search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Property issues"

    • சொத்து பிரச்சினையில் சகோதரியின் வீட்டுக்கு தீவைத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள திரளியை சேர்ந்த அசோக் குமாரின் மனைவி சத்யா(வயது36), இவருடைய அண்ணன் சந்தோஷ் குமார்(39) புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். சத்யா குடியிருந்த வீட்டை அவரது தந்தை அவருக்கே எழுதி கொடுத்து விட்டார். இதனால் அண்ணன், தங்கைக்கு சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சந்தோஷ்குமார் நேற்று சத்யா வீட்டுக்கு வந்தார். சொத்து பிரச்சினை காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார், சத்யா வீட்டுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் சத்யா வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×