுவலகத்தில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அப்போது அவரது அறைக்கு தற்செயலாக சென்ற மற்றொரு பெண்போலீஸ் தாரணி வி‌ஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பெண் போலீஸ் தாரணி தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே கடந்த 10 நாட்களில் எடமலைப்பட்டிபுதூர் பட்டாலியனில் வேலை பார்த்த முத்து என்ற போலீஸ்காரர் அலுவலகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தார். திருச்சி பெண்கள் சிறை வார்டன் செந்தமிழ்செல்வி, காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தார். இந்தநிலையில் தாரணி தற்கொலைக்கு முயன்றது திருச்சி போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து ஆயுதப்படை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தாரணிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. அவர் கர்ப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த அவர் மேலும் 4 நாட்கள் கூடுதலாக மருத்துவ விடுப்பு நீட்டிப்பு செய்துள்ளார்.

    விடுப்பு முடிந்ததும் நேற்று ஆயுதப்படை அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விடுப்பு நீட்டித்தது குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தாரணி கர்ப்பமடைந்தது குறித்து தெரிவித்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் விடுப்பை நீட்டித்ததாகவும், அதற்கான மருத்துவ சான்றிதழ் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தாரணி கர்ப்பம் அடைந்தது குறித்து கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதில் ஏற்பட்ட மனஉளைச்சலில் தான் தாரணி அங்கிருந்த கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாக கூறப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்பாக ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜிடம் விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே ஆயுதப்படை, போலீஸ் நிலையங்களில் பெண் போலீசாருக்கு சில போலீசார் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவதூறாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக புதிதாக திருமணமாகிய பெண் போலீசாரிடம் ஏட்டுக்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிண்டலாக பாலியல் பேச்சு பேசி அருவருப்பாக நடந்து கொள்வதாக பெண் போலீசார் புலம்புகிறார்கள்.

    சில பெண் போலீசார் இதை தவறாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் வயது குறைந்த சில பெண் போலீசார் இதுபோன்ற பாலியல் கிண்டல் பேச்சுக்களைகேட்டு மனம் உடைந்து போகிறார்கள். இது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் போலீசார் வட்டாரத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகூரில் குடும்ப தகராறில் பெண் போலீஸ் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

    பாகூர்:

    விழுப்புரம் அருகே வெள்ளையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது35). இவர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பாகூரை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (41) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே வெங்கடேச பெருமாளுக்கும், சாந்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். சாந்தி சோரியாங்குப்பத்தில் உள்ள தனது அக்கா சாத்தகி வீட்டில் தங்கி போலீஸ் வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே வெங்கடேசப்பெருமாள் மனைவியிடம் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் வெங்கடேசப்பெருமாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனை அறிந்த சாந்தி நேற்று தனது அக்காள் சாத்தகி மற்றும் அக்காள் கணவர் சிவானந்தம் ஆகியோருடன் பாகூரில் உள்ள வெங்கடேசபெருமாள் வீட்டுக்கு வந்தார். அங்கு வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி 2-வது திருமணம் செய்யலாம் என்று அவர்கள் வெங்கடேச பெருமாளிடம் தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மாறிமாறிக் தாக்கி கொண்டனர். வெங்கடேச பெருமாளுக்கு ஆதரவாக அவரது தங்கை புவனேஸ்வரி மற்றும் உறவினர்கள் குமாரவேலு, ராம்கி, இந்திரா ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் வெங்கடேசபெருமாள் தரப்பினர் ஆத்திரம் அடைந்து சாந்தி, அவரது அக்காள் சாத்தகி மற்றும் அவரது கணவர் சிவானந்தம் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதுபோல சாந்தி தரப்பினர் தாக்கியதில் வெங்கடேசப்பெருமாள், குமாரவேலு, புவனேஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து இருதரப்பினரும் பாகூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வீரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி ஆகியோர் விசாரணை நடத்தி இருதரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்தனர். மேலும் வெங்கடேசபெருமாள் தரப்பை சேர்ந்த குமாரவேலு, ராம்கி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே மோதலில் பெண் போலீஸ் சாந்திக்கு கத்திக்குத்தில் காயம் அடைந்ததால் கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த சம்பவம் காரணமான இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பாகூர் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐதராபாத் அரசு மருத்துவமனை அருகே பசி தாங்காமல் துடித்து கொண்டிருந்த அனாதை கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ் பிரியங்காவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. #HyderabadwomanPolice #WomanPolice
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் உள்ள அப்சல்கஞ்ச் பகுதியில் மிகவும் பழமையான ஒஸ்மானியா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மருத்துவமனை வாசலில் யாகுத்புரா பகுதியை சேர்ந்த முஹம்மது இர்பான் என்பவர் நின்றிருந்தபோது, மிதமிஞ்சிய போதையில் அவ்வழியாக வந்த ஒரு பெண் தன் கையில் இருந்த குழந்தையை இர்பான் கையில் திணித்தார்.

