என் மலர்
நீங்கள் தேடியது "India Open Badminton"
- அன் சே-யங் ஏற்கனவே 2023 மற்றும் 2025-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் ஜியி- தென்கொரியாவின் அன் சே-யங் உடன் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் தென்கொரிய வீராங்கனையின் ஆட்டத்திற்கு வாங் ஜியி-யால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அன் சே-யங் 21-13, 21-11 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இவர் ஏற்கனவே 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். கடந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மொத்தம் 3 முறை டெல்லி ஓபனை வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தைவானைச் சேர்ந்த லின் சுன்-யி இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜோனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் லின் 21-10, 21-18 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் லின் சூ யீ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-17 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-13, 21-18 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் யமஷிதா-மிடோரிகவா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக் ஜோடி முதல் செட்டை 27-25 என கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் ஜோடிஅடுத்த இரு செட்களை 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் நிஷிமோட்டோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-19, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய்வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் லீ செக் யூ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பி.வி. சிந்து முதல் கேம்-ஐ 22-20 எனக் கைப்பற்றினார்.
- அதன்பின் 12-21, 15-21 என 2-வது மற்றும் 3-வது கேம்களை இழந்தார்.
இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி. சிந்து, முதல் சுற்றில் வியட்நாமின் துய் லிங் நகுயென்னை எதிர்கொண்டார். இதில் 68 நிமிடங்கள் போராடி பி.வி. சிந்து தோல்வியை சந்தித்தார். முதல் கேம்-ஐ 22-20 எனக் கைப்பற்றினார். அதன்பின் 2-வது மற்றும் 3-வது கேம்களில் 12-21, 15-21 என தோல்வியை சந்தித்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இந்தியாவின் மற்றொரு வீரரான தருண் மன்னேபல்லியை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிடாம்பி 15-21, 21-6, 21-19 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மாளவிகா பன்சாத் சீன தைபேயின் யு போவை 21-18, 21-19 என வீழ்த்தினார்.
அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் 3 ஜோடிகள் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்தன.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, தாய்லாந்தின் ஒர்னிச்சா சோங்சதாபோர்ன்–பார்ன் சுகிதா சுவாச் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற நேர் செட்டில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இதேபோல், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-ஹரிகரன் அம்ச கருணன் ஜோடி 21-15, 21-18 என்ற நேர் செட்டில் மலேசியாவின் ஓங் யீ சின்-டியோ ஈ யி ஜோடியை வெளியேற்றியது.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான ஆயுஷ் ஷெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.
- நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் வென்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுபநிடா கேட்டோங் ஆகியயோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் 14-21, 20-22 என்ற கணக்கில் சுபநிடா கேட்டோங் வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து இந்திய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பில்ட்டை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-17, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- இன்று நடந்த போட்டியில் ஶ்ரீகாந்த் கிடாம்பி, விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் உலக சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 21-14, 21-15 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி, டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் கிடாம்பி 14-21, 19-21 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தியா ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.
- இதில் மலேசியா ஜோடியை வென்று இந்திய ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தலைநகர் டெல்லியில் நடந்துவருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற நேர்செட்டில் மலேசிய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- முதல் செட்டை இந்திய ஜோடி 21-15 எனக் கைப்பற்றியது.
- ஆனால் அடுத்த இரண்டு செட்களையும் இழந்து சாம்பியன் பட்டத்தை தவற விட்டது.
இந்தியா ஓபன் பேட்மிண்டன் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று மாலை ஆண்களுக்கான இரட்டையர் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் ஹியுக் காங்- செயுங் ஜே சியோ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 21-15 என எளிதாக கைப்பற்றியது. ஆனால், 2-வது செட்டை 11-21 என இழந்தது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் இந்திய ஜோடி சிறப்பாக விளையாடியது. என்ற போதிலும் 3-வது செட்டை 18-21 என இழந்தது. இதனால் சாத்விக் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டு 2-வது இடத்தையே பிடித்தது.






