search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM"

    • தாக்குதலில் காயமடைந்த 33 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    காஷ்மீரில் உள்ள சிவகோரி கோவிலுக்கு பக்தர்கள் சிலர் ஒரு பேருந்தில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். ரியாசி மாவட்டம் தெரியத் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது டிரைவர் நிலைத்தடுமாறியதில் அந்த பேருந்து, பெரிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த சம்பவத்தில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த 33 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையை மேற்கொண்டுள்ளது.

    சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ள என்ஐஏ குழுவினர் மற்றும் தடயவியல் குழுவினர் தாக்குதல் நடந்த இடத்தில் ஆதாரங்களை தேடி வருகின்றனர். மேலும் தடயங்களை சேகரித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடூரமான செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும், இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி,

    பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த வெட்கக்கேடான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலை விளக்கும் உண்மையான படம் என கூறியுள்ளார்.

    இந்நிலையில், பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியிருப்பதாவது:- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது.

    இந்த கொடூரமான செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும், இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தேசம் நிற்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனிடையே பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் குறித்து துணை நிலை கவர்னர் மனோஜ் சிங்ஹாவை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு கூறியுள்ளார். மேலும், தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, காஷ்மீரில் உள்ள சிவகோரி கோவிலுக்கு நேற்று மாலை பக்தர்கள் சிலர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். ரியாசி மாவட்டம் தெரியத் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது டிரைவர் நிலைத்தடுமாறியதில் அந்த பேருந்து, பெரிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.

    மேலும் இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    தகவல் அறிந்தவுடன், போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    விசாரணையில், பயங்கரவாதிகளின் தாக்குதலால் இச்சம்பவம் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்திருப்பதாக துணை ராணுவ படையினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களை அடையாளம் காணும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இந்தியக் குடியரசு தலைவர் முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற மதிப்பிற்குரிய பதவியைக் கொண்டுள்ளார்.
    • இந்தியப் பிரதமர் நாட்டின் மிக உயர்ந்த நிர்வாகப் பதவியை வகிக்கிறார்.

    புதுடெல்லி:

    சுதந்திரம் அடைந்ததில் இருந்து நமது நாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. மேலும் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ளது. பாராளுமன்ற முறையை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்தியா தனது செல்வாக்கை உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் குடிமகன் என்ற முறையில் குடியரசுத் தலைவரின் நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரத்தில் பிரதமரும் நாட்டின் உயர்மட்ட பதவியை வகிக்கிறார். எம்.பி.க்கள் அந்தந்த தொகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவும், அவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுகிறார்கள்.

    இப்படி இருக்க குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு எந்த மாதிரியான சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்....

    இந்தியப் பிரதமர் நாட்டின் மிக உயர்ந்த நிர்வாகப் பதவியை வகிக்கிறார். அவர்கள் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் குறிப்பிடத்தக்க அதிகாரம் மற்றும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். பிரதம மந்திரி இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார். அவர் மாநிலத் தலைவராக உள்ளார், மேலும் பொதுவாக இந்திய பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் பெரும்பான்மையான இடங்களைக் கொண்ட அரசியல் கட்சி அல்லது கூட்டணியின் தலைவராக இருப்பார்.

    இந்தியப் பிரதமருக்கு மாதம் ரூ.1.66 லட்சம் கிடைக்கிறது. சம்பளத்தில் அடிப்படை ஊதியம் ரூ.50,000 அடங்கும். இதுதவிர, பிரதமர் செலவுக்கு அகவிலைப்படியாக ரூ.3,000 மற்றும் பாராளுமன்ற செலவுத்தொகையாக ரூ.45,000 பெறுகிறார். இத்துடன், நாள் ஒன்றுக்கு ரூ.2,000 செலவுத் தொகையும் வழங்கப்படுகிறது. மாதாந்திர அகவிலைப்படிகளை தவிர, இந்தியப் பிரதமர் கூடுதல் பலன்கள் மற்றும் சலுகைகளை அனுபவிக்கிறார்.

