search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers are worried"

    • சுமார் 150 ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாயமாக மொச்சை பயிர் மற்றும் தட்டைப்பயறு ரகம் பயிரிடப்பட்டு வருகிறது.
    • கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் செடி மற்றும் காய்களில் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள சிலமலை, சூலபுரம் கரட்டுப்பட்டி ராசிங்கபுரம் ராணி மங்கம்மாள் சாலை பகுதிகளில் சுமார் 400 ஏக்கருக்கும் மேல் நாட்டு ரக மொச்சை பயிறு, நாட்டு ரக தட்டை பயிறு மற்றும் ஆம்பூர் ரக வீரிய ரக தட்டை பயிறு வகைகள் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

    இதில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாயமாக மொச்சை பயிர் மற்றும் தட்டைப்பயறு ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை மொச்சைப்பயிறு மற்றும் தட்டைப் பயிறு வகையில் பெருமளவில் விவசாயம் செய்யப்பட்டு வெளியூர்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் மொச்சை பயிர்கள் எண்ணெய் மற்றும் புரத சத்துகள் அதிகம் உள்ளதால் வெளிச்சந்தையில் தேனி மாவட்டத்தில் விளையும் மொச்சை பயிறு வகைகளுக்கு என்றும் மதிப்பு அதிகம் உள்ளது.

    டிசம்பர் மாதம் காலத்தில் பனிப்பொழிவு அதிகரிக்க அதிகரிக்க மொச்சை பயிர் சாகுபடி அதிகரிக்கும். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் செடி மற்றும் காய்களில் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    பலமுறை மருந்தடித்தும் உரங்கள் இட்டும் பெய்த மழை காரணமாக மருந்தின் ஆற்றல் குறைந்து புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் கொள்முதல் விலை கிலோ ரூ.15 முதல்ரூ.20 வரை மட்டுமே பெறப்படுவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    • ஆடுகளை திருடும் கும்பலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • விவசாயிகள் பொருளாதார அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏரா ளமானோர் ஆடுகள் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அண்மை காலமாக ஆடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது திருடர்கள் ஆடுகளை திருடி வருகின்றனர்.

    கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான் பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமாரி (50). சம்ப வத்தன்று இவர் தனது ஆடுகளை தோட்டத்தில் கட்டியிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடிச்சென்றனர்.

    இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தம்மைய நாயக்கர் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆடு திருடு ேபானது. கள்ளிக் குடியை அடுத்துள்ள கே.வெள்ளாகுளம் கிராமத்தில் முத்தையா என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேற்கண்ட பகுதிகளில் ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் பொருளாதார அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே ஆடு திருடும் நபர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசா ருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை கொண்ட பேரிக்காய் போன்ற பழங்கள் தற்போது மலைப்பகுதியில் இந்த ஆண்டு விளைச்சலானது முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது .
    • பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொடைக்கானல் பாம்பார்புரம் , அப்சர்வேட்டரி, செண்பகனூர், சின்ன பள்ளம், பெரும்பள்ளம் , நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வாங்கி செல்லும் பழங்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை கொண்ட இந்த வகை பழங்கள் தற்போது மலைப்பகுதியில் இந்த ஆண்டு விளைச்சலானது முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது .

    சில இடங்களில் மட்டுமே பேரிக்காய் விளைச்சல் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். மரங்களில் உள்ள நோய்கள் குறித்தும் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மலைகிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகள் கூலி கொடுக்க முடியாததால் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    அய்யலூரில் தக்காளிக்கென இயங்கும் தனி மார்க்கெட்டில் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து சென்னை, தஞ்சை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    தற்போது விளைச்சல் அதிகரித்ததால் மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் தக்காளி வரத்து உள்ளது. ஆனால் அங்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சாகுபடி செய்த செலவிற்கு கூட பணம் கிடைக்க வில்லை. பெரும்பாலான விவசாயிகள் கூலி கொடுக்க முடியாததால் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். ஒருசிலர் தாங்களே பறிப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்கள் மூலம் கிராமங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இருந்தபோதும் நிரந்தர விலை இல்லாததால் விவசாயிகளின் பாடு திண்டாட்டமாக உள்ளது.

    • விவசாயிகள் மரங்களை பராமரித்து காய் பறிப்பிற்கு ரூ.1000 கூலி, காய்களை எடுக்க வரும் நபருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில் இந்த விலை தங்களுக்கு மிகவும் குறைவு என்று வேதனையடைந்துள்ளனர்.
    • அரசு இப்பகுதியில் இலவம்பஞ்சுக்கான தொழிற்சாலை அமைத்தால் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள்

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலை ஒன்றியத்தில் ஏராளமான விவசாயிகள் இலவ மரம் வைத்து பராமரித்து வருகின்றனர். மலை சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதியில் அதிக அளவு இலவம்பஞ்சு விளை விக்கப்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படும்.

