என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nursing Home"

    • பல முதியவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
    • தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகினர்.

    இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    அங்கு, வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் 'வெர்தா தாமய்' என்ற முதியோர் இல்லம் இயங்கி வந்தது.

    நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் முதியோர் இல்லத்தில் திடீரென தீப்பிடித்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான முதியவர்கள் தங்கள் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்ததால், தீ பரவியதை அவர்களால் உணர முடியவில்லை. பல முதியவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த சுமார் 30 பேரில் 12 முதல் 15 பேர் வரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் 16 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் தற்போது அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கடந்த டிசம்பர் 9 அன்று தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியான நிலையில், தற்போது இந்த முதியோர் இல்ல விபத்து இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஜெயலலிதா பிறந்தநாள் முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பின்னர் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    அவனியாபுரம்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் ஓ.பி.எஸ். அணி மாநில இளைஞரணி செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் ஏற்பாட்டில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கலந்துகொண்டு முதியோர் இல்லத்திற்கு தேவையான கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

    பின்னர் முதியோர் களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.எஸ்.டி. மனோகரன், மாணவரணி மாவட்ட செயலாளர் பிரபாகர், பகுதி செயலாளர்கள் ஆட்டோ கருப்பையா, கண்ணன் மகாலிங்கம், பொதுகுழு உறுப்பினர் பவுன்ராஜ், வட்ட செயலாளர்கள் நாச்சியப்பன், கொம்பையா, முத்து, ராஜகோபால், இன்பம்,சாத்தன உடையார், பத்ரி முருகன், திருப்பதி, கமலகண்ணன், கிரி, புல்லட் ராமமூர்த்தி, பெருமாள், பூங்கொடி, முத்து மற்றும் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×