search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gym"

    • வீடியோ 31 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 3,200-க்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மந்திரியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    நாகலாந்து மாநிலத்தின் பா.ஜனதா மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் சுற்றுலா மற்றும் உயர் கல்வித்துறை மந்திரியுமான டெம்ஜென் இம்னா அலோங் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். இவரது பதிவுகள் நகைச்சுவையாக இருக்கும் என்பதால் நெட்டிசன்கள் மத்தியில் அவரது பதிவுகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும்.

    அந்த வகையில், தற்போது அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஜிம் வீடியோ பயனர்களை ரசிக்க செய்கிறது. அதில், மந்திரி டெம்ஜென் இம்னா அலோங் ஜிம்மில் உள்ள ஏர் வாக்கர் கருவியில் ஒர்க் அவுட் செய்யும் காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக உள்ளது. 'இதயம் இன்னும் குழந்தையாக உள்ளது' என்ற தலைப்பில் திரைப்பட பின்னணி இசையுடன் பகிரப்பட்ட அந்த வீடியோ 31 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 3,200-க்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மந்திரியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
    • உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்.

    இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக்கணக்கில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார்கள்.

    அத்துடன் எடை குறைப்பிற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை.

    இந்தநிலையில், ``உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் மன நிறைவாக சாப்பிட முடியும். அதேநேரத்தில் உங்களின் எடையும் குறையும்...'' என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட `அய்ன் ட்ரீ' மருத்துவமனை, 500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது. இந்த ஆய்வை ராபர்ட் என்ற மருத்துவர் தலைமையேற்று, நடத்தி முடித்திருக்கிறார்.

    ``உணவை எப்படி வேறு விதமாக பார்ப்பது?'' என்ற கேள்விக்கு ராபர்ட் பதில் அளிக்கிறார்.

    ``உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதை போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம். அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.

    முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்த பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதை போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறி இருக்கும்'' என்றார்.

    • பயிற்சியாளர் ஒருவரின் உதவி மூலம் வீட்டிலேயே பயிற்சி செய்தார்.
    • ஜிம் உடற்பயிற்சி செய்வதன் காரணமாக 89 வயதிலும் தடையின்றி நடக்கக்கூடிய சுதந்திரத்தை அனுபவிப்பதாக டாக்டர் சபாபதி தெரிவித்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    நோயில்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் அவசியம் தேவை. இதனை அறிந்தவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலர் தள்ளாத வயதிலும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

    இதன்மூலம் வயதான பிறகும் உற்சாகமாக நடைபோடும் சிலரை நாம் பார்த்திருப்போம். அது போன்று கேரள மாநிலத்தில் 89 வயதில் முதியவர் ஒருவர், ஜிம் உடற்பயிற்சியை செய்து வருகிறார். அவர் எர்ணாகுளத்தை சேர்ந்த சபாபதி ஆவார்.

    மருத்துவரான இவர் எர்ணாகுளத்தில் மருத்துவமனை வைத்திருக்கிறார். நடைப்பயிற்சியை வழக்கமாக செய்துவந்த அவர், வயது முதிர்வு காரணமாக அதில் சில சிக்கல்களை எதிர்கொண்டார். இதனால் பயிற்சியாளர் ஒருவரின் உதவி மூலம் வீட்டிலேயே பயிற்சி செய்தார்.

    இதன் காரணமாக நடைப்பயிற்சி செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட்டார். இதையடுத்து ஜிம்மில் சேர்ந்து தீவிர உடற்பயிற்சி செய்ய சபாபதி முடிவு செய்தார். அதன்படி கடவந்திரா பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் முன்பு சேர்ந்தார்.

    அங்கு எடை பயிற்சி, செயல்பாட்டு பயிற்சி, சம நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்கிறார். சபாபதி அதிக மன உறுதியுடன் இருந்ததால் அனைத்துவித உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறார்.

    87 வயது முதியவர் உற்சாகமாக உடற்பயிற்சி செய்வதை, அவர் பயிற்சி செய்யும் ஜிம்மை சேர்ந்த இளைஞர்கள் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். ஜிம் உடற்பயிற்சி செய்வதன் காரணமாக 89 வயதிலும் தடையின்றி நடக்கக்கூடிய சுதந்திரத்தை அனுபவிப்பதாக டாக்டர் சபாபதி தெரிவித்திருக்கிறார்.

    மருத்துவர் சபாபதியின் இந்த செயல்பாடு முதியோருக்கான ஜிம் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது என்றால் மிகையல்ல.

    • கொழுப்பை கரைக்க பல வகையில் முட்டுக்கட்டை போடும்.
    • உடற்பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட வேண்டாம்.

