search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nidhhi Agerwal"

    இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சின்கம் உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும்,  விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்திலும் பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் டூட்லி ஜெயம் ரவியின் 25-வது படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் இந்த படம் விவசாயிகள் பிரச்சனையை பேசும் படமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிப்பதாக கூறப்படுகிறது.



    ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையைமக்கிறார்.

    ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக கோமாளி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

    இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமணன் ஜெயம் ரவி மீண்டும் இணைந்துள்ளனர். முந்தைய 2 படங்களிலுமே ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு டாப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருவரும் நடிக்கிறார்களா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

    ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். 



    இவர் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் இந்தி நடிகையை காதலிப்பதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். #KLRahul #NidhhiAgerwal

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கேஎல் ராகுல். பெங்களூரைச் சேர்ந்த இவர், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடியாக விளையாடி அனைவருடைய கவனைத்தையும் ஈர்த்தார்.

    தற்போது இவர் இந்தி நடிகை நிதி அகர்வாலை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஐதராபாத்தில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்த நிதி அகர்வாலும் கேஎல் ராகுலும் நட்பாகப் பழகி வந்தனர் என்றும் பிறகு காதலில் விழுந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றியபோது மீடியா கண்ணில் பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ராகுல் ரசிகர்கள் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.



    நிதி அகர்வால் முன்னா மைக்கேல், டாய்லெட் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சவ்யா சாட்சி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இருவரும் காதலிப்பதாக வெளியான தகவல்களுக்கு கேஎல் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர், “ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா?. அது என்ன அவ்வளவு கஷ்டமா? என கேட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் இருவரும் நண்பர்கள், இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எங்கள் நட்பு நான் கிரிக்கெட்டிற்கும், அவர் நடிப்பிற்கும் வரும் முன்பிருந்தே தொடர்கிறது. எனக்கு நண்பர்களுடன் செல்வது பிடிக்கும். அதுவும் நாங்கள் தனியாக செல்லவில்லை. எங்கு சென்றாலும் நண்பர்கள் 3-4 பேர் சேர்ந்து தான் செல்வோம். அப்படியே நான் காதலிப்பதாக இருந்தாலும் உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளிப்படையாக தான் காதலிப்பேன். நான் எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன், எதையும் மறைக்கமாட்டேன்” என கூறினார். 

    ராகுலின் இந்த விளக்கத்தினால் அவரது காதல் குறித்து வெளியான வதந்திகளுக்கு ஒரு திர்வு கிடைத்துள்ளது. இந்த வதந்திக்கு நடிகை நிதி அகர்வாலும் மறுப்பு தெரிவித்துள்ளார். #KLRahul #NidhhiAgerwal
    ×