என் மலர்
நீங்கள் தேடியது "Bollywood actress"
- அப்போது மது போதையில் அதிவேகமாக காரில் வந்த ஒரு நபர், நோராவின் கார் மீது பயங்கரமாக மோதினார்.
- என் கண்கள் முன்னே என் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்தேன்.
பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி, மும்பையில் நேற்று மதியம் ஒரு கார் விபத்தில் சிக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லிங்க் ரோடில், நோரா தனது காரில் 'சன்பர்ன்' இசை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அதிவேகமாக காரில் வந்த ஒரு நபர், நோராவின் கார் மீது பயங்கரமாக மோதினார்.
இந்த மோதலின் வேகத்தில் நோரா காரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் தூக்கி எறியப்பட்டார். இதில் அவரது தலை காரின் ஜன்னலில் பலமாக மோதியது. அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நோரா, "என் கண்கள் முன்னே என் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்தேன். இது மிகவும் பயங்கரமான அனுபவம். 2025-ஆம் ஆண்டிலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது குறித்து நாம் பேசிக்கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வினய் சக்பால் (27) என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
- ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது.
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.
நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில்,இந்திய கிரிகெக்ட் வீரர் முகமது சிராஜுக்கு பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே ராக்கி கயிறு கட்டி விட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது. ஒருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு பரவியது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாய் போஸ்லே முகமது சிராஜுக்கு ராக்கி கயிறு கட்டி விட்டுள்ளார்.
- 'காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
- ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, சமூகத்தை ஊக்குவிக்க முடியும்.
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள படம் 'காதல் தி கோர்'.
இப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கினார். இது மம்முட்டியின் சொந்த தயாரிப்பு படமாகும். 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜோதிகா மீண்டும்

இப்படத்தில் மம்மூட்டி தன்பால் ஈர்ப்பாளர் வேடத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகரான மம்முட்டி தயங்கும் விஷயத்தை எப்போதும் மிக சாதரணமாக் செய்துவிடுபவர் ஆவார். 'காதல் தி கோர்' படத்தில் தன்பால் ஈர்ப்பாளராக நடித்திருந்த மம்மூட்டியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல வித விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மலையாள கிளாசிக் படங்களை பார்த்துள்ளார்.ஒரு பேட்டியில் வித்யாபாலன் கூறியதாவது :-
மம்முட்டி நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் ''காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார். இதை மம்முட்டியிடம் தெரிவிக்க துல்கருக்கு மெசேஜ் அனுப்பினேன்.

மம்முட்டி நடித்தது மட்டுமின்றி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, பெருமைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்க முடியும். ஒரு இந்தி நடிகர் இப்படி ஒரு படத்தை ஏற்கவே மாட்டார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது .கேரளாவில் முற்போக்கான பார்வையாளர்கள் உள்ளனர். அதுதான் முக்கிய வேறுபாடு. கேரளாவில் ஒரு நடிகர் தன் இமேஜைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
கேரள சினிமா ரசிகர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சினிமா கலைஞர்களை மிகவும் மதிக்கிறார்கள்". என்றார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அக்ஷய திருதி என்ற நன்னாளில் எங்கள் குழந்தை பிறந்துள்ளது என்று யாமி கவுதம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
- இவர்களுக்கு பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், ஆயுஷ்மான் குரானா, மிருனாள் தாக்கூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் யாமி கவுதம் நடித்து வருகிறார். இவர் தமிழில் ‛கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள இவர் இந்தியில் யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தில் யாமியும் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு மே 10 அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வேதாவிட் என அவர்கள் பெயர்கள் வைத்துள்ளனர். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேதாவிட் என்ற பெயருக்கு வேதங்களை நன்கு கற்றவன் என்று அர்த்தம்.
அக்ஷய திருதி என்ற நன்னாளில் எங்கள் குழந்தை பிறந்துள்ளது என்று யாமி கவுதம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், ஆயுஷ்மான் குரானா, மிருனாள் தாக்கூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவர் தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்.
- சண்டிகர் விமான நிலையத்தில் நான் மாட்டிக்கொண்டுள்ளேன்.
இந்தியாவில் சமீப காலமாக விமான சேவைகளின் தரம் குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. வெடிகுண்டு மிரட்டல்களால் விமான நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் இதுபோன்ற விமர்சனங்கள் அந்நிறுவனங்களுக்கு மேலும் அவப்பெயரை உருவாகியுள்ளது.
அதுவும் பல குற்றச்சாட்டுக்கள் பிரபலங்களால் முன்வைக்கப்படுகிறது. தற்போது இண்டிகோ விமான சேவை குறித்து பாலிவுட் நடிகை ஷமிதா செட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்.