    பிரதம மந்திரி ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தை வாடகை அல்லது மற்ற வீட்டு செலவுகள் இல்லாமல் பெறுகிறார்.

    பிரதமரின் பாதுகாப்புக்கு சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) பொறுப்பு வகிக்கிறது. பிரதமரின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்க வாகனங்கள் மற்றும் விமானங்களின் அணுகல் உள்ளது. பிரதமர் வெளிநாடு செல்லும்போது அவர் தங்கும் விடுதி, உணவு மற்றும் பயணச் செலவுகளை அரசே செலுத்துகிறது.

    ஓய்வு பெற்ற பிறகும் பிரதமருக்கு இலவச தங்குமிடம், மின்சாரம், வாழ்நாள் முழுவதும் இலவச தண்ணீர் மற்றும் 5 ஆண்டுகளுக்கு SPG பாதுகாப்பு வழங்கப்படும்.

    பாராளுமன்ற உறுப்பினர்கள்

    இந்தியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) இந்திய பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் அந்தந்த தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மக்களவை என்பது இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்று, மற்றொன்று ராஜ்யசபா, இது மேல் சபை.

    மக்களவையானது மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் ஆனது, முன்னதாகவே கலைக்கப்படாவிட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத் தேர்தல்கள் மூலம் மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் மக்கள்தொகையால் தீர்மானிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு தொகுதி ஒரு எம்.பி.க்கள் மாத சம்பளமாக ரூ.1 லட்சம் பெறுகின்றனர். கூடுதலாக, அவர்களின் சம்பளம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தினசரி அகவிலைப்படிகளின் படி அதிகரிக்கிறது. 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம், 2010 இன் படி, சம்பளம் மாதம் ரூ.50,000 அடிப்படை ஊதியத்தை உள்ளடக்கியது.

    மேலும், பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக தினசரி செலவுத்தொகையாக ரூ.2,000 பெறுகின்றனர். சாலை மார்க்கமாக பயணம் செய்தால் ஒரு கி.மீ.க்கு 16 ரூபாய் வீதம், எம்.பி.க்களும் பயண அகவிலைப்படியை பெறுவார்கள்.

    மேலும் தொகுதி உதவித்தொகையாக மாதம் ரூ.45,000 பெறுகின்றனர். மேலும் அவர்களுக்கு அலுவலக செலவாக மாதம் ரூ.45,000, நிலையான மற்றும் தபால் செலவுகளுக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி செயலக உதவியாளர்களின் ஊதியத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ஒவ்வொரு மாதமும், உறுப்பினர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ சேவையைப் பெற 500 ரூபாய் செலுத்துகிறார்கள். எம்.பி.க்கள் தங்களுடைய பதவிக்காலம் முழுவதும் வாடகையில்லா வீட்டு வசதி பெறுகின்றனர்.

    குடியரசு தலைவர்

    இந்தியக் குடியரசு தலைவர் முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற மதிப்பிற்குரிய பதவியைக் கொண்டுள்ளார். இந்தியாவில், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநிலப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உறுப்பினர்களால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தியாவில் உள்ள ராஷ்டிரபதி பவன் உலகிலேயே மிகப்பெரிய ஜனாதிபதி இல்லமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    1951 ஆம் ஆண்டின் குடியரசு தலைவரின் சாதனை மற்றும் ஓய்வூதியச் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, இந்தியக் குடியரசுத் தலைவர் அதிக ஊதியம் பெறும் அரசாங்கப் பதவியை வகிக்கிறார். குடியரசு தலைவர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு பல்வேறு அகவிலைப்படி பெறுகிறார்.

    சம்பளத்துடன், குடியரசுத் தலைவர் 340 அறைகள் கொண்ட ராஷ்டிரபதி பவனில் தங்கும் வசதி உட்பட பல்வேறு சலுகைகளை அனுபவிக்கிறார். குடியரசு தலைவர் உலகில் எங்கு வேண்டுமானாலும் ரெயிலிலும் விமானத்திலும் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

    குடியரசுத் தலைவருக்கு இலவச வீட்டு வசதி மற்றும் மருத்துவம் மற்றும் அலுவலகச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற பிறகு, ஒரு முன்னாள் குடியரசு தலைவர் மாதம் 1.5 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்.

