search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM"

    • மக்கள் தொகையில் 4 லட்சம் பேர் மட்டுமே கொண்டது ஐஸ்லேண்டு
    • அனைத்து பணிகளும் வேலைநிறுத்தத்தால் முடங்கி போனது

    வட அட்லான்டிக் பகுதியில் உள்ள வட ஐரோப்பிய நாடு, ஐஸ்லேண்டு (Iceland). இதன் தலைநகர் ரெக்ஜேவிக் (Reykjavik). "லேண்ட் ஆஃப் ஃபையர் அண்ட் ஐஸ்" (land of fire and ice) என அழைக்கப்படும் இந்நாடு, சுமார் 4 லட்சம் பேரை கொண்ட தனித்தீவு நாடாகும்.

    எரிமலை, பனிப்பாறைகள் என இயற்கை அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஐஸ்லேண்டில் ஆண்கள் பெறும் ஊதியத்தை விட 21 சதவீதம் குறைவாகவே பெண்கள் ஊதியம் பெறுகின்றனர். சுகாதார பணிகள், தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகளில் பெண்களுக்கு ஊதியம் இன்னும் குறைவாக உள்ளது. 1975லிருந்து இது குறித்து 7 முறை போராட்டங்கள் நடத்தியும் அரசாங்கம் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அந்நாட்டில் பெண்கள் அமைப்பினர் மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து நேற்று, இந்நாட்டின் தலைநகரில் உள்ள அர்னார்ஹால் (Arnarholl) மலை மற்றும் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்தின் விளைவாக பெண்கள் ஈடுபட்டு வந்த பள்ளிக்கூடங்கள், கடைகள், வங்கிகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பல பணிகள் அந்நாட்டில் ஸ்தம்பித்து விட்டன.

    இப்போராட்டத்திற்கு அந்நாட்டின் பெண் பிரதமர் கேத்ரின் ஜேகப்ஸ்டாட்டிர் (Katrin Jakobsdottir) ஆதரவு தெரிவித்து, பணிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவிலிருந்து விலகிட பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன
    • உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது

    இனி இந்தியாவில் டேப்லெட், மடிக்கணினி, மற்றும் அனைத்து வகை கணினிகளையும் இறக்குமதி செய்ய உரிமங்கள் (license) வேண்டும்.

    வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி மடிக்கணி, டேப்லெட், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் அல்ட்ரா ஸ்மால் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை இறக்குமதி செய்ய இனிமேல் உரிமம் வாங்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. சில சிறப்பு சேவைகளை செயல்படுத்த அவசியமான ஒரு சில கணினிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம்.

    பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வெளிநாட்டு மின்னணு பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சியாக இந்த கட்டுப்பாடு வருகிறது.

    சீனாவிலிருந்து விலகி வேறு சில நாடுகளில் தங்கள் உயர்ரக மின்னணு பொருட்களை தயாரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக இருக்கிறார். அதன்படி அரசாங்கத்தின் பல துறைகளுக்கு கொள்கைகளை வகுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    அதன்படி, மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற ஹார்டுவேர் தயாரிப்பாளர்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வகையில் ரூ.170 பில்லியன் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது.

    அரசாங்கத்தின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை பெற விரும்பும் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் வருடாந்திர மின்னணு இறக்குமதியில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளின் இறக்குமதி $60 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபேட் மற்றும் மேக்புக் கணினி வகைகளை இன்னமும் இந்தியாவில் தயாரிக்க தொடங்கவில்லை. இந்த ஊக்கத்தொகைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் அந்நிறுவனத்தை இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கலாம் என கருதப்படுகிறது.

    டெல் டெக்னாலஜிஸ், ஹெச்பி மற்றும் அஸஸ்டெக் போன்ற நிறுவனங்களும் இதனை பயன்படுத்தி தங்கள் கணிணி வகைகளை இங்கு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என கணினி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது போன்ற முயற்சிகளின் விளைவாக உள்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பிறகு, இன்று பங்கு வர்த்தகத்தில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் மின்னணு உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 2% - 5% வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அணிகள் மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பாரதப் பிரதமரின் 9 ஆம் ஆண்டு சாதனை விளக்கும் வகையில் நடைபெற்ற அணிகள் மாநாட்டில் பாஜக பட்டியல் அணி மாநில செயலாளர் அன்பாலாயா சிவகுமார் தலைமையில் பொதுச் செயலாளர்கள் வருண் காந்தி,முக்தா சரவணன், இளங்கோவன், கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி ஜெயபால் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பாஜக அரசின் பாரத பிரதமரின் 9 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு விளக்கினர். இந்த மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அணிகள் தலைவர்கள் பிரவீண் குமார், சரத்குமார், நாகராஜ்,ராஜன், பிரபாகரன், கலாவதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நந்தன்,கோட்டி, பொதுச் செயலாளர் பொன்.பாஸ்கர்,முத்துராஜ்,பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார், பொது செயலாளர் கோகுல், ரமேஷ்,பொருளாளர் பாலாஜி பொன்னேரி நகர பட்டியல் அணி தலைவர் டி.ஹரிதாஸ், பாஜக நிர்வாகிகள் மகேஷ்வரி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சித்திரை திங்கள் பிறப்பையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். #Presidentextend #PMextend #தமிழ்புத்தாண்டு
    புதுடெல்லி:

    தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்களது புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

    நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழர்களுக்கு தங்களது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.



    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.





    பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மடல் வடிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்; அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரைத்துரை, விளையாட்டுத்துறை பிரமுகர்களும் தங்களது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். #Presidentextend  #PMextend #PMModi #TamilNewYear #NewYearGreetings #தமிழ்புத்தாண்டு
    செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை குறித்து தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதில், தேர்தல் விதிமீறல் இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Modi #MissionShaktiSpeech #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை மதியம் திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி இருப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை பற்றி விசாரணை நடத்த தனிக்குழு ஒன்றை தேர்தல் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தியது.

    தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் ஆல் இண்டியா ரேடியோ உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதன் பேரில் தூர்தர்சனும், ஆல் இண்டியா ரேடியோவும் விளக்கம் அளித்தன.



    இதற்கிடையே பிரதமர் மோடி, தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் பேச தங்களிடம் எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா இந்த தகவலை கூறினார்.

    பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையில் விதிமீறல் உள்ளதா? என்று தேர்தல் ஆணையம் இரண்டு நாட்கள் ஆய்வு செய்தது. இதற்கான குழுவும் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், மோடியின் உரையில் விதிமீறல் உள்ளதா? என்பது தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையில் எந்த நடத்தை விதிமீறலும் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

    பின்னர் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தியது தொடர்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதில் விதிமீறல் இல்லை என அறிவித்தது. #Modi #MissionShaktiSpeech #ElectionCommission 
    மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தின்போது கூறினார். #LokSabhaElections2019 #Vaiko
    விழுப்புரம்:

    விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை ஆதரித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜனநாயகமா?, பாசிசமா? என்ற கேள்விக்கு விடைகாணும் தேர்தல் இந்த தேர்தல். ஜனநாயகத்தை பாதுகாக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஒற்றைத்தன்மையை திணிப்பதற்கு கடந்த 5 ஆண்டுகாலத்தில் கேடு விளைவித்தது மத்திய அரசு.

    மேலும் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடு செய்து கொடுத்து தமிழகத்தின் தஞ்சை தரணியை பஞ்சபிரதேசத்திற்கு கொண்டு செல்ல திட்டத்தை வகுத்து கொடுத்தது.

    இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு திட்டங்களுக்காக நிலங்களை அபகரித்து வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, விவசாயிகளை நசுக்குகிறது. இப்படிப்பட்ட மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் வணிகர்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.2 ஆயிரம் கோடி உள்ளது. அதனை விவசாயிகளுக்கு பெற்றுத்தர ஊழல் நிறைந்த அரசு தயாராக இல்லை. மத்திய அரசின் வஞ்சகத்தில் இருந்து தமிழகத்தை காக்க முடியாத அரசு உள்ளது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்களுக்காக நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    பருப்பு கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல், உள்ளாட்சி துறையில் டெண்டர் விடுவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் ஊழல், குட்கா ஊழல் இப்படி எங்கும் ஊழல் நிறைந்துள்ளது. இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

    மருத்துவமனைகளுக்கு சென்றால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. நோயுடையவரின் ரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை நடந்துள்ளது. தற்போது ஓசூர் உள்ளிட்ட இடங்களில் ரத்தம் ஏற்றப்பட்ட 15 கர்ப்பிணிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும், கல்விக்கடன், விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Vaiko

    பிரதமர் பதவி மீது ஆசையா? என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி நிதின் கட்காரி அப்படி எந்த ஆசையும் தனக்கு இல்லை என்று பதிலளித்துள்ளார். #NitinGadkari
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி பிரதமர் பதவிக்கு வரக்கூடும் என ஊக செய்திகள் வெளியாகி உள்ளன.



    இதுபற்றி அவரிடம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியது.

    அப்போது அவர், ‘‘நான் எந்த கணக்கும் போட வில்லை. இலக்குகளும் நிர்ணயிக்கவில்லை. இது அரசியலுக்கும் பொருந்தும், எனது பணிகளுக்கும் பொருந்தும். எனக்கு என்று ஒதுக்கப்பட்டதை நிறைவேற்றி உள்ளேன். நாட்டுக்கு என்னால் ஆன சிறந்தவற்றை செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்’’ என பதில் அளித்தார்.

