search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srikanth Kidambi"

    • ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

    பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 20-22, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் கனடாவின் மிட்செல்லியை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். இந்த ஆட்டம் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டாவது சுற்றில் பிவி சிந்து

    ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட்டில் சோவ் டைன் சென்னை (சீன தைபே) தோற்கடித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

    • இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி சீன வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் மலேசியா வீரரை எதிர்கொண்டார்.

    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் மலேசிய வீரரை 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    இதேபோல், மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரீகாந்த் கிடாம்பியை நாளை எதிர்கொள்கிறார்.

    • இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • இன்று நடந்த போட்டியில் ஶ்ரீகாந்த் கிடாம்பி, விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் உலக சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 21-14, 21-15 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி, டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் கிடாம்பி 14-21, 19-21 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #ChinaOpen
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி முதல் சுற்றில் பிரான்ஸின் லூகாஸ் கார்வீயை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-12, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதில் இந்தோனேசியாவின் டாமி சுகியார்ட்டோவை எதிர்கொள்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரணோய் 11-21, 14-21 என இந்தோனேசிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இளம் வீராங்கனையான வைஷ்ணவி ரெட்டியும் தோல்வியடைந்தார்.
    சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட்டில் தோல்வியடைந்து வெளியேறினார். #ChinaOpen2018
    சீனா ஓபன் பேட்மிண்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஜப்பானின் கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார்.

    ஜப்பான் வீரரின் ஆட்டத்திற்கு ஸ்ரீகாந்த் கிதாம்பியால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 9-21 என இழந்த ஸ்ரீகாந்த், 2-வது செட்டை 11-21 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.



    கடந்த வாரம் நடைபெற்ற ஜப்பான் ஓபனில் கென்டோ மொமோட்டா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று பேட்மிண்டன் ஆட்டங்கள் நடைபெற்றன. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி ஹாங் காங்கின் கி வின்சென்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் 6-ம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பிக்கு ஹாங் காங் வீரர் கடும் சவாலாக விளங்கினார்.



    இதனால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே சென்றது. இறுதியில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-23 என இழந்தார். 2-வது செட்டையும் 19-21 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார். ஹாங் காங் வீரர் 40 நிமிடத்தில் ஸ்ரீகாந்த் கிதாம்பியை வீழ்த்தினார்.
    மலேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட்டில் பிரான்ஸ் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #MalaysiaOpen2018
    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டேஸை எதிர்கொண்டார்.



    இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த் கிதாம்பி 22-18, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 11-ம் நிலை வீரரான கென்டோ மோமொட்டாவை எதிர்கொள்கிறார்.
    ×