search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airbnb"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார்.
    • இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான ஆடம்பர பங்களா கடற்கரை சாலையில் உள்ளது. பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் கூடிய இந்த வீடு அவரது மறைவுக்கு பின்பு போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது.

    சென்னை வரும்போது ஸ்ரீதேவி அடிக்கடி இந்த வீட்டில் தங்கி செல்வார். அவர் வாங்கிய முதல் ஆடம்பர மாளிகையான இந்த வீட்டை உலகம் முழுவதும் உள்ள கலைப் பொருள்கள் மற்றும் ஓவியங்களால் அலங்கரித்து வைத்திருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

    மே 12-ந் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது. இந்த ஆடம்பர வீட்டில் தென்னிந்திய உணவுகள் மற்றும் நெய் பொடி சாதம், பால்கோவா மற்றும் விருப்பமான சுவையான உணவு வசதிகள் தங்கும் விருந்தினர்களுக்கு கிடைக்கும்.

    இதுபற்றி ஜான்வி கபூர் கூறியதாவது:-

    எனது மிகவும் நேசத்துக்குரிய குழந்தை பருவ நினைவுகள் சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் எனது குடும்பத்துடன் கோடை காலத்தை கழித்தது என இந்த வீட்டை ஒரு சரணாலயம் போல் உணர்கிறேன். அந்த உணர்வை எனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    அதனால்தான் முதன் முறையாக சில விருந்தினர்களுக்கு எங்கள் வீட்டை திறக்கிறேன். 4 ஏக்கரில் உள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம் வசதியும் உள்ளது. எங்கள் கடலோர வீட்டுக்கு தனிப்பட்ட சுற்றுலாவுக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.

    காலையில் யோகா மற்றும் அற்புதமான உணவை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று கூறினார். ஜான்வி கப்பூர் நடித்த Mr & Mrs மஹி வரும் மே 31 வெளியாகவுள்ளது. தெலுங்கு மொழியில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலி கான் இணைந்து நடித்துள்ள தேவாரா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டாலர் குறியீடு தெரிந்ததே தவிர அது எந்த நாட்டுடையது என்பது குறிப்பிடப்படவில்லை
    • தனது தவறை ஒப்பு கொண்ட நிறுவனம் நஷ்ட ஈடு தர சம்மதித்தது

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சான் பிரான்சிஸ்கோ நகரை மையமாக கொண்டு இயங்கும் வாடகை விடுதிகள் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதள நிறுவனம், ஏர்பிஎன்பி (Airbnb).

    2008ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், உலகெங்கும் வீடுகள், அபார்ட்மென்ட்கள், மற்றும் பயணியர் விடுதிகளை தங்குவதற்காக தேடும் பயனர்களுக்கு அவை குறித்த தகவல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. தங்கள் இடங்களை வாடகைக்கு விட விரும்புபவர்கள் ஏர்பிஎன்பியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில நாட்களுக்கு தங்க விரும்புபவர்கள் ஏர்பிஎன்பி (Airbnb) மூலம் அந்த இடங்களை முன்பதிவு செய்து உபயோகிக்க முடியும்.

    ஆஸ்திரேலியாவிலும் இந்நிறுவனத்தில் இணையதள வழியாக பதிவு செய்து தங்கள் இடங்களை வாடகைக்கு விடுகிறார்கள். அவற்றை பயன்படுத்த டாலர்களில் ஏர்பிஎன்பி கட்டணம் வசூலித்து வந்தது.

    ஒரு சில இடங்கள் குறித்த வாடகை கட்டணம் பயனாளிகளுக்கு டாலர் முறையில் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்நிறுவன இணையதளத்தில் டாலருக்கான குறியீடு தெரிந்ததே தவிர அது ஆஸ்திரேலிய டாலரா அல்லது அமெரிக்க டாலரா என்பதை குறிப்பிடவில்லை.

    இதனால், மதிப்பில் குறைந்த ஆஸ்திரேலிய டாலரில் கட்டணம் இருக்கும் என பதிவு செய்த பல பயனாளிகள் அதிக மதிப்புடைய அமெரிக்க டாலரில் கட்டணம் செலுத்தும்படி ஆனது.

    இதையடுத்து, ஏர்பிஎன்பி நிறுவனத்தின் மீது ஆஸ்திரேலிய மத்திய நீதிமன்றத்தில், நுகர்வோர்களுக்கான அரசாங்கத்தின் "ஆஸ்திரேலிய வர்த்தக போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்" வழக்கு தொடுத்தது. தங்கள் தரப்பில் தவறு நடந்திருப்பதை அந்நிறுவனம் ஒத்து கொண்டது.

    2018 ஜனவரி மாதத்திலிருந்து 2021 ஆகஸ்ட் மாதம் வரையான காலகட்டத்தில் சுமார் 63,000 வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் தந்து அதிக கட்டணம் வசூலித்ததற்காக நீதிமன்றம் 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. தனது தவறை ஒத்து கொண்ட ஏர்பிஎன்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தரவும் சம்மதித்துள்ளது.

    தற்போது 1 அமெரிக்க டாலர் இந்திய ரூபாயில் 83 எனவும், 1 ஆஸ்திரேலிய டாலர் இந்திய ரூபாயில் 56 எனவும் மதிப்பிடப்பட்டு உலகளவில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×