என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boney Kapoor"

    • போலி வாரிசு சான்றிதழ் மூலம் மூன்று பேர் உரிமை கோருவதாக கணவர் போனி கபூர் வழக்கு.
    • தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவி 1988ல் சென்னை இ.சி.ஆர் பகுதியில் வாங்கிய சொத்துக்கு, போலி வாரிசு சான்றிதழ் மூலம் மூன்று பேர் உரிமை கோருவதாக அவரின் கணவர் போனி கபூர் குற்றம்சாட்டியுள்ளார்.

    மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் உரிமை கோருவதாக போனி கபூர் தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், போலி வாரிசுச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • வழுக்கை தலையுடன், குண்டாக காணப்பட்ட போனிகபூர் தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலமாக 26 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார்.
    • முடிமாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டு இருக்கிறார்.

    தமிழ் தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கனவுக்கன்னியாக மிளிர்ந்த ஸ்ரீதேவி, 2018-ம் ஆண்டில் மரணம் அடைந்தார். அவரது மகள்கள் ஜான்விகபூர், குஷி கபூர் ஆகியோரும் சினிமாவில் கலக்குகிறார்கள். ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார். தமிழில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' ஆகிய படங்களை தயாரித்துள்ளார். வழுக்கை தலையுடன், குண்டாக காணப்பட்ட போனிகபூர் தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலமாக 26 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். முடிமாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டு இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம், அவரது மனைவி ஸ்ரீதேவி தானாம்.


    போனி கபூரின் முந்தைய மற்றும் தற்போதைய தோற்றம்.

    அவர் கூறும்போது, ''எடையைக் குறைத்து அழகாக மாறுங்கள். முடிமாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி என் மனைவி சொல்லிக்கொண்டு இருப்பார். அதெல்லாம் எதற்கு? என்று நினைத்துக்கொள்வேன்.

    இப்போது என் மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தோன்றியது. அதனால் என் மனைவிக்கு பிடித்த மாதிரி மாறியுள்ளேன். இதை பார்க்க அவர் இல்லை எனும்போது வருத்தமாக இருக்கிறது'' என்றார்.

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'லவ் டுடே'.
    • இப்படத்தை தற்போது இந்தி மொழியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.

    கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக அவரே இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தியேட்டர்கள் மூலம் மட்டுமே ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாகவும் மேலும் ஓ.டி.டி. உரிமை மூலமும் பெரிய தொகை வந்ததாகவும் தகவல் வெளியானது. அதன்பின்னர் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து படக்குழு வெளியிட்டது.

     

    லவ் டுடே

    லவ் டுடே

    சில தினங்களுக்கு முன்பு 'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர் என்றும் இதன் இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்தி பதிப்பையும் பிரதீப் ரங்கநாதனே இயக்க, அஜித்தின் துணிவு படத்தை தயாரித்து வரும் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசி வந்தனர்.

     

    போனி கபூர்

    போனி கபூர்

    இந்நிலையில் 'லவ் டுடே' இந்தி ரீமேக் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கை போனிகபூர் தயாரிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் போலியானவை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

    • 1996-ம் ஆண்டு ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    'கந்தன் கருணை' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி அதன்பின்னர் 'மூன்று முடிச்சு' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக வலம் வந்தார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த இவர் பல மொழி படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.


    நடிகை ஸ்ரீதேவி கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஒரு ஓட்டலின் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். இவரது மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. அதன்பின்னர் பல தகவல்களுக்கு பிறகு அது ஓய்ந்தது.


    இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள நேர்காணலில், "ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. திடீர் விபத்தால் நிகழ்ந்த மரணம். துபாயில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை உட்பட அனைத்து விசாரணைகளும் எனக்கு நடந்தன. இறப்பில் எந்தக் குற்றமும் இல்லை என்றும் அது தற்செயலாக நடந்த விபத்து என்றும் போலீசார் உறுதிப்படுத்தினர்.


    ஸ்ரீதேவி திரையில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக அடிக்கடி பட்டினி இருப்பார். எங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து சட்டென மயக்கமாகும் நிலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறார். அப்போது தான் மருத்துவர் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாக கூறினார். திருமணத்துக்கு முன்னதாக, இதேபோல் டயட்டில் இருந்ததால் குளியலறையில் விழுந்து பல் உடைந்து போனதாக ஸ்ரீதேவி இறந்தபின் நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார்'' என்று போனி கபூர் கூறினார்.

    • போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்
    • ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்


     



    ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் தலைப்பிடாத புதிய படம் தற்போதைக்கு ராம்சரண் 16 என அழைக்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. புதிய பட துவக்க விழா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    இவ்விழாவில் நடிகர் சிரஞ்சீவி, ராம் சரணின் மனைவி, உபாசனா காமினேனி, இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்றனர. புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

    முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

     


     




     



    ஜான்வி கபூரின் அடுத்த படமாக இப்படம் அமைந்து இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இதனால் ராம்சரணின் 16 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • போனிகபூர் தனது மகள் ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா காதலை ஏற்றுக்கொண்டு அதனை அங்கீகரித்து உள்ளார்
    • 'மகள் ஜான்வி- ஷிகர் காதலை மனமார வரவேற்கிறேன். விரைவில் திருமண ஏற்பாடுகள் நடைபெறும் " என தெரிவித்தார்.

    பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி தம்பதிகளின் மூத்த மகள் ஜான்வி கபூர்.பல்வேறு இந்தி, தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக ஜான்விகபூர் திகழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில் ஜான்விகபூர் -ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார்.இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி பல ஆண்டுகளாக காதலை வளர்த்து வந்தனர். ஜான்விகபூர் - ஷிகர் பஹாரியா அடிக்கடி உணவகங்கள், பப்களில் ஜோடியாக காணப்பட்டு வந்தனர்.




    சமீபத்தில் ஜான்வி கபூரின் 27- வது பிறந்தநாளை யொட்டி காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி கோவிலுக்கு ஜோடியாக சென்று சாமி கும்பிட்டனர்.இந்த காதல் ஜோடிகளின் புகைப்படங்கள் வைரலாக பரவியது.

    இந்நிலையில் போனிகபூர் தனது மகள் ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா காதலை ஏற்றுக்கொண்டு அதனை அங்கீகரித்து உள்ளார். அதுகுறித்து போனிகபூர் மனம் திறந்து பேசி உள்ளார்.

    அப்போது 'மகள் ஜான்வி- ஷிகர் காதலை மனமார வரவேற்கிறேன். விரைவில் பெற்றோர்களிடம் உரிய முறையில் பேசி திருமண ஏற்பாடுகள் நடைபெறும் " என தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மேலும் அந்த நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.
    • திருப்பதியில் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

    தமிழ், இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. இவர் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தார் இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்ற போது ஸ்ரீதேவி திடீரென மரணம் அடைந்தார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.



    இந்தநிலையில், ஜான்வி கபூரும் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவும் காதலித்து வந்தனர்.

    ஷிகர் -ஜான்வி அடிக்கடி நேரில் சந்தித்து வந்தனர். சமீபத்தில் ஜான்வி - ஷிகர் ஜோடியாக திருப்பதி கோவிலுக்கு சென்றனர் .இவர்களது காதலை சமீபத்தில் போனிகபூரும் உறுதிப்படுத்தினார்.

    இந்நிலையில் மும்பையில் 'மைதான்' படத்தின் 'பிரிமியர் ஷோ' வுக்கு ஜான்வி வந்தார். வழக்கம் போல் அழகான தோற்றத்தால் கவர்ந்தார். ஆனால் இம்முறை அனைவரின் பார்வையும் அவர் அழகை விட கழுத்தில் இருந்த நெக்லஸ் மீதே இருந்தது.




    மேலும் அந்த நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் ஜான்வி தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொள்ள இந்த நகையை அணிந்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் திருமணத்துக்கு ஜான்வி கபூர் தயாராகி வருகிறார். திருப்பதியில் விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஜான்வி திருப்பதி கோவிலில் வைத்து தான் தனது திருமணம் நடைபெறும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார்.
    • இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான ஆடம்பர பங்களா கடற்கரை சாலையில் உள்ளது. பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் கூடிய இந்த வீடு அவரது மறைவுக்கு பின்பு போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது.

    சென்னை வரும்போது ஸ்ரீதேவி அடிக்கடி இந்த வீட்டில் தங்கி செல்வார். அவர் வாங்கிய முதல் ஆடம்பர மாளிகையான இந்த வீட்டை உலகம் முழுவதும் உள்ள கலைப் பொருள்கள் மற்றும் ஓவியங்களால் அலங்கரித்து வைத்திருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

    மே 12-ந் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது. இந்த ஆடம்பர வீட்டில் தென்னிந்திய உணவுகள் மற்றும் நெய் பொடி சாதம், பால்கோவா மற்றும் விருப்பமான சுவையான உணவு வசதிகள் தங்கும் விருந்தினர்களுக்கு கிடைக்கும்.