    சற்று நேரம் குழந்தையை பார்த்து கொள்ளுங்கள், இதோ வந்து விடுகிறேன் என்று கூறிச் சென்ற அந்தப் பெண் சிலமணி நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதற்குள் இர்பான் கையில் இருந்த அந்த இரண்டுமாத பெண் குழந்தை பசி தாங்காமல் அழ ஆரம்பித்தது.

    குழந்தையின் அழுகை அதிகரிக்கவே அருகாமையில் உள்ள தனது வீட்டுக்கு அதை தூக்கிச் சென்ற இர்பான், புட்டிப்பால் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அதை குடிக்க மறுத்த குழந்தையின் கதறல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதற்குள் இரவு நெருங்கி விட்டதால், என்ன செய்வது? என்று புரியாமல் தவித்த இர்பான் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

    குழந்தையை தூக்கிக்கொண்டு அருகாமையில் இருக்கும் அப்சல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு இரவுநேரப் பணியில் இருந்த தலைமை காவலர் ரவீந்திரனிடம் நிலைமையை கூறி, பசியால் துடித்து அழும் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார்.

    அழுதழுது சோர்ந்து பலவீனமாக காணப்பட்ட அந்த குழந்தையின் தவிப்பையும் பசியையும் உணர்ந்த ரவீந்திரன், மகப்பேறு முடிந்து பிரசவ விடுமுறையில் வீட்டில் இருக்கும் தனது மனைவி பிரியங்காவை கைப்பேசியில் தொடர்பு கொண்டார்.

    பேகம்பேட் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றும் பிரியங்காவிடம் விபரத்தை கூறினார். கணவன் கூறிய தகவல்களின் இடையே பசியால் துடித்து கதறும் குழந்தையின் அழுகுரல் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த பிரியங்காவின் இதயத்தை பிழிந்தது.

    சற்றும் தாமதிக்காமல் வாடகை கார் பிடித்து அப்சல்கஞ்ச் காவல் நிலையம் வந்துசேர்ந்தார், பிரியங்கா. அங்கு கணவர் ரவீந்திரன் குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் தவித்து கொண்டிருந்ததை கண்ட அவர், உடனடியாக குழந்தையை வாரி அணைத்து, தாய்ப்பால் புகட்ட தொடங்கினார்.



    இந்த தகவலை அறிந்த ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அஞ்சானி குமார், தலைமை காவலர் ரவீந்திரனின் கடமை உணர்வையும், பெண் காவலர் பிரியங்காவின் தாய்மை உணர்வையும் பெரிதும் பாராட்டினார். பெற்றோர் தேடிவரும் வரை அந்த பெண் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பையும் பிரியங்காவிடம் ஒப்படைத்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உரிய நேரத்தில் அரியதொரு உதவியை செய்த பெண் போலீஸ் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ரவீந்திரனுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

    இதற்கிடையில் தெருக்களில் குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் அந்த குழந்தையின் தாயாரை போலீசார் கண்டுபிடித்து எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர். #HyderabadwomanPolice #WomanPolice #WomanPolicePriyanka
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போலீஸ் நிலையத்தில் பெண் ஏட்டை கட்டிப்பிடித்து முத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டரின் ‘லீலை’ வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில போலீசார் மீதும் நடவடிக்கை பாய்கிறது.

