என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satwik-Chirag"

    • மலேசிய ஜோடியை நேர்செட் கேமில் வீழ்த்தியது.
    • மலேசிய ஜோடி 11-5 என சாத்விக்-சிராக் ஜோடிக்கு எதிராக வலுவான ரெக்கார்டு வைத்துள்ளது.

    சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- ஷோ வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-17, 21-14 என நேர்செட் கேமில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    மலேசிய ஜோடி முன்னாள் உலக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது. இந்திய ஜோடிக்கு எதிராக 15 போட்டிகளில் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. எனினும் இன்றைய போட்டியில் இந்திய ஜோடியிடம் தோல்வியடைந்தது.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொரிய ஜோடியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக இந்திய ஜோடி ஹாங் காங் ஓபனில் 2ஆவது இடம் பிடிததது.

    • மலேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
    • சீன-தைபே ஜோடியை எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    சீனா மாஸ்டர் பேட்மிண்டனில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி நேர்செட் கேமில் வெற்றி பெற்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன-தைபேயின் சியு-வாங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-13, 21-12 என எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    அதுபோல் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பி.வி. சிந்து தாய்லாந்தின் சோச்சுவாங்கை 21-15, 21-15 என வீழ்த்தினார். சோச்சுவாங்கிற்கு எதிராக பி.வி. சிந்துவின் வெற்றி 6-5 என உள்ளது.

    முன்னதாக, மலேசிய ஜோடியான ஜுனைதி ஆரிஃப்- ராய் கிங் யாப்பை 24-22, 21-13 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    முதல் கேமில் இந்தியா- மலேசியா ஜோடிகள் மாறிமாறி புள்ளிகள் பெற்றன. இதனால் இறுதி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சென்றது. இறுதியாக இந்திய ஜோடி 24-22 என முதல் கேமை வென்றது.

    2ஆவது கேமில் 5-5 என சமநிலையில் இருந்து நிலையில், இந்திய ஜோடி 11-6 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் மலேசிய ஜோடியால் இந்திய ஜோடியை முந்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    என்றபோதிலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    சாத்விக்- சிராஜ் ஜோடி கடந்த வாரம் நடைபெற்ற ஹாங்காங் ஓபனில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிராஸ்ட்டோ ஜோடியும் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அடைந்தது.

    • ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தாய்லாந்தின் பக்காபொன் தீரரசாகுல்-சுக்புன் ஜோடி

    உடன் மோதியது.

    இதில் தாய்லாந்து ஜோடி முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-11 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    இன்று நடைபெறும் காலிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி மலேசிய ஜோடியை சந்திக்கிறது.

    • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

    மக்காவ்:

    மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் சூங் ஹோன் ஜியான் - முகமது ஹைகல் ஜோடி உடன் மோதியது.

    இதில் 21-14 என முதல் செட்டை மலேசியா ஜோடி வென்றது. 2வது செட்டை இந்திய ஜோடி 21-13 என கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மலேசியா ஜோடி 22-20 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
    • இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி,

    இந்தோனேசியாவின் பகஸ் மவுலானா-கர்னாண்டோ ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
    • இதில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா-கென்யா மிட்சுஹாஷி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-13, 21-9 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • இந்திய ஜோடி காலிறுதியில் உலகின் நம்பர் 1 ஜோடியை வீழ்த்தியது.
    • அரையிறுதியில் இந்திய ஜோடி கொரிய ஜோடியுடன் மோதியது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியை எதிர்கொண்டது.

    இந்தப் போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கொரியா வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதன்மூலம் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    • பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வென்றார்.
    • இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதற்கிடையே, பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானை

    21-8, 22-20 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, பிரான்சின் லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
    • ஹாக்கி போட்டியில் ஹர்மன்பிரித் சிங் கோல் மழையால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியான்-முகமது அர்டியாண்டோ ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-13 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • இன்று நடந்த துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றார்.
    • ஹாக்கி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா பெறும் 3வது பதக்கம் இதுவாகும்.

    இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-வூ யிக் சோ ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-13 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக மலேசிய ஜோடி 21-14 என இரண்டாவது செட்டை கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை மலேசிய ஜோடி 21-16 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம்

    இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறியது.

    • கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வென்றது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் லு மிங் சே-டாங்க் கை வே ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 21-10 என இந்திய ஜோடி வென்றது. இரண்டாவது செட்டை தைவான் ஜோடி 21-16 என கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இந்திய ஜோடி 21-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    ×