என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "badminton player"

    • காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
    • 2025-ம் ஆண்டின் மீதமுள்ள அனைத்து சுற்றுப்பயண போட்டிகளிலிருந்து சிந்து விலகியுள்ளார்.

    இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் 2025-ம் ஆண்டின் மீதமுள்ள அனைத்து BWF (Badminton World Federation) சுற்றுப்பயண போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார். அவரது காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    அவர் ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கு முன்பு காலில் காயம் அடைந்தார். இது முழுமையாக குணமடையாததால், மீதமுள்ள 2025 போட்டிகளிலிருந்து விலக முடிவு செய்தார்.

    இந்த விலகல் 2025 ஆண்டின் இறுதி வரை பொருந்தும், மேலும் அவர் மறுவாழ்வு மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்த உள்ளார். இந்த முடிவு எளிதானது அல்ல, ஆனால் நீண்டகால உடற்தகுதிக்கு அவசியமானது" என்று சிந்து தெரிவித்துள்ளார்.

    • அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக இந்தோனேசிய பேட்மிண்டன் சங்கள் தெரிவித்துள்ளது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சீனாவை சேர்ந்த 17 வயது இளைஞரான ஜாங் ஜிஜி, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி கீழே விழுந்தார். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

    பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவர் கீழே விழுந்து கிட்டதட்ட 40 வினாடிகள் கழித்தே மருத்துவர்கள் அவரை சோதனை செய்வது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. உடனே மருத்துவர்கள் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து சோதனை நடத்தி இருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாமா என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

    இதனையடுத்து அதிகாரிகளின் கேள்விக்கு, அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்ததாக இந்தோனேசிய பேட்மிண்டன் சங்கள் தெரிவித்துள்ளது.

    • இது தொடர்பான வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    • விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.

    ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோவின் மூலம் விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.

    ×