search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malayalam actor"

    • 'காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
    • ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, சமூகத்தை ஊக்குவிக்க முடியும்.

    பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள படம் 'காதல் தி கோர்'.

    இப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கினார். இது மம்முட்டியின் சொந்த தயாரிப்பு படமாகும். 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜோதிகா மீண்டும்



    இப்படத்தில் மம்மூட்டி தன்பால் ஈர்ப்பாளர் வேடத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகரான மம்முட்டி தயங்கும் விஷயத்தை எப்போதும் மிக சாதரணமாக் செய்துவிடுபவர் ஆவார். 'காதல் தி கோர்' படத்தில் தன்பால் ஈர்ப்பாளராக நடித்திருந்த மம்மூட்டியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல வித விமர்சனங்கள் வந்தன.

    இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மலையாள கிளாசிக் படங்களை பார்த்துள்ளார்.ஒரு பேட்டியில் வித்யாபாலன் கூறியதாவது :-

    மம்முட்டி நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் ''காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார். இதை மம்முட்டியிடம் தெரிவிக்க துல்கருக்கு மெசேஜ் அனுப்பினேன்.




    மம்முட்டி நடித்தது மட்டுமின்றி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, பெருமைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்க முடியும். ஒரு இந்தி நடிகர் இப்படி ஒரு படத்தை ஏற்கவே மாட்டார்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது .கேரளாவில் முற்போக்கான பார்வையாளர்கள் உள்ளனர். அதுதான் முக்கிய வேறுபாடு. கேரளாவில் ஒரு நடிகர் தன் இமேஜைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    கேரள சினிமா ரசிகர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சினிமா கலைஞர்களை மிகவும் மதிக்கிறார்கள்". என்றார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில், நைட் ஷிஃப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியானது பிரமயுகம் திரைப்படம்.

    இத்திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்கிறது என்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். படத்தின் ஒளிப்பதிவும், காட்சி அமைப்பும், ஒலி வடிவமும் இத்திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதுவரை உலகளவில் 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பிரமயுகம்.

    கடந்த பல ஆண்டுகளாக நாம் திரைப்படங்களை முழு நீள வண்ண திரைபடங்களாவே பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திரையரங்குகளில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் இப்பொழுது வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    மலையாள நடிகரான குஞ்சாக்கோ பாவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    காதலுக்கு மரியாதை என்ற தமிழ் சினிமாவில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சினிமா முதலில் மலையாளத்தில் எடுக்கப்பட்டது. அதில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல கேரள சினிமா நடிகர் குஞ்சாக்கோ பாவன் நடித்திருந்தார். அதன்பின்னர் 50-க்கும் மேற்பட்ட சினிமாவில் நடித்து புகழ்பெற்றவர்.

    சம்பவத்தன்று கண்ணூரில் நடந்த சினிமா படப்பிடிப்புகாக எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது நடிகர் குஞ்சாக்கோ பாவன் அருகே வந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார். வாலிபரின் செயலை பார்த்த குஞ்சாக்கோ பாவன் அதிர்ச்சியடைந்தார். அந்த வழியே வந்த பொதுமக்கள் வாலிபரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    பின்னர் கண்ணூர் ரெயில் வந்ததும் குஞ்சாக்கோ பாவன் ரெயில் ஏறி படப்பிடிப்புக்கு புறப்பட்டார். கண்ணூர் ரெயில் நிலையம் வந்ததும் அங்குள்ள ரெயில்வே போலீசில் தன்னை எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்ய முயன்றார் என்று புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் கண்ணூர் போலீசார் எர்ணாகுளம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எர்ணாகுளம் ரெயில்வே போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா கட்சி பதிவுகளை வைத்து வாலிபரை தேடினர்.

    இந்நிலையில் நேற்று அந்த வாலிபரை ரெயிவே போலீசார் கைது செய்தனர். நடிகர் குஞ்சாக்கோ பாவனை கொலை செய்ய முயன்றது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கேரள கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக தடை செய்யப்பட்ட பகுதியில் ஊர்வலம் நடத்திய மலையாள நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #KeralaNun #JoyMathew
    கேரள மாநிலம் கோட்டயம் குருவிலங்காட்டில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வந்த பிராங்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் கோழிக்கோட்டில் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் மலையாள நடிகர் ஜாய்மேத்யூ என்பவர் பங்கேற்றார். அவர்கள் ஊர்வலம் அந்த பகுதியில் உள்ள மிட்டாய் தெரு வழியாக சென்றது. அந்த பகுதியில் ஊர்வலம் நடத்த ஏற்கனவே போலீஸ் தடை உள்ளது.

    இந்த நிலையில் அந்த பகுதி வழியாக ஊர்வலம் சென்றதால் நடிகர் ஜாய் மேத்யூ உள்பட 24 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இது பற்றி நடிகர் ஜாய்மேத்யூ கூறும்போது, என்னை மிரட்ட போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். நாங்கள் ஊர்வலம் நடத்திய பாதை போலீஸ் தடை விதிக்கப்பட்ட இடம் என்பதை யாரும் தெரிவிக்கவில்லை என்றார். #KeralaNun #JoyMathew
    ×