என் மலர்
நீங்கள் தேடியது "Syed Modi Badminton"
- இந்த ஆட்டம் 1 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.
- இதில் ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 49 ஷாட்டுகள் அடித்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த திரில்லிங்கான ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 16-21, 21-8, 20-22 என்ற செட் கணக்கில் ஜாசன் குனவானிடம் (ஹாங்காங்) போராடி தோற்றார். இதில் கடைசி செட்டில் 20-20 என்று வரை சமனிலை நீடித்தது. இறுதியில் கடைசி இரு புள்ளிகளை தனதாக்கி குனவான் வெற்றிக்கனியை பறித்தார். இந்த ஆட்டம் 1 மணி 7 நிமிடங்கள் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹினா அகேச்சி (ஜப்பான்) 21-16, 21-14 என்ற நேர் செட்டில் நேஸ்லிஹான் அரினை (துருக்கி) வீழ்த்தி மகுடம் சூடினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் திரிசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 17-21, 21-13, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் காகோ ஒசாவா- மை தனாபே ஜோடியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
இந்த ஆட்டம் 1 மணி 16 நிமிடங்கள் நீடித்தது. இதில் ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 49 ஷாட்டுகள் அடித்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது. திரிசா- காயத்ரி ஜோடிக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது.
- ஆண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரியான்ஷு ரஜாவத் மோதினர்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரியான்ஷு ரஜாவத் மோதினர்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் 21-14, 21-4 என்ற செட் கணக்கில் கிடாம்பி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மஞ்சுநாத்- மன்ராஜ் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் மஞ்சுநாத் 21-18, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி- மலேசியாவின் செங் சூ ஹை- தன் ஜிங் யீ ஜோடி உடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 19-21 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 22-20, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, சக நாட்டு வீராங்கனை அன்மோல் கார்பை 21-17, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஈஷா சர்மாவை 21-10, 12-21, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
பி.வி.சிந்து காலிறுதியில் சீனாவின் டாய் விங்கை எதிர்கொள்கிறார்.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறினார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், இஸ்ரேலின் டேனில் டுபோவென்கோவை 21-14, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
லக்ஷயா சென் காலிறுதியில் சகநாட்டு வீரர் லுவாங் மைனமை எதிர்கொள்கிறார்.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் டாய் விங்கை 21-15, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பி.வி.சிந்து அரையிறுதியில் சக நாட்டு வீராங்கனையான உன்னாட்டி ஹூடாவை எதிர்கொள்கிறார்.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி இந்தியாவின் லக்ஷயா சென், சக நாட்டு வீரர் லுவனக் மைனமை 21-8, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், வியட்நாமின் டாங் நுயெனுடன் மோதினார். இதில் ரஜாவத் 21-13, 21-8 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.