    இதுபற்றி ஜான்வி கபூர் கூறியதாவது:-

    எனது மிகவும் நேசத்துக்குரிய குழந்தை பருவ நினைவுகள் சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் எனது குடும்பத்துடன் கோடை காலத்தை கழித்தது என இந்த வீட்டை ஒரு சரணாலயம் போல் உணர்கிறேன். அந்த உணர்வை எனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    அதனால்தான் முதன் முறையாக சில விருந்தினர்களுக்கு எங்கள் வீட்டை திறக்கிறேன். 4 ஏக்கரில் உள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம் வசதியும் உள்ளது. எங்கள் கடலோர வீட்டுக்கு தனிப்பட்ட சுற்றுலாவுக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.

    காலையில் யோகா மற்றும் அற்புதமான உணவை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று கூறினார். ஜான்வி கப்பூர் நடித்த Mr & Mrs மஹி வரும் மே 31 வெளியாகவுள்ளது. தெலுங்கு மொழியில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலி கான் இணைந்து நடித்துள்ள தேவாரா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகார்த்திகேயன் படத்திலும் ஜான்விகபூர் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது.
    • சமீபகாலமாக ஜான்விகபூர் அடிக்கடி சென்னை வந்து செல்கிறார்.

    விஜய் நடித்து வரும் தி கோட் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக தனது 69-வது படத்தை எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்விகபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சமீபகாலமாக ஜான்விகபூர் அடிக்கடி சென்னை வந்து செல்கிறார். தனது தாயார் ஸ்ரீதேவி பிரபலமாக திகழ்ந்த தமிழ் திரை உலகில் அறிமுகமாக வேண்டும் என்பது ஜான்வி கபூரின் தீராத ஆசையாக இருந்து வருகிறது.

    அவரது ஆசையை தந்தை போனிகபூர் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார். விஜய்யின் 69 படத்தை இயக்க இருக்கும் எச்.வினோத், போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய 3 படங்களை இயக்கியவர்.

    எனவே முதல் முதலாக ஜான்விகபூர் அவரது இயக்கத்தில் அறிமுகமாவது சரியாக இருக்கும். அதுவும் விஜய்க்கு ஜோடியாக இணைந்தால் இரட்டை மகிழ்ச்சியாக அமையும் என போனிகபூர் விரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திலும் ஜான்விகபூர் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    ஜான்விகபூர் கடந்த முறை சென்னை வந்த போது தாயார் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த கோவிலான தியாகராய நகரில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

    கிழக்கு கடற்கரை சாலையில் அவருக்கு சொந்தமான பங்களாவை சுற்றுலா விடுதியாக மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ 3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர்.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவின் கணவர் மற்றும் தயாரிப்பாளரான போனிகபூர் பல படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரித்த அஜித்குமாரின் வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் சாதனை படைத்துள்ளது. மேலும், அஜித்குமாரின் அடுத்தபடமான எ.கே.61 படத்தையும் தயாரித்து வருகிறார்.

    இந்நிலையில், போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ.3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கிரெடிட் கார்டின் பில் கட்டவில்லை என்று போனிகபூருக்கு வங்கியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர்தான் போனிகபூருக்கு கிரெடிட் கார்ட் தவறாக பயன்படுத்தபட்டது தெரியவந்துள்ளது. மொத்தம் ஐந்து பரிவர்த்தணைகளில் இந்த மோசடி நடந்துள்ளது. 

    குடும்பத்தினருடன் போனிகபூர்
    குடும்பத்தினருடன் போனிகபூர்

    தனது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதை அறிந்த போனி கபூர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும், தனது கிரெடிட் கார்டு எண்களை குறித்து யாரும் கேட்கவில்லை. இது தொடர்பாக எந்த அழைப்பும் வரவில்லை என்றும் போனிகபூர் கூறியுள்ளார். 

    போனிகபூர் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது அவரது விவரங்களை மர்ம நபர்கள் பெற்றிருக்கலாம் என்றும் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பணபரிமாற்றம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த முறைகேடு  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    `நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து எச்.வினோத் - அஜித் இணையும் தல 60 படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

    அஜித்திடம், வினோத் அரசியல் கலந்த திரில்லர் கதை மற்றும் ஆக்‌ஷன் கதை ஒன்றையும் கூறினாராம். அரசியல் கதையில் விருப்பமில்லாத அஜித், ஆக்‌ஷன் கலந்த திரில்லர் கதைக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.



    இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகுவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ஜிம்மில் ஒர்கவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து வருகிறாராம். மேலும் அஜித் இந்த படத்தில் போலீசாக நடிப்பதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    `நேர்கொண்ட பார்வை' படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார்.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

    இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இவர் இதற்கு முன்பாக உதயம் என்.எச்.4, காஸி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×