என் மலர்
நீங்கள் தேடியது "Vidya Balan"
- ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்' படம் இவரை பெரியளவில் பிரபலப்படுத்தியது.
- எடையால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட வித்யா பாலன், திடீரென ஏதேதோ செய்து எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் வித்யா பாலன், தமிழில் அஜித்குமார் ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். மறைந்த கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் இவர் நடித்த 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படம் இவரை பெரியளவில் பிரபலப்படுத்தியது. சமீபகாலமாகவே தனது எடையால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட வித்யா பாலன், திடீரென ஏதேதோ செய்து எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
அது எப்படி என்று அவரிடம் கேட்டபோது, ''உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்த நான் ஜிம் சென்று பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் எடை குறையாமல் கூடித்தான் போனது. இதனால் பிரச்சனையை கண்டறிய டாக்டர்களிடம் சென்றேன்.
மருத்துவ பரிசோதனை இது கொழுப்பல்ல, வீக்கம் என்று சொன்னார்கள். அவர்கள் கொடுத்த வீக்கத்தைக் குறைக்கும் உணவுமுறையை பயன்படுத்தினேன். அந்தவகையில் நான் 'ஜிம்' செல்லாமலேயே எடையை குறைத்தேன்'', என்றார்.
- டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.
- படத்தில் வித்யா பாலன் நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர். இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். அவருடன் இம்ரான் ஹாஸ்மி, நசுருதீன்ஷா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் படம் வெளியானது. படத்தில் வித்யா பாலன் நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. விழாவில் நடிகை வித்யா பாலன் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற நேர்காணலில் கலந்துரையாடினார். அதில், தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிப்பதற்கு நான் ஆர்வமுடன் இருந்தேன். அந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்குவார்கள் என நான் நம்பவில்லை.

மக்கள் என்னால் அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியும் என்று நினைத்து பார்க்கவில்லை. படத்தில் நான் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது என்னிடம் பெரும்பாலானோர் இது நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை அழிக்கும் என்றனர். சிலர் எனக்கு பைத்தியம் என்று நினைத்தனர். படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்த போது நான் மகிழ்ச்சி அடைந்தேன். நான் வித்தியாசமான முறையில் முயற்சி செய்து நடிப்பதால் தான் நான் இன்றும் நடிகையாக இருக்கிறேன் என்று கூறினார்.
- போலி கணக்கில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த தளத்தை பிளாக் செய்துவிடுங்கள்.
- இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித்குமார் ஜோடியாக ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் அவ்வப்போது போலி கணக்கு தொடங்கப்படுவதும், பின்னர் அது சர்ச்சையாகி வருவதும் நடந்துள்ளது. அந்தவகையில் பாலிவுட் நடிகை வித்யாபாலன், இதுபோன்ற பிரச்சனையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வித்யாபாலன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'எனது பெயரில் மர்ம நபர் ஒருவர் 'வாட்ஸ்-அப்' மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். 'வாட்ஸ்-அப்'பில் எனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு, நான் தான் வித்யாபாலன் எனச் சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது இப்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அதுபோன்ற நபர்களிடம் இருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்', என்று கூறியுள்ளார்.
மேலும், 'இதுகுறித்து தனது குழுவினர் புகார் அளித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க வேண்டாம். அப்படி அந்த போலி கணக்கில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த தளத்தை பிளாக் செய்துவிடுங்கள்' என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித்குமார் ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
- 'காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
- ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, சமூகத்தை ஊக்குவிக்க முடியும்.
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள படம் 'காதல் தி கோர்'.
இப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கினார். இது மம்முட்டியின் சொந்த தயாரிப்பு படமாகும். 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜோதிகா மீண்டும்

இப்படத்தில் மம்மூட்டி தன்பால் ஈர்ப்பாளர் வேடத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகரான மம்முட்டி தயங்கும் விஷயத்தை எப்போதும் மிக சாதரணமாக் செய்துவிடுபவர் ஆவார். 'காதல் தி கோர்' படத்தில் தன்பால் ஈர்ப்பாளராக நடித்திருந்த மம்மூட்டியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல வித விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மலையாள கிளாசிக் படங்களை பார்த்துள்ளார்.ஒரு பேட்டியில் வித்யாபாலன் கூறியதாவது :-
மம்முட்டி நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் ''காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார். இதை மம்முட்டியிடம் தெரிவிக்க துல்கருக்கு மெசேஜ் அனுப்பினேன்.

மம்முட்டி நடித்தது மட்டுமின்றி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, பெருமைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்க முடியும். ஒரு இந்தி நடிகர் இப்படி ஒரு படத்தை ஏற்கவே மாட்டார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது .கேரளாவில் முற்போக்கான பார்வையாளர்கள் உள்ளனர். அதுதான் முக்கிய வேறுபாடு. கேரளாவில் ஒரு நடிகர் தன் இமேஜைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
கேரள சினிமா ரசிகர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சினிமா கலைஞர்களை மிகவும் மதிக்கிறார்கள்". என்றார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதுவும் ரோகித் தரப்பு நடிகைக்கு காசு கொடுத்து பதிவிட வைத்த PR போஸ்ட் தான் என நெட்டிசென்கள் கலாய்க்கத் தொடங்கினர்.
- இன்னும் சில வடஇந்திய நடிகர் நடிகைகள் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் செய்துள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மா தற்காலிகமாக விலகி உள்ளார். அவரது முடிவுக்கு ஆதரவாக இணையத்தில் நிறைய போஸ்ட்கள் வளம் வருகின்றன.
ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ரோகித் சர்மா தரப்பு காசு கொடுத்து வெளியிடும் PR [PULBIC RELATIONS] போஸ்ட்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ரோகித் சர்மாவின் முடிவை ஆதரிக்கும் விதமான வாட்சப் பார்வேர்ட் போஸ்ட் ஒன்றை பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
எனவே இதுவும் ரோகித் தரப்பு நடிகைக்கு காசு கொடுத்து பதிவிட வைத்த PR போஸ்ட் தான் என நெட்டிசென்கள் கலாய்க்கத் தொடங்கினர்.

மேலும் வித்யா பாலன் எக்ஸ் பக்கத்திலும் அதுபோன்ற போஸ்ட் காணப்பட்டது. ஆனால் வித்யா பாலனின் எக்ஸ் ஐடி ரோகித் சர்மாவை பின்தொடர கூட இல்லை.
இன்னும் சில வடஇந்திய நடிகர் நடிகைகள் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் செய்துள்ளனர்.ஆனால் அவர்களும் கூட ரோகித் சர்மாவை பின்தொடரவில்லை. எனவே PR போஸ்களை முன்வைத்து ரோகித் சர்மாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வித்யா பாலனை ரோகித் சர்மா PR குழு தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் மீதான அபிமானத்தால்தான் வித்யா போஸ்ட் போட்டார் என்றும் அவரது தரப்பு தற்போது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.


Saw the rushes of #NerkondaPaaravai. Happy... What a performance by Ajith.... I hope he agrees to do Hindi films soon. Have 3 action scripts, hope he says yes to atleast one of them. #NerkondaPaaravai#Ajithkumar
— Boney Kapoor (@BoneyKapoor) April 10, 2019

It is officially announced by Mr Boney Kapoor that the release date of his Tamil Production @nerkondapaarvai is confirmed for August 10th @thisisysr@ProRekha#DirVinoth#NerkondapaarvaifromAug10
— Suresh Chandra (@SureshChandraa) March 25, 2019








