search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் பாரத பிரதமரின் 9ஆம் ஆண்டு சாதனை விளக்கும் அணிகள் மாநாடு
    X

    பொன்னேரியில் பாரத பிரதமரின் 9ஆம் ஆண்டு சாதனை விளக்கும் அணிகள் மாநாடு

    • மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அணிகள் மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பாரதப் பிரதமரின் 9 ஆம் ஆண்டு சாதனை விளக்கும் வகையில் நடைபெற்ற அணிகள் மாநாட்டில் பாஜக பட்டியல் அணி மாநில செயலாளர் அன்பாலாயா சிவகுமார் தலைமையில் பொதுச் செயலாளர்கள் வருண் காந்தி,முக்தா சரவணன், இளங்கோவன், கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி ஜெயபால் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பாஜக அரசின் பாரத பிரதமரின் 9 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு விளக்கினர். இந்த மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அணிகள் தலைவர்கள் பிரவீண் குமார், சரத்குமார், நாகராஜ்,ராஜன், பிரபாகரன், கலாவதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நந்தன்,கோட்டி, பொதுச் செயலாளர் பொன்.பாஸ்கர்,முத்துராஜ்,பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார், பொது செயலாளர் கோகுல், ரமேஷ்,பொருளாளர் பாலாஜி பொன்னேரி நகர பட்டியல் அணி தலைவர் டி.ஹரிதாஸ், பாஜக நிர்வாகிகள் மகேஷ்வரி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×