    மேலும், ‘‘பிரதமர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் அந்த எண்ணம் இல்லை. நாடு தான் எனக்கு பெரியது. எனக்கு கனவுகள் இல்லை. நான் யாரிடமும் போய் நிற்க மாட்டேன். ஆதரவு தேடவும் மாட்டேன். நான் போட்டியிலும் இல்லை. நான் இதை எனது இதயத்தில் இருந்து சொல்கிறேன்’’ எனவும் கூறினார். #NitinGadkari
    கர்நாடகாவில் மத சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஒட்டு போட்டு 22 தொகுதிகளை கைப்பற்றினால் தேவேகவுடா பிரதமர் ஆவார் என குமாரசாமி கூறியுள்ளார். #kumaraswamy #DeveGowda
    மாண்டியா:

    கர்நாடகா மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கர்நாடக முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவருமான குமாரசாமி மாண்டியாவில் ரூ.5 ஆயிரம் கோடி நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இது அவரது தேர்தல் பிரசார தொடக்கமாக கருதப்படுகிறது. விழாவில் குமாரசாமி பேசியதாவது:-

    கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் பிரதமராகும் உகந்த சூழ்நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஒட்டு போட்டு 22 தொகுதிகளை கைப்பற்றினால் கர்நாடகாவை சேர்ந்தவர் பிரதமர் நாற்காலியில் அமரலாம். 1996-ல் இருந்த அரசியல் சூழ்நிலை போலவே தற்போது உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். தனது தந்தையான தேவேகவுடா மீண்டும் பிரதமர் பதவிக்கு தயாராக இருப்பதாக குமாரசாமி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். தேவேகவுடா 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரை பிரதமராக பணியாற்றினார். #kumaraswamy #DeveGowda
    பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாரதீய ஜனதாவை தேர்ந்தெடுத்தால் வளர்ச்சிப்பணிகள் தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். #BJP #NarendraModi
    வாரணாசி:

    பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதிக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக நேற்று சென்றார்.

    அங்கு அவர் 15, 16-ம் நூற்றாண்டில் பிரபலமாக விளங்கிய பக்தி இயக்கத்தை சேர்ந்த குரு ரவிதாஸ் பிறப்பிட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டிலேயே முதன்முதலாக டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றி இயக்கப்படுகிற ரெயிலை அவர் பச்சைக்கொடியசைத்து தொடங்கியும் வைத்தார்.

    இதையொட்டி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நடந்த இந்த விழாவிலும், தொடர்ந்து ஒரு பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் இங்கு வந்தேன். குருவின் ஆசிகளைப் பெற்றேன். நாம் அனைவரும் குரு ரவிதாஸ் காட்டிய பாதையை பின்பற்றினால், நமது சமூகத்தில் பெருமளவுக்கு ஊழல் இருக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நடக்காமல் போய் விட்டது.

    குரு ரவிதாஸ், சாதியின் அடிப்படையில் எந்த விதமான பாகுபாடும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். சாதிய பாகுபாடு இருக்கிறவரையில், மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாது. சமூக நல்லிணக்கம் சாத்தியப்படாது. சமத்துவம் உறுதி செய்ய முடியாது.

    தங்களது சுய நலத்துக்காக சாதி பாகுபாடுகளை உருவாக்கி, அதை மேம்படுத்துகிறவர்களை மக்கள் அடையாளம் காட்ட வேண்டும்.

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாதி பாகுபாட்டினை இப்போது வரை சமூகத்தில் இருந்து ஒழித்துக்கட்ட முடியவில்லை. புதிய இந்தியா இதில் மாற்றத்தைக் காணப்போகிறது. இளைஞர்களுக்கு உதவப்போகிறது. ஏழை மக்களுக்கு நாங்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் கண்ணியமாக வாழ வழி பிறந்துள்ளது.

    ஊழல்வாதிகளை எங்கள் அரசு தண்டிக்கிறது. நேர்மையானவர்களுக்கு பரிசு அளிக்கிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பலம் வாய்ந்த எங்கள் அரசை தேர்ந்தெடுத்தீர்கள். அதன் காரணமாக இந்த நாடு முன்னேற்றத்தை கண்டது. நீங்களும் சமூக, பொருளாதார நிலையில் முன்னேறுவதற்கு பல திட்டங்களைப் பெற்று பலன்அடைந்தீர்கள். அதே போன்று வரக்கூடிய தேர்தலிலும் நீங்கள் செயல்பட வேண்டும். பாரதீய ஜனதாவை தேர்ந்தெடுத்தால், வளர்ச்சிப்பணிகள் தொடரும்.