    கடந்த ஆண்டு 1 கிலோ இலவம் பஞ்சு ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. ஆனால் இந்த வருடம் ரூ.60க்கு மட்டுமே விற்பனையாகிறது. விவசாயிகள் மரங்களை பராமரித்து காய் பறிப்பிற்கு ரூ.1000 கூலி, காய்களை எடுக்க வரும் நபருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில் இந்த விலை தங்களுக்கு மிகவும் குறைவு என்று வேதனையடைந்துள்ளனர்.

    இதனால் காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர். அவை தாமாக உதிர்ந்து கிழே விழுந்து வெடித்து வருகிறது. இலவம் பஞ்சை பிரித்து அதனை தலைச்சுமையாகவும், கழுதைகள் மூலமும் ஏற்றிக் கொண்டு விற்பனைக்கு செல்கின்றனர்.

    பல இன்னல்களுக்கிடையே இதனை கொண்டு செல்லும் போது உரிய லாபம் கிடைக்காததால் வேதனையடைந்துள்ளனர். எனவே அரசு இப்பகுதியில் இலவம்பஞ்சுக்கான தொழிற்சாலை அமைத்தால் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

    • கடந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
    • சீசன் துவங்குவதற்கு முன் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்

    உடுமலை :

    பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறந்தும் உரிய பலன் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சீசன் துவங்காத நேரத்தில் கொப்பரை உற்பத்தி குறைந்தும் விலை உயரவில்லை. காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, சாதாரண கொப்பரை கிலோ 80 ரூபாய்க்கும், ஸ்பெஷல் கொப்பரை 82 ரூபாய், தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) 1,770 ரூபாய், கருப்பு தேங்காய் ஒரு டன் 27,500 ரூபாய் மற்றும் பச்சை தேங்காய் ஒரு டன் 25 ஆயிரம், தேங்காய் பவுடர் ஒரு கிலோ 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் தொடரும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. சீசன் துவங்க உள்ள சூழலில் விலை சரிவு விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில நிர்வாகி கூறியதாவது:- அடுத்த மாதம் தேங்காய் சீசன் துவங்க உள்ள நிலையில் கொப்பரை, தேங்காய் விலை உயரவில்லை. கொப்பரை உற்பத்தி செய்வதால் நஷ்டமே ஏற்படுவதால், பலரும் உற்பத்தி மேற்கொள்ளவில்லை.இதனால் உலர்களங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சீசன் இல்லாத நேரத்திலும் விலை சரிவு ஏற்படுவது புரியாத புதிராகவே உள்ளது. தேங்காய் எண்ணெய், கொப்பரை தேக்கமடைந்துள்ளது. அரசு கொள்முதல் செய்த கொப்பரை என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை.

    இதற்கு ஒரே காரணமாக வெளிநாடுகளில் இருந்து பாமாயில், வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படுவதே காரணமாகும். இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு அதிக வரி விதித்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்.தற்போது கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலையை குறைத்து வரும் எஸ்.எம்.எஸ்.,க்களும், விவசாயிகளிடம் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன.

    சீசன் துவங்குவதற்கு முன் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது.
    • பெங்களூர், கொச்சி போன்ற வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கள் பிரதான தொழிலாக இங்கு உள்ளது. அடிக்கடி மாறிவரும் கால நிலை மாற்றத்தால் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு தண்ணீர் வசதி கிடைப்பதில்லை. விவசாயத்திற்கு தேவையான இடுப்பொருட்கள் உரம், பூச்சிக்கொல்லி, மருந்துகளின் விலை ஏற்றத்தாலும் தரமான காய்கறி விதை கிடைக்காமலும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கேரட் பயிர் 2200 ஹெக்டரிலும், உருளைக்கிழங்கு 1200 ஹெக்டரிலும், கோஸ் 900 ஹெக்டரிலும், மற்ற மலைக்காய்கறி 2700 ஹெக்டரிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகள் மலைக் காய்கறிகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரட் மற்றும் பீட்ரூட் விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெற்றே உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், திருச்சி, சென்னை மற்றும் நெல்லை உள்பட பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுதவிர பெங்களூர், கொச்சி போன்ற வேறு மாநிலங்களுக்கும் கேரட் மற்றும் பீட்ரூட் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது கர்நாடகா மாநிலத்தில இருந்து கேரட், பீட்ரூட் வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீட்ரூட் விலை மிகவும் விலை குறைந்து விட்டது. கடந்த மாதம் வரை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்ற கேரட், பீட்ரூட் தற்பொழுது 20 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனால் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

    • வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும் இந்த ஏரிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் முன்னதாகவே வந்ததால் நிரம்பியது. அதனைத்தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே ஏரிக்கு வடவாறு வழியாக வரும் தண்ணீர் அணைத்தும் அப்படியே திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் விளைநி லங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கவலைய டைந்தனர். ஏரியின் பாது காப்பு கருதி கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்ம ட்டம் வேகமாக குறைந்தது.

    தற்போது மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்கு மட்டும் 65 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும் இந்த ஏரிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் முன்னதாகவே வந்ததால் நிரம்பியது.