    திருச்சி:

    திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டு ஒருவரை அதே போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியன் (வயது 53) என்பவர் இரவுப்பணியின் போது கட்டிப்பிடித்து முத்தமிட்ட சம்பவம் நடந்தது.

    அப்போது திடீரென அங்கு வந்த உளவுப்பிரிவு ஏட்டு இதைபார்த்து திடுக்கிட்டார். உடனே அந்த பெண் போலீஸ் ஏட்டு, தன்னை சப்-இன்ஸ்பெக்டர் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறினார்.

    இது குறித்து பெண் போலீஸ் ஏட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஜியாவுல்ஹக்கிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டிடம் அந்த பெண் போலீஸ் ஏட்டு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் திடீரென கட்டிப் பிடித்ததை எதிர்பார்க்காததால் ஆத்திரத்தில் அவரை தான் அணிந்திருந்த காலணியால் அடித்ததாகவும் கூறினார்.

    இந்த நிலையில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் ஏட்டு சம்மதத்துடனேயே லீலை நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ஒரு தகவல் வந்தது.

    உடனே போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைப்பார்த்த போது அதில் இரவு 10 மணிக்கு வெளியில் ரோந்து பணிக்கு செல்ல வேண்டிய பாலசுப்பிரமணியன் 10.29 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு வருகிறார்.

    அப்போது கம்ப்யூட்டர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் பெண் போலீஸ் ஏட்டு அருகில் சென்று பேசுகிறார். பிறகு அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுகிறார். பிறகு உதட்டுடன் உதடு வைத்து முத்தமிடுகிறார்.

    இந்த காட்சி 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடுகிறது. இதை பார்த்த உயர் அதிகாரிகள் பெண் போலீஸ் ஏட்டு சம்மதத்துடனேயே இது நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெண் போலீஸ் ஏட்டு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் காம லீலை நடத்திய சிறப்பு சப்-இன்பெக்டர் பாலசுப்பிரமணியன் மீதும் பெண் போலீஸ் ஏட்டு மீதும் அடுக்கடுக்கான புகார்கள் குவிகின்றன. சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் ஏற்கனவே திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து சர்ச்சையில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது.

    அதேபோன்று சோமரசம் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு வந்தது முதல் சக போலீசாருடன் கருத்து வேறுபாட்டிலேயே இருந்துள்ளார். இரவு ரோந்து பணி கொடுக்கப்பட்டாலும் அவர் ரோந்து செல்லாமல் போலீஸ் நிலையத்திற்கு வந்து விடுவார்.

    இதற்கிடையே பெண் போலீஸ் ஏட்டு வேறு போலீசாருடனும் பழக்கத்தில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட போட்டியில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் பொறி வைத்து சிக்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனை தொடர்ந்து மேலும் சிலர் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. இதற்காக கடந்த சில மாதங்களில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அங்குள்ள காமிராவில் பதிவான காட்சிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் நடந்தது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் முதலில் பெண் போலீஸ் ஏட்டு புகார் தெரிவிக்க மறுத்துள்ளார். புகார் கொடுத்தால் அனைத்தும் அம்பலமாகி விடும் என நினைத்து பயந்துள்ளார்.

    ஆனால் அவரை மட்டும் காப்பாற்றி விடலாம் என நினைத்து அவரை அழைத்து சென்று புகார் கொடுத்ததால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு இன்று அனைத்து குட்டுகளும் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதனால் அந்த பெண் போலீஸ் ஏட்டு கலக்கத்தில் உள்ளார்.

    இந்த விவகாரத்தில் மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால் மற்ற போலீசாரும் கலக்கத்தில் உள்ளனர். அதே போல் போலீஸ் நிலையத்தில் பதிவான வீடியோக காட்சிகள் வெளியே கசிந்தது எப்படி என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print