    மேலும், குடியரசுத் தலைவரின் ஓய்வூதியத்திற்குப் பிறகு, வாடகையில்லா பங்களா, இரண்டு இலவச லேண்ட்லைன்கள் மற்றும் ஒரு மொபைல் மற்றும் 5 தனிப்பட்ட ஊழியர்களும் வழங்கப்படுகின்றனர். அவர்களின் பராமரிப்புக்காக வருடத்திற்கு 60,000 ரூபாய் வரை செலவாகும். கூடுதலாக, ஓய்வுபெற்ற குடியரசு தலைவர் மற்றும் ஒரு துணைக்கு ரெயில் அல்லது விமானத்தில் இலவச பயணம் வழங்கப்படுகிறது.

    • ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
    • பிரதமர் தேர்வு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து விட்டது. 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    இதையடுத்து, ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கூறி வருகிறார்கள். இதனால் மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்து முடிவுசெய்ய உள்ளனர். பிரதமர் தேர்வு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் முடிவுக்கு கட்டுப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

    • 2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது.
    • குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இது மனிதர்களுக்கு இடையிலான அழகுப் போட்டி அல்ல. நாங்கள் கட்சி சார்ந்த ஜனநாயகம். எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கும் என்பது கேள்வி.

    கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கும். கட்சி தனது தலைவரை தேர்ந்தெடுத்து அந்த தலைவர் பிரதமராகிறார்.

    2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது. இந்த முறை 4 நாட்கள் கூட ஆகாது. 2 நாளில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். எம்.பி.க்கள் கூடி தேர்வு செய்வார்கள். இது ஒரு செயல்முறை.

    குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் திமிர் பிடித்தவர்கள் அல்ல. சில மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். மிகப் பெரிய கட்சியின் வேட்பாளர் பிரதமர். 2004-ம் ஆண்டில் எப்படி நடந்ததோ அப்படியே நடக்கும் என தெரிவித்தார்.

    • மக்கள் தொகையில் 4 லட்சம் பேர் மட்டுமே கொண்டது ஐஸ்லேண்டு
    • அனைத்து பணிகளும் வேலைநிறுத்தத்தால் முடங்கி போனது

    வட அட்லான்டிக் பகுதியில் உள்ள வட ஐரோப்பிய நாடு, ஐஸ்லேண்டு (Iceland). இதன் தலைநகர் ரெக்ஜேவிக் (Reykjavik). "லேண்ட் ஆஃப் ஃபையர் அண்ட் ஐஸ்" (land of fire and ice) என அழைக்கப்படும் இந்நாடு, சுமார் 4 லட்சம் பேரை கொண்ட தனித்தீவு நாடாகும்.

    எரிமலை, பனிப்பாறைகள் என இயற்கை அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஐஸ்லேண்டில் ஆண்கள் பெறும் ஊதியத்தை விட 21 சதவீதம் குறைவாகவே பெண்கள் ஊதியம் பெறுகின்றனர். சுகாதார பணிகள், தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகளில் பெண்களுக்கு ஊதியம் இன்னும் குறைவாக உள்ளது. 1975லிருந்து இது குறித்து 7 முறை போராட்டங்கள் நடத்தியும் அரசாங்கம் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அந்நாட்டில் பெண்கள் அமைப்பினர் மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து நேற்று, இந்நாட்டின் தலைநகரில் உள்ள அர்னார்ஹால் (Arnarholl) மலை மற்றும் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்தின் விளைவாக பெண்கள் ஈடுபட்டு வந்த பள்ளிக்கூடங்கள், கடைகள், வங்கிகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பல பணிகள் அந்நாட்டில் ஸ்தம்பித்து விட்டன.

    இப்போராட்டத்திற்கு அந்நாட்டின் பெண் பிரதமர் கேத்ரின் ஜேகப்ஸ்டாட்டிர் (Katrin Jakobsdottir) ஆதரவு தெரிவித்து, பணிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவிலிருந்து விலகிட பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன
    • உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது

    இனி இந்தியாவில் டேப்லெட், மடிக்கணினி, மற்றும் அனைத்து வகை கணினிகளையும் இறக்குமதி செய்ய உரிமங்கள் (license) வேண்டும்.

    வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி மடிக்கணி, டேப்லெட், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் அல்ட்ரா ஸ்மால் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை இறக்குமதி செய்ய இனிமேல் உரிமம் வாங்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. சில சிறப்பு சேவைகளை செயல்படுத்த அவசியமான ஒரு சில கணினிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம்.

    பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வெளிநாட்டு மின்னணு பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சியாக இந்த கட்டுப்பாடு வருகிறது.

    சீனாவிலிருந்து விலகி வேறு சில நாடுகளில் தங்கள் உயர்ரக மின்னணு பொருட்களை தயாரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக இருக்கிறார். அதன்படி அரசாங்கத்தின் பல துறைகளுக்கு கொள்கைகளை வகுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    அதன்படி, மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற ஹார்டுவேர் தயாரிப்பாளர்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வகையில் ரூ.170 பில்லியன் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது.

    அரசாங்கத்தின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை பெற விரும்பும் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் வருடாந்திர மின்னணு இறக்குமதியில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளின் இறக்குமதி $60 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபேட் மற்றும் மேக்புக் கணினி வகைகளை இன்னமும் இந்தியாவில் தயாரிக்க தொடங்கவில்லை. இந்த ஊக்கத்தொகைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் அந்நிறுவனத்தை இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கலாம் என கருதப்படுகிறது.

    டெல் டெக்னாலஜிஸ், ஹெச்பி மற்றும் அஸஸ்டெக் போன்ற நிறுவனங்களும் இதனை பயன்படுத்தி தங்கள் கணிணி வகைகளை இங்கு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என கணினி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது போன்ற முயற்சிகளின் விளைவாக உள்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பிறகு, இன்று பங்கு வர்த்தகத்தில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் மின்னணு உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 2% - 5% வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அணிகள் மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பாரதப் பிரதமரின் 9 ஆம் ஆண்டு சாதனை விளக்கும் வகையில் நடைபெற்ற அணிகள் மாநாட்டில் பாஜக பட்டியல் அணி மாநில செயலாளர் அன்பாலாயா சிவகுமார் தலைமையில் பொதுச் செயலாளர்கள் வருண் காந்தி,முக்தா சரவணன், இளங்கோவன், கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி ஜெயபால் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பாஜக அரசின் பாரத பிரதமரின் 9 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு விளக்கினர். இந்த மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அணிகள் தலைவர்கள் பிரவீண் குமார், சரத்குமார், நாகராஜ்,ராஜன், பிரபாகரன், கலாவதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நந்தன்,கோட்டி, பொதுச் செயலாளர் பொன்.பாஸ்கர்,முத்துராஜ்,பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார், பொது செயலாளர் கோகுல், ரமேஷ்,பொருளாளர் பாலாஜி பொன்னேரி நகர பட்டியல் அணி தலைவர் டி.ஹரிதாஸ், பாஜக நிர்வாகிகள் மகேஷ்வரி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சித்திரை திங்கள் பிறப்பையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். #Presidentextend #PMextend #தமிழ்புத்தாண்டு
    புதுடெல்லி:

    தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்களது புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

    நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழர்களுக்கு தங்களது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.



    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.





    பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மடல் வடிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்; அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரைத்துரை, விளையாட்டுத்துறை பிரமுகர்களும் தங்களது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். #Presidentextend  #PMextend #PMModi #TamilNewYear #NewYearGreetings #தமிழ்புத்தாண்டு
    செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை குறித்து தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதில், தேர்தல் விதிமீறல் இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Modi #MissionShaktiSpeech #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை மதியம் திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி இருப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை பற்றி விசாரணை நடத்த தனிக்குழு ஒன்றை தேர்தல் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தியது.

    தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் ஆல் இண்டியா ரேடியோ உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதன் பேரில் தூர்தர்சனும், ஆல் இண்டியா ரேடியோவும் விளக்கம் அளித்தன.



    இதற்கிடையே பிரதமர் மோடி, தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் பேச தங்களிடம் எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா இந்த தகவலை கூறினார்.

    பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையில் விதிமீறல் உள்ளதா? என்று தேர்தல் ஆணையம் இரண்டு நாட்கள் ஆய்வு செய்தது. இதற்கான குழுவும் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், மோடியின் உரையில் விதிமீறல் உள்ளதா? என்பது தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையில் எந்த நடத்தை விதிமீறலும் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

    பின்னர் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தியது தொடர்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதில் விதிமீறல் இல்லை என அறிவித்தது. #Modi #MissionShaktiSpeech #ElectionCommission 
    மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தின்போது கூறினார். #LokSabhaElections2019 #Vaiko
    விழுப்புரம்:

    விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை ஆதரித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜனநாயகமா?, பாசிசமா? என்ற கேள்விக்கு விடைகாணும் தேர்தல் இந்த தேர்தல். ஜனநாயகத்தை பாதுகாக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஒற்றைத்தன்மையை திணிப்பதற்கு கடந்த 5 ஆண்டுகாலத்தில் கேடு விளைவித்தது மத்திய அரசு.

    மேலும் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடு செய்து கொடுத்து தமிழகத்தின் தஞ்சை தரணியை பஞ்சபிரதேசத்திற்கு கொண்டு செல்ல திட்டத்தை வகுத்து கொடுத்தது.

    இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு திட்டங்களுக்காக நிலங்களை அபகரித்து வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, விவசாயிகளை நசுக்குகிறது. இப்படிப்பட்ட மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் வணிகர்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.2 ஆயிரம் கோடி உள்ளது. அதனை விவசாயிகளுக்கு பெற்றுத்தர ஊழல் நிறைந்த அரசு தயாராக இல்லை. மத்திய அரசின் வஞ்சகத்தில் இருந்து தமிழகத்தை காக்க முடியாத அரசு உள்ளது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்களுக்காக நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    பருப்பு கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல், உள்ளாட்சி துறையில் டெண்டர் விடுவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் ஊழல், குட்கா ஊழல் இப்படி எங்கும் ஊழல் நிறைந்துள்ளது. இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

    மருத்துவமனைகளுக்கு சென்றால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. நோயுடையவரின் ரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை நடந்துள்ளது. தற்போது ஓசூர் உள்ளிட்ட இடங்களில் ரத்தம் ஏற்றப்பட்ட 15 கர்ப்பிணிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும், கல்விக்கடன், விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Vaiko

    பிரதமர் பதவி மீது ஆசையா? என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி நிதின் கட்காரி அப்படி எந்த ஆசையும் தனக்கு இல்லை என்று பதிலளித்துள்ளார். #NitinGadkari
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி பிரதமர் பதவிக்கு வரக்கூடும் என ஊக செய்திகள் வெளியாகி உள்ளன.



    இதுபற்றி அவரிடம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியது.

    அப்போது அவர், ‘‘நான் எந்த கணக்கும் போட வில்லை. இலக்குகளும் நிர்ணயிக்கவில்லை. இது அரசியலுக்கும் பொருந்தும், எனது பணிகளுக்கும் பொருந்தும். எனக்கு என்று ஒதுக்கப்பட்டதை நிறைவேற்றி உள்ளேன். நாட்டுக்கு என்னால் ஆன சிறந்தவற்றை செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்’’ என பதில் அளித்தார்.

    மேலும், ‘‘பிரதமர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் அந்த எண்ணம் இல்லை. நாடு தான் எனக்கு பெரியது. எனக்கு கனவுகள் இல்லை. நான் யாரிடமும் போய் நிற்க மாட்டேன். ஆதரவு தேடவும் மாட்டேன். நான் போட்டியிலும் இல்லை. நான் இதை எனது இதயத்தில் இருந்து சொல்கிறேன்’’ எனவும் கூறினார். #NitinGadkari
    ×