    அதனைத்தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே ஏரிக்கு வடவாறு வழியாக வரும் தண்ணீர் அணைத்தும் அப்படியே திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் விளைநி லங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கவலைய டைந்தனர். ஏரியின் பாது காப்பு கருதி கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்ம ட்டம் வேகமாக குறைந்தது. தற்போது மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்கு மட்டும் 65 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • குறைவான அளவு திறக்கப்படும் இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • கால்வாயின் கடைமடையில் பாசன பகுதிக்குட்பட்ட பகுதி களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து 200 கிமீ செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாயின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே கடந்த அக்ேடாபர் மாதம் 30-ந் தேதி உடைப்பு ஏற்ப ட்டதால் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    குறைவான அளவு திறக்கப்படும் இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையால் தாமதமாக கடைமடை பகுதியில் நெல்சாகுபடி செய்ததாக தெரிவித்த விவசாயிகள், கால்வாய் உடைப்பால் கடந்த 10 நாட்களாக தண்ணீர் முற்றிலும் கிடை க்காத நிலை ஏற்பட்டதாக கூறினர்.

    மேலும் குறைவான அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராது என்றும் தெரிவித்தனர். கால்வாயின் கடைமடையில் பாசன பகுதி க்குட்பட்ட பாண்டி பாளையம், குட்டக்கா ட்டுவலசு, கணக்க ம்பாளையம், குலவிளக்கு, காகம் உள்ளி ட்ட பகுதி களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் விரைந்து கிடைக்கவும், நெற்பயிர்களை பாதுகாக்கவும் கால்வாயில் முழு கொள்ளளவான 2 ஆயிரம் கன அடி அளவிற்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தண்ணீர் முழுமையாக கிடைத்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், இல்லை யெனில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு செலவு செய்து நடவு செய்த பயிர்கள் வீணாகிவிடும் என்றும் வேதனை தெரிவித்தனர்.

    • கொய்யா பழத்தில் புது வகையான அம்மை நோய், ஈரல் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் கொய்யா பழ விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
    • தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றான கொய்யா பழத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணவாய்பட்டி, வீரசின்னம்பட்டி, கோம்பைபட்டி, திம்மணநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது.இந்த நிலையில் கொய்யா பழத்தில் புது வகையான அம்மை நோய், ஈரல் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் கொய்யா பழ விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில், சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது.குறிப்பாக வெள்ளை கொய்யா இந்த பகுதிகளில் அதிகமாக சாகுபடி செயல்படுகிறது.இதில் வைட்டமின்.பி, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, எலும்பு பலம், உடல் மினுமினுப்பு வயிற்று கோளாறு ஆகியவற்றுக்கு அருமருந்தாக அமையும்.

    மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலை தீர்க்கும் வல்லமை கொண்டது.ஆகவே இதை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது.இந்த நிலையில் இந்த ஆண்டு கொய்யா சாகுபடியில் அம்மை நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஆகவே தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றான கொய்யா பழத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

    • திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வேடசந்தூர், வடமதுரை, எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி, சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வேடசந்தூர், வடமதுரை, எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இங்கு விளையும் தக்காளிகளை அய்யலூரில் உள்ள தனி தக்காளி சந்தைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த வருடம் தக்காளி வரத்து குறைந்ததால் விலை ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வில்லை.

    தற்போது ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் பகுதியில் ஆந்திரா தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.60 முதல் ரூ.80 வரை மட்டுமே விலை கேட்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ. 7 வரை விற்பனையாகியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    நடவு பணி, பராமரிப்பு, பறிப்பு கூலி, ேபாக்கு வரத்து செலவு என அதிக அளவில் பணம் செலவு செய்த நிலையில் விலை குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், விலை அதிகரித்தபோதும் எங்களுக்கு போதுமான லாபம் கிடைக்கவில்லை. தற்போது விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே வேளாண் துறை அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.

    மேலும் விலை குறைவான நேரங்களில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும். சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

    மேலும் நஷ்டம் அடைந்த எங்களுக்கு அரசு கருணை உதவித்தொகை வழங்க வேண்டும் என்றனர்.

    • ரூ. 52.82 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.
    • பருத்திஏலத்தில் வரத்து அதிகரித்தும் விலை குறைந்தது.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்திஏலத்தில் வரத்து அதிகரித்தும் விலை குறைந்தது.அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் 2,033 மூட்டையில் 66 டன் பருத்தி ஏலத்துக்கு எடுத்து வரப்பட்டது.ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு 7,000 முதல் 8,799 ரூபாய் வரையும், கொட்டு ரகம் 2,000 முதல் 1,000 ரூபாய் வரையும் விற்கப்பட்டது. வரத்து அதிகரித்தும் விலை உயராததால் விவசாயிகள் கவலையடைந்தனர். மொத்தம் 12 வியாபாரிகள் 403 விவசாயிகள் பங்கேற்றனர். ரூ. 52.82 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

    ×