என் மலர்
நீங்கள் தேடியது "ஆயுர்வேத சிகிச்சை மையம்"
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று முதல் 7 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- ஒரு வாரத்திற்கு பிறகு சிகிச்சை முடிந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா வந்துள்ளார்.
அவர் கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளி அருகே பரத்தோடு பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு கேரளா வந்தார். பின்பு அவர் ஆயுர்வேத சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அவரது குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் கேரள போலீசார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அந்த மருத்துவமனையில் இன்று முதல் 7 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பின்பு ஒரு வாரத்திற்கு பிறகு சிகிச்சை முடிந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார். ஆயுர்வேத சிகிச்சைக்காக பல அரசியல் பிரபலங்கள் கேரளாவுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் வந்திருக்கிறார்.
மூன்று முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2024 மக்களவை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மார்ச் மாதம் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியதை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன்பிறகு தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், 2025 சட்டமன்ற தேர்தலில் டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா வீடியோ பதிவு.
- 2 செல்போன், லேப்டாப் பறிமுதல்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியில் ஆயுர்வேத மற்றும் சித்தா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண், பெண்களுக்கு மசாஜ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் ஒருவர் அங்கு மசாஜ் செய்வதற்காக வந்தார். அவருக்கு அங்கு பணியமர்த்தப்பட்ட பெண் ஒருவர் மசாஜ் சிகிச்சை அளித்தார்.
அந்த அறையில் உள்ள வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா மூலமாக வீடியோ பதிவு செய்யப்பட்டதை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இது தொடர்பாக அவர் உறவினர்களுக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
அவர்கள் அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பெண்ணின் வீடியோ காட்சிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் முன்னிலையிலேயே பெண்ணின் உறவி னர்கள் சரமாரியாக தாக்கினர். பின்பு அவரை போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இதையடுத்து அவரது 2 செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்தனர்.
அவரது லேப்டாப்பில் மேலும் சில பெண்களின் கிளு கிளு வீடியோ காட்சிகள் இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை வந்தவர்களா? வேறு ஏதாவது பெண்களின் வீடியோ காட்சிகளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.






