search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers worry"

    • கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்.
    • கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்.

    மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 -ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தென்மேற்கு பருவமழை

    கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. இதனால் முன்கூட்டியே மே மாதம் 24-ல் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்கவில்லை இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    ஏமாற்றம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கும் போது கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது அணையில் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறித்த நாளான நேற்று கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை இதனால் கால்வாய் பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே கர்நாடகா அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நிலுவையில் உள்ள தண்ணீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்வாய் பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • விவசாயிகள் தங்களின் கரும்புகளை எடுத்துச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர் பாகம்பாளையம், சானார் பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், கொத்த மங்கலம், ஆனங்கூர், ஜேடர்பா ளையம், கவுண்டம்பாளையம், திடுமல், சிறு நல்லி கோவில், குரும்பல மகாதேவி, ஜமீன் இளம்பள்ளி ,சோழசிரா மணி, மாரப்பம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயி ரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    வெல்லம் தயாரிப்பு

    விவசாயிகள் தங்களின் கரும்புகளை எடுத்துச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலை களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2800 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்ற னர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியா பாரி களுக்கும், அருகாமை யில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக் கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம். உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,230-க்கும், அச்சு வெல்லம் ரூ.11,70- க்கும் விற்பனையானது.

    தற்போது 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,235-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,200-க்கும் விற்பனை யானது. கரும்பு ஒரு டன் ரூ.2800 வரை விற்பனை யாகிறது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பல் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அபிராமம்

    கடந்த ஆண்டு ராமநாத புரம் மாவட்டம் முழுவதும் பருவமழை பொய்த்ததால் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகையும், வறட்சி நிவாரணமும் இன்று வரை வழங்கப்பட வில்லை. மேலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனையும் இன்றுவரை தள்ளுபடி செய்யவில்லை.

    நெல், உரம், உழவு செய்யும் கூலி உயர்வு காரணமாகவும், வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாகவும் விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருந்ததில் எந்தவித பயனுமில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்கி குவித்து வீட்டுமனைகளாகவும், பிளாட்டுகளாகவும் மாற்றிவிட்டனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் என்பது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கடும் வறட்சி, புயல், வெள்ள சேதம் என்றாலே பாதிக்கப்படுவது நாங்கள் தான். அபிராமம் பகுதியில் நெல், மிளகாய், பருத்தி விவசாயம்தான் அதிகமாக உள்ளது. அதிகமாக மழை பெய்தா லும், வறட்சியானலும் பாதிக்கப்படுவது நாங்கள்தான். விவசாயம் செய்வதற்கு வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் எந்த பயனும் இல்லாததால் விரக்தியில் இருக்கிேறாம்.

    அப்படிபட்ட விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்றார்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40 மற்றும் ரூ.50 என்று விலை இருந்தது.
    • தற்போது விலை கிடுகிடு என குறைந்து கிலோ ரூ.4 க்கு விற்பனை ஆகிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தற்போது முருங்கைகாய் கொத்துக்கொத்தாய் காய்க்கும் சீசன் தொடங்கி உள்ளது.

    பல இடங்களில் திரும்புகின்ற திசைகளில் எல்லாம் பூவும் ,பிஞ்சுமாக முருங்கை மரம் காட்சி தருகிறது. ஆனால் விலை இல்லை. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.4-க்கு தான் கமிஷன் கடையில் தற்போது கொள்முதல் செய்கின்றனர். தினசரி 500 கிலோ முதல் 800 கிலோ வரை உடன்குடியில் இருந்த வெளியூர்களுக்கு ஏற்றுமதி ஆகுகிறது. மதுரை, சென்னை போன்ற வெளியூர்களுக்கு தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40 மற்றும் ரூ.50 என்று விலை இருந்தது. தற்போது விலை கிடுகிடு என குறைந்து விட்டது. முருங்கைக்காய் நன்றாக காய்க்கும் நேரத்தில் விலை இல்லையே என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது பற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது முருங்கை காய்க்கு விலை இல்லை. ஒரு கிலோ ரூ.4-க்கு கொள்முதல் செய்கின்றனர். தற்போது கோடை காலமாக இருப்பதால், மக்கள் அதிகமாக ஆடு, மாடு, கோழிகளை தான் வாங்கி சாப்பிடுகிறார்கள். அதனால் சைவ பொருளான முருங்கைக்காய்க்கு விலை இல்லை. ஆனால் இப்போது முருங்கைமரத்தை பார்த்தால் பூவும், பிஞ்சுமாக தொங்கு கிறது. முருங்கைக் காயை மரத்தில் பறிக்கும் கூலி கூட கட்டுபடி ஆகவில்லை. அதனால் பலர் முருங்கைக்காய் பறிக்காமல் மரத்தில் அப்படியே போட்டு விட்டனர் என்று கூறினார்.

    • பருத்தியை தாக்கும் நோயால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • கோடை காலத்தில் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை இல்லததால் நெல் விவசாயம் பாதிக்கப் பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். காலையில் பனிபொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து ள்ளதால் பருத்தியில் இலை சுருட்டு புழு தாக்குதல் உள்ளது.

    அபிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதியான அச்சங்குளம். தீர்த்தாண்ட தானம் வல்லகுளம் டி.புன வாசல் பள்ளபச்சேரி. அகத்தாரிருப்பு பாப்பனம் பொட்டகுளம் முத்தனேரி வேப்பங்குறிச்சி விரதக்கு ளம் உடைய நாதபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்து ள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய் குளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர் பருத்தி செடிகளை பொருத்தவரை லேசான ஈரப்பதத்திலும் கடும் வறட்சி நேரத்தில் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இதனால் கோடை சாகுபடியாக பருத்த சாகுபடி செய்வதில் அபிராமம் பகுதி விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வந்தாலும் இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாததால் வெயில் கொடுமை அதிகரி த்ததாலும் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் பருத்தியை நோய் தாக்கி வருகிறது.

    குறிப்பாக இலை சுருட்டு புழு நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன் பருத்தியில் இலை சுருட்டு புழு தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • விவசாயிகளின் 10 செம்மறியாடுகளை வெறி நாய்கள் கடித்துகுதறி கொன்றுள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்துள்ள மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான தேர்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களது பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு தொழிலாகும். கோழி மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து அதனை குண்டடம் மற்றும் கன்னிவாடி வாரச்சந்தைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதமாக விவசாயிகள் தங்கள் பட்டியில் அடைத்து வைத்திருக்கும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்தெரியும் வெறி நாய்கள் கடித்து குதறி ஆட்டின் ரத்தத்தை குடித்துவிட்டு சென்று விடுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக மணக்கடவு கிராமத்தில் வெறிநாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று காடுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆடுகளை துரத்தி துரத்தி கடித்து 200-க்கும் மேற்பட்ட ஆடுகளின் ரத்தத்தை குடித்து விடுகிறது. இதனால் அவை செத்தவிடுகின்றன.

    இந்த நிலையில் நாட்டுதுறை, பாலசுப்பிரமணி, அப்பு ஆகிய விவசாயிகளின் 10 செம்மறியாடுகளை வெறி நாய்கள் கடித்துகுதறி கொன்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் ஆர்.டி.ஓ.குமரேசனிடம் நாய்களைப்பிடிக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக கூறி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ.குமரேசன் வெறி நாய்களை பிடிக்க உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நாய்களைப்பிடித்து காப்பகங்களில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்.மேலும் நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்க ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் கோழிகளை திருடும் மர்ம ஆசாமிகளை கண்டறிய அப்பகுதியில் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் மற்றும் கிராமத்தின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து மனு கொடுக்க வந்த விவசாயிகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

    • அபிராமம் பகுதியில் மழை இல்லாததால் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.
    • இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள நீர்தாண்ட அச்சங்குளம், உடையநாதபுரம், நகரத்தார்குறிச்சி, நந்திசேரி, காடனேரி உட்பட பல்வேறு கிராமங்களில் சிறுதானிய பயிர்களான கம்பு, சோளம், குதிரை வாளி , எள் போன்ற பயிர்களை விவசாயம் செய்துவந்தனர் சிறுதானிய பயிர்களுக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுவதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

    அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மழை காலங்களில் தண்ணீர் சேமிக்க பண்ணை குட்டை வெட்டததால் போதிய பருவமழையின்றி சிறுதானிய பயிர்களை கூட காப்பாற்ற முடியத நிலை உள்ளது. இதனால் எள் போன்ற பயிர்களுக்கு கூட மழையை நம்ப வேண்டிய நிலை உள்ளது. அபிராமம் பகுதியில் மகசூல் தரவேண்டிய நிலையில் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.

    இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். போதிய பருவமழை இல்லததால் நெல் பயிர் கருகி வரும் நிலையில், சிறுதானிய பயிர்களும் மழையில்லததால் கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    • களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பத்து விளைநிலங்களில் நேற்று இரவில் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது.
    • வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பத்து விளைநிலங்களில் நேற்று இரவில் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது.

    அவைகள் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றன. இதனால் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயிகள் தெரிவித்தனர். இவைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த 6 மாத வாழைகள் ஆகும்.

    பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை கள் கீழவடகரையை சேர்ந்த விவசாயிகள் பாலன், பூபேஸ் குப்தா, மகேந்திரன் ஆகியோர்களுக்கு சொந்த மனாது ஆகும்.

    வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, களக்காடு பகுதியில் அதிகரித்து வரும் காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மலையடிவார பகுதியில் அரசபத்து, கட்டுவிளை விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் சாகுபடி செய்துள்ளனர்.
    • பயிர் செய்யப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகளை காட்டு பன்றிகள் நாசம் செய்தன.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மலையடிவார பகுதியில் அரசபத்து, கட்டுவிளை விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் சாகுபடி செய்துள்ளனர்.

    இந்நிலையில் இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவில் வனப்பகுதியில் இருந்து வெளி வந்த காட்டு பன்றிகள் கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்தன.

    இதனை பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிகள் கூட்டம் நாலாபுறங்களிலும் இருந்து நுழைந்ததால் விவசாயிகள் திணறினர்.

