search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நிராகரிக்கப்பட்ட பிறகும் வைராக்கியத்துடன் போராடி விருது பெற்ற புதுச்சேரி பெண் போலீஸ்
    X

    கோப்பையுடன் பெண் போலீஸ் ராஜேஸ்வரி.

    நிராகரிக்கப்பட்ட பிறகும் வைராக்கியத்துடன் போராடி விருது பெற்ற புதுச்சேரி பெண் போலீஸ்

    • ஊர்க்காவல் படைவீரர் தேர்வில் வெற்றி பெற்று ஊர்க்காவல் படைவீரராக பணியில் சேர்ந்தார்.
    • ஆரம்பத்தில் பயிற்சி சிரமமாக இருந்தாலும் பாடங்களைப் படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்தது என்றார்.

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ்துறையில் கடந்த 2022-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 382 போலீசாருக்கு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பல்வேறு பயிற்சிகள் பெற்ற போலீசாருக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் போலீஸ் நிர்வாகம், செயல்பாடுகள், சிறப்பு சட்டங்கள் ஆகிய 3 பிரிவுகளில் ராஜேஸ்வரி என்ற பெண் போலீஸ் சிறப்பிடம் பிடித்தார். அதோடு பெஸ்ட் இன் இன்டோர் என்ற பரிசையும் ராஜேஸ்வரி வென்றார்.

    மேலும் பயிற்சி பெற்றவர்களில் பெஸ்ட் ஆல் ரவுண்டராக ராஜேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கிடையே தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்ட பிறகும் போராடி ராஜேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவை முத்திரையர் பாளையம் சாணரபேட்டை புதுதெருவை சேர்ந்த ராஜேஸ்வரி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படைவீரர் தேர்வுக்கு விண்ணப்பித்தார்.

    எஸ்.எஸ்.எல்.சி. முடித்து டிப்ளமோ படித்திருந்த ராஜேஸ்வரிக்கு போலீஸ் பணிக்கு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் நிராகரிக்கப்பட்டார். ஆனாலும் ஊர்க்காவல் படைவீரர் தேர்வில் வெற்றி பெற்று ஊர்க்காவல் படைவீரராக பணியில் சேர்ந்தார்.

    அதோடு சென்னை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த ராஜேஸ்வரி தனது கல்வித்தகுதி பிளஸ்-2 வுக்கு சமமானது என தீர்ப்பும் பெற்றார். ஆனால் தீர்ப்புக்கு முன்பு போலீஸ் பணிக்கான தேர்வு முடிந்துவிட்டது. இருப்பினும் மனம் தளராத ராஜலட்சுமி 2015 முதல் 2022-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றினார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்க ராஜேஸ்வரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற ராஜேஸ்வரி கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்று பெஸ்ட் ஆல் ரவுண்டர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

    இவரது கணவர் செந்தில் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

    ஊர்க்காவல் படையில் இருந்த போது பல்நோக்கு பணியாளர் பணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போலீசில் சேர வேண்டும் என்ற வைராக்கியத்தில் அந்த வாய்ப்பை உதறினேன். ஆரம்பத்தில் பயிற்சி சிரமமாக இருந்தாலும் பாடங்களைப் படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்தது என்றார்.

    Next Story
    ×