search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை
    X

    விளைச்சல் குறைவாக உள்ள பேரிக்காய்கள்.

    கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

    • இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை கொண்ட பேரிக்காய் போன்ற பழங்கள் தற்போது மலைப்பகுதியில் இந்த ஆண்டு விளைச்சலானது முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது .
    • பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொடைக்கானல் பாம்பார்புரம் , அப்சர்வேட்டரி, செண்பகனூர், சின்ன பள்ளம், பெரும்பள்ளம் , நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வாங்கி செல்லும் பழங்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை கொண்ட இந்த வகை பழங்கள் தற்போது மலைப்பகுதியில் இந்த ஆண்டு விளைச்சலானது முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது .

    சில இடங்களில் மட்டுமே பேரிக்காய் விளைச்சல் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். மரங்களில் உள்ள நோய்கள் குறித்தும் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மலைகிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×