search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடுகளை வேட்டையாடும் வெறிநாய்கள் விவசாயிகள் கவலை
    X

    ஆடுகளை வேட்டையாடும் வெறிநாய்கள் விவசாயிகள் கவலை

    • நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • விவசாயிகளின் 10 செம்மறியாடுகளை வெறி நாய்கள் கடித்துகுதறி கொன்றுள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்துள்ள மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான தேர்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களது பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு தொழிலாகும். கோழி மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து அதனை குண்டடம் மற்றும் கன்னிவாடி வாரச்சந்தைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதமாக விவசாயிகள் தங்கள் பட்டியில் அடைத்து வைத்திருக்கும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்தெரியும் வெறி நாய்கள் கடித்து குதறி ஆட்டின் ரத்தத்தை குடித்துவிட்டு சென்று விடுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக மணக்கடவு கிராமத்தில் வெறிநாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று காடுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆடுகளை துரத்தி துரத்தி கடித்து 200-க்கும் மேற்பட்ட ஆடுகளின் ரத்தத்தை குடித்து விடுகிறது. இதனால் அவை செத்தவிடுகின்றன.

    இந்த நிலையில் நாட்டுதுறை, பாலசுப்பிரமணி, அப்பு ஆகிய விவசாயிகளின் 10 செம்மறியாடுகளை வெறி நாய்கள் கடித்துகுதறி கொன்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் ஆர்.டி.ஓ.குமரேசனிடம் நாய்களைப்பிடிக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக கூறி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ.குமரேசன் வெறி நாய்களை பிடிக்க உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நாய்களைப்பிடித்து காப்பகங்களில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்.மேலும் நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்க ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் கோழிகளை திருடும் மர்ம ஆசாமிகளை கண்டறிய அப்பகுதியில் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் மற்றும் கிராமத்தின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து மனு கொடுக்க வந்த விவசாயிகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×