search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஆயுதபூஜை விழா கொண்டாட்டம்
    X

    பொதுமக்களுக்கு இனிப்புகளை போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஆயுதபூஜை விழா கொண்டாட்டம்

    • “ஆயுத பூஜைக்கு ஆயிரம் லட்டுக்கள்” என்ற நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போலீசாரை பொதுமக்கள் எதிரியாக பார்க்க கூடாது, நண்பராகவே பார்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் பணிபுரியும் போலீசார் தினந்தோறும் பாதுகாப்பு பணி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பண்டிகை நாளிலும் குடும்பத்துடன் செலவிட முடியாமல் பணிபுரிந்து வரும் போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான பயிற்சிகள் ஜோதி அறக்கட்டளை சார்பில் போலீசாருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கந்தபுனேணி, தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோரின் ஆலோசனைபடி ஜோதி அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் விதமாக "ஆயுத பூஜைக்கு ஆயிரம் லட்டுக்கள்" என்ற நூதன நிகழ்ச்சி தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை சிக்னல் அருகே தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீசார் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பஸ், ஆட்டோ பயணிகளுக்கு லட்டுகள் வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    பின்னர், போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் பேசுகையில்:-

    காவல்துறையினரை பொதுமக்கள் எதிரியாக பார்க்க கூடாது, நண்பரா கவே பார்க்க வேண்டும், காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பேணும் விதத்தில்நடத்த ப்படும் இது போன்ற நிகழ்ச்சிகளால் பொதும க்களுக்கும், காவல்துறையி னருக்குமி டையே உள்ள இடைவெளி குறையும் என்று தெரிவித்தார் .

    இனிப்புகளை பெற்றுக்கொண்ட பொது மக்கள் காவல்துறையினரின் நூதன முயற்சியை பாராட்டி னர்.

    நிகழ்ச்சியில்போக்கு வரத்து உதவி இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன், போக்கு வரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்கு மார், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்க ட்டளை மேலாளர் ஞானசு ந்தரி உள்ளிட்டோர் செய்தி ருந்தனர்.

    Next Story
    ×