search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
    X

    தொழிலாளர்கள் வெல்லம் தயாரித்த போது எடுத்த படம்.

    உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • விவசாயிகள் தங்களின் கரும்புகளை எடுத்துச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர் பாகம்பாளையம், சானார் பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், கொத்த மங்கலம், ஆனங்கூர், ஜேடர்பா ளையம், கவுண்டம்பாளையம், திடுமல், சிறு நல்லி கோவில், குரும்பல மகாதேவி, ஜமீன் இளம்பள்ளி ,சோழசிரா மணி, மாரப்பம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயி ரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    வெல்லம் தயாரிப்பு

    விவசாயிகள் தங்களின் கரும்புகளை எடுத்துச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலை களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2800 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்ற னர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியா பாரி களுக்கும், அருகாமை யில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக் கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம். உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,230-க்கும், அச்சு வெல்லம் ரூ.11,70- க்கும் விற்பனையானது.

    தற்போது 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,235-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,200-க்கும் விற்பனை யானது. கரும்பு ஒரு டன் ரூ.2800 வரை விற்பனை யாகிறது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பல் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×