search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nuisance"

    • தெரு நாய்கள் தொல்லை அதிகரிக்கிறது.
    • இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் அதிகரித் துள்ளது. பகல், இரவில் நாய்கள் கூட்டமாக குடியி ருப்புகளில் வலம் வந்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    தற்போது நாய்களுக்கு இனப்பெருக்கத்திற்கான காலம் என்பதால் இணைகளை தேடி வெளியிடங்களில் இருந்து நகருக்குள் அதிகம் சுற்றித் திரிகிறது.

    இறைச்சி கடைகளை சுற்றியும் கூட்டமாக திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் தெரு நாய்கள் குழந்தைகள், வயதானவர்களுக்கு அதிக பாதிப்பை தருகிறது. மெயின் ரோட்டில் திடீரென்று குறுக்காக வரும் தெரு நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுத்துகிறது.

    தெரு நாய்கள் தொல்லை தருவதாக இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தினர், தன்னார் வலர்கள் யாரும் முன் வருவதில்லை. தற்போது நாய் கள் எண்ணிக்கை பெருகி விட்டது. தெரு நாய்களுக்கான கருத்தடை ஆபரேஷன்களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வா கங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

    • தெரு நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி கவுன்சில் கூட்டம் அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர் சதீஷ் குமார் பேசுகையில், சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தால் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இது குறித்து ஆணையாளரிடம் புகார் செய்தால் ஊழியர் பற்றாக்குறை என்று காரணம் சொல்கிறார்கள்.ஆணையாளரை சந்தித்து கோரிக்கை குறித்து பேச காத்திருக்கும் நிலை உள்ளது என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் தெய்வேந்திரன் பேசுகையில், புதிய வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்கு விண்ணப் பித்தால் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை.இந்த நிலை நீடித்து வருகிறது என்றார்.இதற்கு பதில் அளித்த ஆணையாளர், சொத்து வரி மாற்றம், கட்டிட வரைபட அனுமதி ஆகியவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

    ஏற்கனவே அலுவலகத்தில் தேங்கி யிருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. கட்டிட வரைபட அனுமதிக்கு முன்னர் மனையிட வரி செலுத்தினால்மட்டுமே கட்டிட வரைபட அனுமதி பெற முடியும்.

    இனி வரும் காலங்களில் இன்னும் விரைந்து இந்த விண்ணப்பங்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி பேசுகையில் எனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து வலியுறுத்தினால் கண்டுகொள்வது கிடையாது. டெண்டர் சம்பந்தமான தகவல்கள் தரமறுக்கின்றனர் என்றார்.

    அதைத் தொடர்ந்து பேசிய பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளில் மின்விளக்கு வசதி, வடிகால் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசுதொல்லை அதிகரித்து விட்டது.

    வார்டு முழுவதும் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நாய் தொல்லை அதிகரித்து விட்டது. தினமும் 10 க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகின்றனர்.நாய்களிடம்இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலளித்த தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்த தொந்தரவு உள்ளது. நாய்களை கொல்ல முடியாது.நாய்களை கட்டுப்படுத்த புளு கிராஸ் நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    • உணவு தானியங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக காட்டுப்பன்றிகளின் தொல்லையும் அதிகரித்து உள்ளது
    • காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் மகசூலாகியும் விளைந்த நெல்லை வீட்டுக்கு கொண்டு வர முடியாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்டு தற்போது 35 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது.

    இருந்தாலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சை அருகே உள்ள தென்னங்குடி, மனத்திடல், விழுதியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்கனவே எலி, மயில் ஆகியவை உணவு தானியங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக காட்டுப்பன்றிகளின் தொல்லையும் அதிகரித்து உள்ளது ‌‌விவசாயிகளை வேதனை அடைய செய்து ள்ளது.

    தென்னங்குடி கிராமத்தில் வெண்ணாற்றின் கரையோ ரம் 50 ஏக்கரில் இன்னும் இரு வாரத்தில் குறுவை நெல் அறுவடை செய்யப்பட உள்ளது.

    ஆனால் தற்போது இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுந்து நெற்கதிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இதேபோல் மனத்திடல் கிராமத்தில் தினமும் 10-க்கும் மேற்பட்ட பன்றிகளால் நெல் வயல்கள் சேதுமடைந்து வருகின்றன ‌‌‌‌.

    ஏற்கனவே பல்வேறு இயற்கை இடர்பாடுகள் போன்ற சிரமங்களுக்கு இடையில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அறுவடை நேர த்தில் காட்டுப்பன்றிகள் வயல்களில் புகுந்து சேதப்ப டுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும் போது :-

    இரவு நேரத்தில் மட்டுமே காட்டுப்பன்றிகள் வயலுக்குள் புகுந்து சேதப்படுத்துகிறது.

    பல நாட்களாக நாங்கள் வயலில் இரவு நேரத்தில் காவல் காத்தாலும் அசந்து தூங்கும் நேரத்தில் காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுந்து விடுகின்றனநாங்கள் பட்டாசு வெடித்தாலும் காட்டு பன்றிகள் போவ தில்லை.

    அதே நேரத்தில் தாக்கும் முயலும் போது பதிலுக்கு காட்டு பன்றிகளும் தாக்க வருகின்றன.

    காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தா விட்டால் மகசூலாகியும் விளைந்த நெல்லை வீட்டுக்கு கொண்டு வர முடியாது.

    எனவே போர்க்கால அடிப்படையில் காட்டுக் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

    ×