என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் கவலை"
- உபரி நீரில் சாக்கடை நீரும் கலந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் உபரி நீரில் சாக்கடை நீரும் கலந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
பையர்நத்தம் ஊர் ஏரி சுமார்100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி தண்ணீர் முலம் பையர் நத்தம், பள்ளிப்பட்டி, லூர்துபுரம் என சுமார் 3 கிலே மீட்டர் தூரம் வரை கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு, நிலத்தடி நீர் உயர்வுக்கு பெரும் பங்காற்றி வருகின்றது.
சேர்வராயன் மலையி லிருந்து உற்பத்தியாகும் இந்த மீனாற்றில் போதக்காடு என்ற இடத்தில் குறுக்கே தடுப்பணை கட்டி கால்வாய் மூலமாக பையர்நத்தம் ஊர் ஏரிக்கு தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து சில தினங்களுக்கு முன்பு ஏரி அதன் முழு கொள்ளளவை அடைந்தது.
தற்போது உபரி நீர் வாய்க்கால் மூலமாக மோளையனூர் பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு செல்கிறது. தற்போது ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் முறையாக சுத்தம் செய்து, வடிகால்வாய் அமைக்காததால், பையர்நத்தம் பகுதியில் உள்ள கழிவுநீரும் குப்பை கழிவு, பிளாஸ்டிக் கவர்கள், கண்ணாடி பாட்டில் போன்றவை கலந்து விவசாய நிலங்களை பாழ் படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும் இந்த ஏரிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் முன்னதாகவே வந்ததால் நிரம்பியது. அதனைத்தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே ஏரிக்கு வடவாறு வழியாக வரும் தண்ணீர் அணைத்தும் அப்படியே திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் விளைநி லங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கவலைய டைந்தனர். ஏரியின் பாது காப்பு கருதி கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்ம ட்டம் வேகமாக குறைந்தது.
தற்போது மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்கு மட்டும் 65 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும் இந்த ஏரிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் முன்னதாகவே வந்ததால் நிரம்பியது.
அதனைத்தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே ஏரிக்கு வடவாறு வழியாக வரும் தண்ணீர் அணைத்தும் அப்படியே திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் விளைநி லங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கவலைய டைந்தனர். ஏரியின் பாது காப்பு கருதி கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்ம ட்டம் வேகமாக குறைந்தது. தற்போது மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்கு மட்டும் 65 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
- கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன்கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் பொங்கலுக்கு தேவயைான பொருட்கள் வழங்கப்படும்.இது தவிர ரொக்கத்தொகை, வேஷ்டி-சேலையும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஜனவரி 2-ந்தேதி முதல் அந்தந்த ரேசன் கடைகளில் இதனைபெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, நிலக்கோட்டை, ெநாச்சிஓடைப்பட்டி, கூவனூத்து, சாணார்பட்டி, சிலுவத்தூர், அஞ்சுகுழிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த விவசாயிகளிடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 300 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.20ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்திருந்த நிலையில் அரசு வாங்காததால் விளைவித்த கரும்பை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் வியாபாரிகள் நேரடியாக கரும்பு விவசாயிகளிடம் வந்து குறைந்த விலைக்கு வாங்கிச்செல்கின்றனர். வேறு வழியின்றி நஷ்டமடைந்தாலும் அதனை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில்,
ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பராமரித்து கரும்பை காப்பாற்றி வந்தோம். அரசு கொள்முதல் செய்தால் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். விளைச்சல் குறைந்துள்ள போதிலும் தற்போது கிடைத்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வருடம் முழுவதும் கரும்பு விவசாயத்தை நம்பியே ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
ஆனால் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டுவரும் வேளையில் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம் என்றார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் இதனை ஆர்வமுடன் பயிரிட்டு வந்தனர். தற்போது அரசு அறிவித்துள்ள முடிவால் வரும் காலங்களில் கரும்பு விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் போன்ற சராசரி மழையளவு கிடைக்காத மாவட்டங்களில் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே அரசு இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அபிராமம் பகுதியில் மழை இல்லாததால் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.
- இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள நீர்தாண்ட அச்சங்குளம், உடையநாதபுரம், நகரத்தார்குறிச்சி, நந்திசேரி, காடனேரி உட்பட பல்வேறு கிராமங்களில் சிறுதானிய பயிர்களான கம்பு, சோளம், குதிரை வாளி , எள் போன்ற பயிர்களை விவசாயம் செய்துவந்தனர் சிறுதானிய பயிர்களுக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுவதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மழை காலங்களில் தண்ணீர் சேமிக்க பண்ணை குட்டை வெட்டததால் போதிய பருவமழையின்றி சிறுதானிய பயிர்களை கூட காப்பாற்ற முடியத நிலை உள்ளது. இதனால் எள் போன்ற பயிர்களுக்கு கூட மழையை நம்ப வேண்டிய நிலை உள்ளது. அபிராமம் பகுதியில் மகசூல் தரவேண்டிய நிலையில் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.
இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். போதிய பருவமழை இல்லததால் நெல் பயிர் கருகி வரும் நிலையில், சிறுதானிய பயிர்களும் மழையில்லததால் கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
- 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது.
- பெங்களூர், கொச்சி போன்ற வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
அரவேனு,
நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கள் பிரதான தொழிலாக இங்கு உள்ளது. அடிக்கடி மாறிவரும் கால நிலை மாற்றத்தால் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு தண்ணீர் வசதி கிடைப்பதில்லை. விவசாயத்திற்கு தேவையான இடுப்பொருட்கள் உரம், பூச்சிக்கொல்லி, மருந்துகளின் விலை ஏற்றத்தாலும் தரமான காய்கறி விதை கிடைக்காமலும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கேரட் பயிர் 2200 ஹெக்டரிலும், உருளைக்கிழங்கு 1200 ஹெக்டரிலும், கோஸ் 900 ஹெக்டரிலும், மற்ற மலைக்காய்கறி 2700 ஹெக்டரிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகள் மலைக் காய்கறிகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரட் மற்றும் பீட்ரூட் விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெற்றே உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், திருச்சி, சென்னை மற்றும் நெல்லை உள்பட பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுதவிர பெங்களூர், கொச்சி போன்ற வேறு மாநிலங்களுக்கும் கேரட் மற்றும் பீட்ரூட் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது கர்நாடகா மாநிலத்தில இருந்து கேரட், பீட்ரூட் வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீட்ரூட் விலை மிகவும் விலை குறைந்து விட்டது. கடந்த மாதம் வரை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்ற கேரட், பீட்ரூட் தற்பொழுது 20 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனால் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
- நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- விவசாயிகளின் 10 செம்மறியாடுகளை வெறி நாய்கள் கடித்துகுதறி கொன்றுள்ளது.
தாராபுரம் :
தாராபுரத்தை அடுத்துள்ள மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான தேர்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களது பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு தொழிலாகும். கோழி மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து அதனை குண்டடம் மற்றும் கன்னிவாடி வாரச்சந்தைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதமாக விவசாயிகள் தங்கள் பட்டியில் அடைத்து வைத்திருக்கும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்தெரியும் வெறி நாய்கள் கடித்து குதறி ஆட்டின் ரத்தத்தை குடித்துவிட்டு சென்று விடுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக மணக்கடவு கிராமத்தில் வெறிநாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று காடுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆடுகளை துரத்தி துரத்தி கடித்து 200-க்கும் மேற்பட்ட ஆடுகளின் ரத்தத்தை குடித்து விடுகிறது. இதனால் அவை செத்தவிடுகின்றன.
