என் மலர்
நீங்கள் தேடியது "Srikanth Kidambi"
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது.
- ஆண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரியான்ஷு ரஜாவத் மோதினர்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரியான்ஷு ரஜாவத் மோதினர்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் 21-14, 21-4 என்ற செட் கணக்கில் கிடாம்பி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மஞ்சுநாத்- மன்ராஜ் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் மஞ்சுநாத் 21-18, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, தைவானின் லீ சியா ஹோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-19, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
- இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி அடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் எஸ்.எப்.லீ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய லீ 21-11, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யூஷி தனாகாவுடன் மோதினார்.
- ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யூஷி தனாகாவுடன் மோதினார்.
இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு BWF தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.
32 வயதான ஸ்ரீகாந்த், 2021 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்களுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
- பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார்.
கோலாலம்பூர்:
மொத்தம் ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.
ஆண்களுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். சக நாட்டவர்களான சங்கர் சுப்பிரமணியன், தருண் மன்னிபல்லி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
இதேபோல் பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார்.
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வென்றார்.
பாசெல்:
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.
இதில் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2-வது சுற்றில் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.
- இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- இன்று நடந்த போட்டியில் ஶ்ரீகாந்த் கிடாம்பி, விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் உலக சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 21-14, 21-15 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி, டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் கிடாம்பி 14-21, 19-21 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி சீன வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் மலேசியா வீரரை எதிர்கொண்டார்.
ஜெகார்த்தா:
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் மலேசிய வீரரை 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதேபோல், மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரீகாந்த் கிடாம்பியை நாளை எதிர்கொள்கிறார்.
- ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 20-22, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் கனடாவின் மிட்செல்லியை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். இந்த ஆட்டம் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டாவது சுற்றில் பிவி சிந்து
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட்டில் சோவ் டைன் சென்னை (சீன தைபே) தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இஸ்ரேல் வீரர் டேனில் டுபோவென்கோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் கிடாம்பி, ஹாங்காங் வீரரை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரணோய் 11-21, 14-21 என இந்தோனேசிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இளம் வீராங்கனையான வைஷ்ணவி ரெட்டியும் தோல்வியடைந்தார்.
ஜப்பான் வீரரின் ஆட்டத்திற்கு ஸ்ரீகாந்த் கிதாம்பியால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 9-21 என இழந்த ஸ்ரீகாந்த், 2-வது செட்டை 11-21 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

கடந்த வாரம் நடைபெற்ற ஜப்பான் ஓபனில் கென்டோ மொமோட்டா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