    காங்கிரஸ் ஆட்சியின்போது கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறியது போன்று நடைபெறவில்லை. அது போலியானது என்பதை மக்கள் அம்பலப்படுத்த வேண்டும்.

    இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு, வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நல்லதொரு உதாரணம். ஆனால் அதையும் சிலர் விமர்சிப்பது வேதனை அளிக்கிறது.

    இப்படிப்பட்டவர்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் பதவி வகிக்க அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார். அவர் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன் என்று லல்லுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். #Rahulgandhi #TejashwiYadav
    பாட்னா:

    பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி நடந்து வந்தாலும் அது முழுமையான வெற்றியை பெறவில்லை.

    குறிப்பாக உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு மாற்றாக மாயாவதி- அகிலேஷ் யாதவ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதுபோன்ற நிலை பல மாநிலங்களில் நிலவுகிறது. மேலும் எதிர்க்கட்சி அணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராவதை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகவுடாவும் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.

    மற்றபடி எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இதுசம்பந்தமாக எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் சாதித்து வந்தனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள லல்லுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் இப்போது ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட மாநாடு பீகார் தலைநகரம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அந்த கூட்டத்தில் லல்லுபிரசாத்தின் மகனும் தற்போது கட்சியை நடத்தி வருபவருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    ராகுல்காந்தி பிரதமர் பதவி வகிக்க அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார். அவர் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன்.

    ஆனால் அவருக்கு ஒரு முக்கியமான கடமை ஒன்று உள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும்.

    எதிர்க்கட்சிகளும், ஒருசில கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரே குடையின் கீழ் வரவேண்டும். நமது ஒரே இலக்கு பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது என்பது மட்டுமாகவே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Rahulgandhi #TejashwiYadav

    ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தரும் போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த போவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu

    நகரி:

    ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமானது. இதையடுத்து ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதற்காக ஆந்திர மக்கள் போராடி வருகிறார்கள்.

    இதற்கிடையே மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அன்று முதல் பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் வருகிற 6-ந்தேதி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.


    அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அனந்தபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசியதாவது:-

    ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து பெற பிரதமர் மோடியை 29 முறை சந்தித்து பேசினேன். ஆனால் சிறப்பு அந்தஸ்து தரவில்லை. குஜராத்தை விட ஆந்திரா முன்னேறி விடக்கூடாது என்று நினைக்கிறார்.

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை சந்தித்த போது கூட அவரை பெயரை சொல்லி தான் அழைத்தேன். ஆனால் பிரதமர் மோடியை மாநில சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மிக மரியாதையாக சார் என்று அழைத்தேன். ஆனால் அவர் சிறப்பு அந்தஸ்து தராமல் ஏமாற்றி விட்டார்.

    பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பழி வாங்கப்படுகிறார்கள். அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற சோதனைகள் தொடுக்கப்படுகின்றன.

    இது எனது கட்சிக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல. ஆந்திர மக்கள் மீது மோடி நடத்தும் தாக்குதல்.

    ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வருகிறார்.

    அவரது வருகையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பொதுமக்களும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் போராட்டம், எதிர்ப்பு பேரணி ஆகியவற்றை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ChandrababuNaidu

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MKStalin #MamataBanerjee
    கொல்கத்தா:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசுகையில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுலை முன் மொழிந்தார்.

    எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி இன்னமும் முழுவடிவத்துக்கு வராத நிலையில், மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு எதிராக மாறுபட்ட கருத்துக்கள் வெளியானது.

    சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் மு.க.ஸ்டாலின் கருத்தை ஏற்க மறுத்தன. பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இதுபற்றி பேசிக் கொள்ளலாம் என்று இந்த கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தனர்.



    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் மு.க.ஸ்டாலின் கருத்தை ஏற்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் மு.க.ஸ்டாலின் கூறியதை ஏற்க மறுத்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தாவில் அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபற்றி விவாதிக்க தற்போது சரியான நேரமும் இல்லை.

    எதிர்க்கட்சி கூட்டணியில் நான் மட்டுமே அல்ல. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்படும் ஒருமித்த முடிவின்படியே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

    நிச்சயமாக மாற்றம் வரும். அந்த மாற்றத்துக்கான நேரம் வரும்வரை நாம் காத்து இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னால் அது எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி விடக்கூடும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரும் இப்போதே பிரதமர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது என்று கூறி உள்ளனர். இதனால் ராகுலை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் கருத்தை ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஏற்க மறுத்து விட்டது தெரிய வந்து உள்ளது. #ParliamentaryElection #MKStalin #MamataBanerjee
    ×