search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடியில் மொச்சை பயிரில் புழுக்கள் தாக்கத்தால் விவசாயிகள் கவலை
    X

    மொச்சை பயிரில் ஏற்பட்டுள்ள புழு தாக்குதல்.

    போடியில் மொச்சை பயிரில் புழுக்கள் தாக்கத்தால் விவசாயிகள் கவலை

    • சுமார் 150 ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாயமாக மொச்சை பயிர் மற்றும் தட்டைப்பயறு ரகம் பயிரிடப்பட்டு வருகிறது.
    • கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் செடி மற்றும் காய்களில் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள சிலமலை, சூலபுரம் கரட்டுப்பட்டி ராசிங்கபுரம் ராணி மங்கம்மாள் சாலை பகுதிகளில் சுமார் 400 ஏக்கருக்கும் மேல் நாட்டு ரக மொச்சை பயிறு, நாட்டு ரக தட்டை பயிறு மற்றும் ஆம்பூர் ரக வீரிய ரக தட்டை பயிறு வகைகள் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

    இதில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாயமாக மொச்சை பயிர் மற்றும் தட்டைப்பயறு ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை மொச்சைப்பயிறு மற்றும் தட்டைப் பயிறு வகையில் பெருமளவில் விவசாயம் செய்யப்பட்டு வெளியூர்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் மொச்சை பயிர்கள் எண்ணெய் மற்றும் புரத சத்துகள் அதிகம் உள்ளதால் வெளிச்சந்தையில் தேனி மாவட்டத்தில் விளையும் மொச்சை பயிறு வகைகளுக்கு என்றும் மதிப்பு அதிகம் உள்ளது.

    டிசம்பர் மாதம் காலத்தில் பனிப்பொழிவு அதிகரிக்க அதிகரிக்க மொச்சை பயிர் சாகுபடி அதிகரிக்கும். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் செடி மற்றும் காய்களில் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    பலமுறை மருந்தடித்தும் உரங்கள் இட்டும் பெய்த மழை காரணமாக மருந்தின் ஆற்றல் குறைந்து புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் கொள்முதல் விலை கிலோ ரூ.15 முதல்ரூ.20 வரை மட்டுமே பெறப்படுவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    Next Story
    ×