search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை இல்லாததால் வாடும் எள் செடிகள்
    X

    அபிராமம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள எள் செடிகள்.

    மழை இல்லாததால் வாடும் எள் செடிகள்

    • அபிராமம் பகுதியில் மழை இல்லாததால் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.
    • இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள நீர்தாண்ட அச்சங்குளம், உடையநாதபுரம், நகரத்தார்குறிச்சி, நந்திசேரி, காடனேரி உட்பட பல்வேறு கிராமங்களில் சிறுதானிய பயிர்களான கம்பு, சோளம், குதிரை வாளி , எள் போன்ற பயிர்களை விவசாயம் செய்துவந்தனர் சிறுதானிய பயிர்களுக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுவதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

    அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மழை காலங்களில் தண்ணீர் சேமிக்க பண்ணை குட்டை வெட்டததால் போதிய பருவமழையின்றி சிறுதானிய பயிர்களை கூட காப்பாற்ற முடியத நிலை உள்ளது. இதனால் எள் போன்ற பயிர்களுக்கு கூட மழையை நம்ப வேண்டிய நிலை உள்ளது. அபிராமம் பகுதியில் மகசூல் தரவேண்டிய நிலையில் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.

    இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். போதிய பருவமழை இல்லததால் நெல் பயிர் கருகி வரும் நிலையில், சிறுதானிய பயிர்களும் மழையில்லததால் கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×