இந்த நிலையில் நாட்டுதுறை, பாலசுப்பிரமணி, அப்பு ஆகிய விவசாயிகளின் 10 செம்மறியாடுகளை வெறி நாய்கள் கடித்துகுதறி கொன்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் ஆர்.டி.ஓ.குமரேசனிடம் நாய்களைப்பிடிக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக கூறி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ.குமரேசன் வெறி நாய்களை பிடிக்க உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நாய்களைப்பிடித்து காப்பகங்களில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்.மேலும் நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்க ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் கோழிகளை திருடும் மர்ம ஆசாமிகளை கண்டறிய அப்பகுதியில் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் மற்றும் கிராமத்தின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து மனு கொடுக்க வந்த விவசாயிகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
- கடந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
- சீசன் துவங்குவதற்கு முன் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்
உடுமலை :
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறந்தும் உரிய பலன் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சீசன் துவங்காத நேரத்தில் கொப்பரை உற்பத்தி குறைந்தும் விலை உயரவில்லை. காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, சாதாரண கொப்பரை கிலோ 80 ரூபாய்க்கும், ஸ்பெஷல் கொப்பரை 82 ரூபாய், தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) 1,770 ரூபாய், கருப்பு தேங்காய் ஒரு டன் 27,500 ரூபாய் மற்றும் பச்சை தேங்காய் ஒரு டன் 25 ஆயிரம், தேங்காய் பவுடர் ஒரு கிலோ 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் தொடரும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. சீசன் துவங்க உள்ள சூழலில் விலை சரிவு விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில நிர்வாகி கூறியதாவது:- அடுத்த மாதம் தேங்காய் சீசன் துவங்க உள்ள நிலையில் கொப்பரை, தேங்காய் விலை உயரவில்லை. கொப்பரை உற்பத்தி செய்வதால் நஷ்டமே ஏற்படுவதால், பலரும் உற்பத்தி மேற்கொள்ளவில்லை.இதனால் உலர்களங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
சீசன் இல்லாத நேரத்திலும் விலை சரிவு ஏற்படுவது புரியாத புதிராகவே உள்ளது. தேங்காய் எண்ணெய், கொப்பரை தேக்கமடைந்துள்ளது. அரசு கொள்முதல் செய்த கொப்பரை என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை.
இதற்கு ஒரே காரணமாக வெளிநாடுகளில் இருந்து பாமாயில், வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படுவதே காரணமாகும். இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு அதிக வரி விதித்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்.தற்போது கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலையை குறைத்து வரும் எஸ்.எம்.எஸ்.,க்களும், விவசாயிகளிடம் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன.
சீசன் துவங்குவதற்கு முன் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விவசாயிகள் மரங்களை பராமரித்து காய் பறிப்பிற்கு ரூ.1000 கூலி, காய்களை எடுக்க வரும் நபருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில் இந்த விலை தங்களுக்கு மிகவும் குறைவு என்று வேதனையடைந்துள்ளனர்.
- அரசு இப்பகுதியில் இலவம்பஞ்சுக்கான தொழிற்சாலை அமைத்தால் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள்
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலை ஒன்றியத்தில் ஏராளமான விவசாயிகள் இலவ மரம் வைத்து பராமரித்து வருகின்றனர். மலை சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதியில் அதிக அளவு இலவம்பஞ்சு விளை விக்கப்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படும்.
கடந்த ஆண்டு 1 கிலோ இலவம் பஞ்சு ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. ஆனால் இந்த வருடம் ரூ.60க்கு மட்டுமே விற்பனையாகிறது. விவசாயிகள் மரங்களை பராமரித்து காய் பறிப்பிற்கு ரூ.1000 கூலி, காய்களை எடுக்க வரும் நபருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில் இந்த விலை தங்களுக்கு மிகவும் குறைவு என்று வேதனையடைந்துள்ளனர்.
இதனால் காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர். அவை தாமாக உதிர்ந்து கிழே விழுந்து வெடித்து வருகிறது. இலவம் பஞ்சை பிரித்து அதனை தலைச்சுமையாகவும், கழுதைகள் மூலமும் ஏற்றிக் கொண்டு விற்பனைக்கு செல்கின்றனர்.
பல இன்னல்களுக்கிடையே இதனை கொண்டு செல்லும் போது உரிய லாபம் கிடைக்காததால் வேதனையடைந்துள்ளனர். எனவே அரசு இப்பகுதியில் இலவம்பஞ்சுக்கான தொழிற்சாலை அமைத்தால் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
- பருத்தியை தாக்கும் நோயால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- கோடை காலத்தில் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை இல்லததால் நெல் விவசாயம் பாதிக்கப் பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். காலையில் பனிபொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து ள்ளதால் பருத்தியில் இலை சுருட்டு புழு தாக்குதல் உள்ளது.
அபிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதியான அச்சங்குளம். தீர்த்தாண்ட தானம் வல்லகுளம் டி.புன வாசல் பள்ளபச்சேரி. அகத்தாரிருப்பு பாப்பனம் பொட்டகுளம் முத்தனேரி வேப்பங்குறிச்சி விரதக்கு ளம் உடைய நாதபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்து ள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய் குளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர் பருத்தி செடிகளை பொருத்தவரை லேசான ஈரப்பதத்திலும் கடும் வறட்சி நேரத்தில் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இதனால் கோடை சாகுபடியாக பருத்த சாகுபடி செய்வதில் அபிராமம் பகுதி விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வந்தாலும் இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாததால் வெயில் கொடுமை அதிகரி த்ததாலும் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் பருத்தியை நோய் தாக்கி வருகிறது.
குறிப்பாக இலை சுருட்டு புழு நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன் பருத்தியில் இலை சுருட்டு புழு தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- ஒரு மூட்டை வெற்றிலை குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
- இந்த வாரம் ஒரு மூட்டைக்கு பத்தாயிரம் வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்ட கடத்தூர் பகுதியில் வெற்றிலை விற்பனை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஒரு மூட்டை வெற்றிலை அதிகபட்சமாக ரூ.38 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த வாரம் விலை குறைந்து 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஒரு மூட்டைக்கு பத்தாயிரம் வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
- ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அபிராமம்
கடந்த ஆண்டு ராமநாத புரம் மாவட்டம் முழுவதும் பருவமழை பொய்த்ததால் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகையும், வறட்சி நிவாரணமும் இன்று வரை வழங்கப்பட வில்லை. மேலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனையும் இன்றுவரை தள்ளுபடி செய்யவில்லை.
நெல், உரம், உழவு செய்யும் கூலி உயர்வு காரணமாகவும், வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாகவும் விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருந்ததில் எந்தவித பயனுமில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்கி குவித்து வீட்டுமனைகளாகவும், பிளாட்டுகளாகவும் மாற்றிவிட்டனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் என்பது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடும் வறட்சி, புயல், வெள்ள சேதம் என்றாலே பாதிக்கப்படுவது நாங்கள் தான். அபிராமம் பகுதியில் நெல், மிளகாய், பருத்தி விவசாயம்தான் அதிகமாக உள்ளது. அதிகமாக மழை பெய்தா லும், வறட்சியானலும் பாதிக்கப்படுவது நாங்கள்தான். விவசாயம் செய்வதற்கு வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் எந்த பயனும் இல்லாததால் விரக்தியில் இருக்கிேறாம்.
அப்படிபட்ட விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்றார்.
- மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.
- பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் பல ஆயிரம் எக்டேர் அளவிற்கு வருடம் தோறும் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்து வருகின்றனர்.
இந்த மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.
இதனால் பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.
குறிப்பாக தருமபுரி மாவட்ட பகுதிகளில் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் தென்கரை கோட்டை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல 100-க்கும் மேற்பட்ட கிராமத்தில் விவசாயிகள் அதிக அளவாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.
பல நேரங்களில் மரவள்ளி பயிரிட்ட விவசாயிகளுக்கு செலவு செய்த பணம் கூட வர முடியாத நிலையில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த பூச்சிகளின் நோய் தாக்குதலால் செடிகள் இலைகள் பழுத்து காய்ந்து உதிர்ந்து வருகிறது.
இதனால் மகசூல் பெருமளவு குறையும் என்று விவசாயிகள் தெரிவித்து பெரும் கவலையடைந்து வருகின்றனர்.
இவற்றை தடுக்க வேளாண்மை துறை அதிகாரிகள் பஞ்சாயத்து பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடுகள் செய்து அவற்றை தடுப்ப தற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