தற்போது தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்ட வீடியோவில் ஷமிதா பேசியதாவது,
ஜெய்ப்பூரில் இருந்து நிகழ்ச்சி ஒன்றுக்காக நான் சண்டிகாருக்கு இண்டிகோ விமானத்தில் வந்தடைந்தேன்.ஆனால் என்னுடையதும் எனது மேக் அப் ஸ்டைலிஸ்ட் உடைய பைகளை ஜெய்ப்பூரிலேயே எடை தொடர்பான பிரச்சனையால் என்னைக் கேட்காமலேயே விமானத்திலிருந்து இறக்கிவைத்திருக்கின்றனர்.
இப்போது ஜெய்ப்பூரில் இருந்து அடுத்த விமானம் சண்டிகாருக்கு வரும்போது அதில் எனது பைகளை அனுப்பி வைப்பதாக விமான ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே சண்டிகர் விமான நிலையத்தில் நான் மாட்டிக்கொண்டுள்ளேன். இந்த ஊழியர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. இண்டிகோ, உங்கள் விமானங்களில் பறப்பது என்பது மிகவும் s*** ஆன அனுபவம் ['IndiGo you're a pretty s*** airline to fly on!] என்று கடுமையான சாடியுள்ளார். இந்நிலையில் ஷமிதா செட்டியிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
- நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை அலியா ஃபக்ரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நர்கிஸ் ஃபக்ரி தற்போது பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை அலியா ஃபக்ரி மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனது முன்னாள் காதலனின் வீட்டில் வேண்டுமென்றே தீ வைத்து அவரது முன்னாள் காதலன் எட்வர்ட் ஜேக்கப்ஸ் (35) மற்றும் அவரது தோழி அனஸ்டாசியா எட்டியென் (33) ஆகியோரைக் கொன்றதாக அலியா ஃபக்ரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எட்வர்ட் ஜேக்கப்ஸ் உடன் மீண்டும் சேருவதற்கு அலியா ஃபக்ரி முயற்சி செய்துள்ளார் என்றும் ஆனால் அதற்கு அவரது காதலர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தற்போது அலியா ஃபக்ரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- போதைப்பொருள் கடத்தல் கடத்தல் புள்ளி விக்கி கோஸ்வாமியுடன் மம்தா உறவில் இருந்தார்.
- 25 ஆண்டுகளாக வெளிநாடுகளையே சுற்றிய மம்தா குல்கர்னி [52 வயது] சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பினார்.
80, 90 களில் ராம் லகான், வக்த் ஹமாரா ஹை, கிராந்திவீர், கரண் அர்ஜுன், சப்சே படா கிலாடி, அந்தோலன் மற்றும் பாஸி போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களில் நடித்த நடிகை மம்தா குல்கர்னி. மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 1997 ஆம் ஆண்டு துபாய் நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்ட விக்கி கோஸ்வாமியுடன் மம்தா உறவில் இருந்தார்.
மம்தா அவரை அடிக்கடி சிறைக்கு சென்று பார்ப்பதாகவும், அவர் சிறையில் இருந்தபோதே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

25 ஆண்டுகளாக வெளிநாடுகளையே சுற்றிய மம்தா குல்கர்னி [52 வயது] சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பினார். விக்கி கோஸ்வாமியுடன் தனக்கு நடந்த திருமணத்தையும் பேட்டியில் அவர் மறுத்தார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிராயகராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் காவி உடுத்தி துறவறம் பூண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்திலும் அவர் அவ்வப்போது பதிவுகளையும் இட்டு வந்த மம்தா, தனது துறவற முடிவை அறிவித்திருந்தார். இதன்படி நேற்று முன்தினம் மகா கும்பமேளாவின் செக்டர் 16-ல் உள்ள கின்னர் அகாடா மடத்துக்கு வந்தார்.
அதன் தலைவரான ஆச்சார்யா டாக்டர் லஷ்மி நாராயண் திரிபாதியிடம் தனது முடிவு குறித்து எடுத்துரைத்தார். தனக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும்படியும், முழுத்துறவறம் மேற்கொள்ளத் தயார் எனவும் அதற்கான நிபந்தனைகளை ஏற்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இதற்காக மம்தா, இறந்தபின் அவர்களது குடும்பத்தார் செய்யும் பிண்டதானச் சடங்கை அவர் தனக்குத் தானே செய்து கொண்டார். தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின் முறைப்படி அவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவியை அளிக்கும் சடங்குகளை கின்னர் அகாடாவினர் செய்தனர். அவரது பெயர் அகாரா என மாற்றப்பட்டது.

ருத்ராச்ச மாலைகள், காவி உடை சகிதமாக மம்தா குல்கர்னி பேசியதாவது, எனக்கு காளி மாதா இட்ட கட்டளையின்படி எனது புதிய குருவாக கின்னர் அகாடாவின் தலைவர் லஷ்மி நாராயண் திரிபாதியை ஏற்றுள்ளேன்.
எனது ரசிகர்கள் என்னை பாலிவுட்டுக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்துகின்றனர். மகா காளி உத்தரவின்றி இனி எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளார். கின்னர் அகாடாவின் மதுரா முகாமில் தங்கி இந்துமதத்தை வளர்க்க மம்தா பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.







