என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுப்பு"

    • சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு இது பேருதவியாக இருக்கும் என மாநில சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
    • மாதவிடாய் விடுப்பை அமல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகாவும் இணைந்துள்ளது.

    கர்நாடகாவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    அரசு அலுவலகங்கள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் இந்த விடுப்பு பொருந்தும்.

    சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு இது பேருதவியாக இருக்கும் என மாநில சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    இந்த முடிவின் மூலம், பீகார், ஒடிசா, கேரளா மற்றும் சிக்கிம் போன்ற மாதவிடாய் விடுப்பை அமல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகாவும் இணைந்துள்ளது. 

    • தைவான் நாட்டு சட்டப்படி, திருமணமானால் 8 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு தரப்படும்.
    • 37 நாட்களில் 4 முறை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 32 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார்.

    தைவான் நாட்டில் 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறுவதற்காக, ஒரு நபர் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தைவான் நாட்டு சட்டப்படி, திருமணமானால் 8 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு தரப்படும்.

    இதையறிந்து கொண்டு வங்கி ஊழியர் ஒருவர் ஒரே பெண்ணை 37 நாட்களில் 4 முறை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 32 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார்.

    ஒவ்வொரு முறையும் விடுப்பு முடியும் சமயத்தில் விவாகரத்து செய்து, மீண்டும் திருமணம் செய்து வந்துள்ளார்.

    இதை கண்டுபிடித்த வங்கி, அவர் 5வது முறை அவர் கேட்ட விடுமுறை கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. ஆனால் அந்த ஊழியர் சட்டப்படியே தான் செயல்பட்டதாக வழக்கு தொடர்ந்ததால் அதை ஏற்ற நீதிமன்றம், வங்கி நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.

    2021ல் நடந்த இச்சம்பவம், தற்போது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

    • பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
    • பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்.

    பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

    அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டது.

    தற்போது பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை டெல்லியில் உள்ள அரசு அலுவலர்கள் அனைவருக்கும் விடுப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது
    • வங்கிகளில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில், அக்.3-

    குமரி மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களும் விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாக னங்கள் வாங்குமாறு நிர்பந் திக்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதன் காரணமாக ஒரு சில கூட்டுறவு வங்கிகள் பணியாளர்கள் இன்றி மூடப்பட்டது.

    அதே சமயம் பல வங்கிகளில் ஒரு சில பணியாளர்களுடன் இயங்கியது. பணியாளர்கள் போராட்டம் காரணமாக பணிகள் முடங்கின. கடந்த 2 நாட்கள் விடுமுறைகளுக்கு பிறகு கூட்டுறவு வங்கிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் வங்கிகளில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமையில் செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட்ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார் மற்றும் இணை செயலாளர்கள் ரமணி, வசந்தபிரபா உள்பட பலர் இணை பதிவாளர் அலுவலகம் முன் திரன்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த பயணத்தில் பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது.
    • மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் விவாதம் நடைபெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் ஊழியர்களையும் சந்தித்து அவர் பேசினார். அதன்பின் நேற்று இரவு மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டார். மோடியுடன் உரையாடிய இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலாளர்கள்  அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    அதில் ஒரு தொழிலாளி, நீங்கள் மெடிக்கல் லீவ் எடுக்குறீங்களா சார் என கேட்டார். இதற்கு பதிலளித்த மோடி, தொழிலாளர்களின் வியர்வை வாசனையே எனது மருந்து என்று பதில் அளித்தார்.

    மேலும் உரையாடலின்போது தான் தமிழர் என மோடியிடம் ஒருவர் தன்னை  அறிமுகப்டுத்திக்கொள்ளவே உடனே அவரிடம் வணக்கம் என மோடி தெரிவித்துள்ளார்.

    இந்த பயணத்தில் பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.

    தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

    இந்தப் பயணத்தின்போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி குவைத்தின் அமீருடன் ஆலோசனை மேற்கொண்டார். 

    • தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ, அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை
    • தண்டனைக் கைதிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு திட்டவட்டம்

    மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசரகால விடுப்பு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக்கோரி தண்டனைக் கைதிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாறுபட்ட தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியதால், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

    ×