    மேலும் விவசாயிகளை நோக்கி ஓடி வந்ததால் உயிருக்கு பயந்து விவசாயிகள் பின்வாங்கினர். அதற்குள் பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகளை நாசம் செய்தன.

    இவைகள் மஞ்சுவிளையை சேர்ந்த சில்கிஸ், பிரேட் செல்வின், தங்கராஜ், பாக்கியராஜ், ராஜ், முத்துக்குடி, ஜேம்ஸ் சுந்தர், லுர்கின் ஐசக் உள்பட விவசாயிகளுக்கு சொந்தமானது ஆகும். பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி மஞ்சுவிளையை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் (காங்கிரஸ்) சிம்சோன் துரை கூறுகையில், 'பன்றிகள் அட்டகாசத்தால் தினசரி வாழைகள் நாசமாகி வருகிறது. விளைநிலங்களுக்குள் புகும் பன்றிகளை விரட்ட முடியாமலும், வாழைகளை பாதுகாக்க முடியாமலும் விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர்.

    காட்டு பன்றிகள் தொடர்ந்து வாழைகளை துவம்சம் செய்வதால் 24 மணி நேரம் உழைத்தும் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

    • காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று மாறி உள்ளது.
    • தொடர் மழை காரணமாக வியாபாரிகள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

    கடலூர்:

    மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று மாறி உள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறவும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

    நேற்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, விருதாச்சலம், புவனகிரி ,வடக்குத்து, வேப்பூர் மற்றும் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை விடிய விடிய தொடர்ந்து காலை வரை மழை பெய்து வந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு சாலை ஓரங்களில் பட்டாசு, துணிகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தொடர் மழை காரணமாக வியாபாரிகள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

    இது மட்டுமின்றி தற்போது கடலூர் மாவட்டத்தில் நிலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் கணிசமாக உயர்ந்து வருவதும் காண முடிகிறது இதன் காரணமாக விவசாய வேலைகள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்திற்கு தொடர் மழை காரணமாக ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும் மாடு ஒன்று இறந்து உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு - வடக்குத்து - 73.0, காட்டுமயிலூர் - 50.0, ஆட்சியர் அலுவலகம் - 49.0, கடலூர் - 48.4, லக்கூர் - 30.0, வேப்பூர் - 30.0, குறிஞ்சிப்பாடி - 26.0 , எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 25.0 , ஸ்ரீமுஷ்ணம் - 23.2, விருத்தாசலம் - 22.0, பெல்லாந்துறை - 20.2, பண்ருட்டி - 17.0, லால்பேட்டை - 16.0, வானமாதேவி - 15.0, குப்பநத்தம் - 14.4, கொத்தவாச்சேரி - 14.0, புவனகிரி - 14.0, சேத்தியாதோப்பு- 12.0, மீ-மாத்தூர் - 12.0, பரங்கிப்பேட்டை - 9.0, காட்டுமன்னார்கோயில் - 8.0, தொழுதூர் - 8.0,. சிதம்பரம் - 7.0,ழ்செருவாய் - 5.0, அண்ணாமலைநகர் - 3.0, மொத்தம் - 551.20 மிமீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மூலச்சத்திரம், கேதையெறும்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்னவெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.

    மேலும் தாராபுரம் பகுதியில் அதிக அளவு சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வெங்காயங்கள் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக கேரள மாநிலத்திற்கு அதிகம் அனுப்பி வந்தனர். ஆனால் தற்போது கேரள வியாபாரிகள் கர்நாடக மாநிலம் மைசூர் வெங்காயத்தை அதிகம் விரும்புவதால் ஒட்டன்சத்திரத்தில் ஏற்றுமதி குறைந்துள்ளது.

    மேலும் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ந்துள்ளது. தினசரி 3 ஆயிரம் பைகளுக்கு மேல் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் அதற்கான ஏற்றுமதி இல்லை. மேலும் வியாபாரிகளும் விலை குறைத்தே கேட்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒரு கிலோ ரூ.5-க்கு மட்டுமே விலை கேட்கின்றனர். சாகுபடி செலவு மற்றும் அதனை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது என விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    ஆனால் பறிப்பு கூலிக்குகூட விலை கிடைப்பதில்லை. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் வெங்காயங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல ஆர்வமின்றி காணப்படுகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் வெங்காயம் வரத்து குறைவாக இருந்தது. காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக சற்று உயர்ந்து வந்தது. ரூ.40 முதல் 50 வரை விற்பனையானது. இந்த நிலையில், தற்போது தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம்,  மாரண்டஅள்ளி,  அதகப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் மிதமான விளைச்சல் அடைந்தும், வெளியில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் தற்பொழுது  மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் உள்ளூர் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக  கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை தற்போது குறைந்து கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. மேலும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.20-க்கும் குறைவாகவே வாங்கி செல்கின்றனர். இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும்போது கிலோ ரூ.150 கொடுத்து வாங்கி பயிரிட்டு, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் இதன்மூலம் கிடைக்கும் இலாபத்தை வைத்து அறுவடை செய்யும் ஆட்களுக்கு கூலி கொடுக்கக்கூட முடியவில்லை என வேதனையுடன் கூறுகின்றனர்.
    ×