    நீங்கள் நாள் தவறாமல் ஜிம்முக்கு போய் உடல் பயிற்சி செய்துவந்தால், உடலுக்கு நல்லதுதான். ஆனால் நீங்கள் பருமனாக இருக்கும் பட்சத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது நல்லதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    ஜிம் போகும்போது நீங்கள் கவனத்தில் வைக்கவேண்டிய சில விஷயங்கள்:

    ஜிம் சென்று தான் உடலை குறைப்பேன் என்று நீங்கள் சபதம் எடுத்துவிட்டால், அது ஒரு நீண்ட பயணம் என்பதை என்றைக்கும் மறக்காதீர்கள். நீங்கள் இந்த முயற்சியில் வெற்றியை விட தோல்வியையே அதிகமாக சந்திப்பீர்கள் என்பதே யதார்த்தம். இதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    உங்கள் உடல் "கொழுப்பு சேமிக்கும் கிடங்காக" பல காலம் இருந்தபடியால், உடனே குழுப்பை கரைக்க அது பல வகையில் முட்டுக்கட்டை போடும். அதனால் மனம் தளராமல் தினமும் முயற்சியை தொடரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    நீங்கள் உடல் பயிற்சி செய்யத்தொடங்கிய சில வாரங்களுக்கு உடல் எடை குறைப்பு நடைபெறும். ஆனால் போகப்போக உடல் எடை குறைப்பு குறைவாகவே காணப்படும். இதனால் ஒரு வித அலுப்பு மேலோங்கத் தொடங்கும். நல்ல மனவலிமையால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து விடுவித்துக்கொண்டு உங்களை தட்டிக்கொடுக்க இயலும்.

    அதனால் எக்காரணம் கொண்டும், வெற்றி எளிதாக வந்து சேரும் என்று எண்ணவேண்டாம். உடற்பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட வேண்டாம்.

    வெறும் ஜிம் மட்டுமே சென்று பயிற்சிகள் பல செய்வேன், ஆனால் கண்டதை திண்பேன் என்று நினைத்தால், அங்கே மாபெரும் தவறினை செய்கிறீர்கள். ஆரோக்கியமான உணவு உட்கொள்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

    சரியான உணவு மிக முக்கியம் என்பது உண்மை. உடல் பயிற்சியும், சரியான டயட்டும் இரு கைகளை போன்றது. பருமனானவர்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை சந்தித்து என்னென்ன உடல் பயிற்சிகளை செய்யலாம், செய்யக்கூடாது என்று ஒரு பட்டியலை வாங்கிவிடுவது சிறந்தது. உங்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் இருக்கும் பட்சத்தில் மேலும் சிக்கல் உண்டு. நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை நாடியே தீர வேண்டும். ஏனென்றால் சில உடற்பயிற்சி முறைகள் விபரீதமாக முடிய வாய்ப்புகள் அதிகம்.

    • இளைஞர்கள் எதிர்பார்ப்பு
    • சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் ஒட்டியுள்ள பகுதியில் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. பல மாதங்களுக்கு முன்பு வரை அம்மா பூங்கா மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின் பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது.

    இதில் மின் கம்பங்கள், சிமெண்டு கான்கிரீட், பேவா் பிளாக், பொதுமக்கள் மக்கள் அமரும் இருக்கை, கூழாங்கல்லால் 8 வடிவிலான நடைப்பாதை, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் என அனைத்தும் பராமரிப்பின்றி துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்ததால் பூங்கா புதர் மண்டி காட்சியளிக்கிறது.இதேப்போல் பூங்காவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

    அதில் உள்ள நவீன கருவிகள் எல்லாம் இதுவரை பயன்படுத்தவில்லை. இந்தஉடற்பயிற்சி கூடம் இதுவரை திறக்கப்படாமல் இளைஞா்களின் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.

    உடற்பயிற்சி கருவிகள் துருப்பிடித்து நிலையில் உள்ளதாக இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

    மேலும் இங்கு உடைந்த குப்பைகள் அள்ளுவதற்காக பயன்படுத்தும் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிக்குயில் அதிகாரிகள் பலமுறை ஆய்வுக்கு வந்தும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.

    இதனால் அந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சிகூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

    இது குறித்து அந்த பகுதி மக்களும், இளைஞர்களும் கூறியதாவது:-

    இந்த பூங்கா மிகவும் எங்கள் பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக உள்ளது. இந்த பூங்கா சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.

    சிறுவர்கள் விளையாடு வதற்காக அமைக்கப்பட்ட ஊஞ்சல், சறுக்குதல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் உடைந்து காணப்படுகிறது.

    மேலும் பூங்காவுக்கு வருபவர்களின் அவசர தேவைக்காக கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாடுவதால் பூங்காவுக்குள் சென்று வர அணைவரும் அச்சப்படுகின்றனர்.

    எனவே பழுதடைந்து கிடக்கும் பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீட்டில் இருந்தே எளிய முறையில் வெறும் டம்பள்களை வைத்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
    • உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

    நாம் ஒவ்வொருவரும் உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக ஜிம் சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் சரியான உடல் அமைப்பை பெற முடியும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம்.

    ஆனால் சிலருக்கு ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்வதற்கு நேரம் இருப்பதில்லை. மற்றும் பொருளாதார சூழ்நிலை எல்லோருக்கும் ஜிம்மிற்கு செல்லும்படியாக அமைவதில்லை. எனவே வீட்டில் இருந்தே எளிய முறையில் வெறும் டம்பள்களை வைத்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    இதனை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும். இந்த உடற்பயிற்சியில் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு டம்பள்களை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சிறிது குனிந்துக்கொள்ள வேண்டும். உங்கள் கால்கள் இரண்டையும் சிறிது குறுக்கி கொள்ள வேண்டும்.

    இப்போது கைகளை பூமியை நோக்கி தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். இப்போது உங்கள் டம்பிள் இரண்டையும் உங்கள் கால்கள் பக்கமாக மேல்நோக்கி தூக்க வேண்டும். பிறகு கீழே இறக்க வேண்டும். இதை திரும்ப திரும்ப செய்ய வேண்டும். இப்படி நீங்கள் கைகளை மேலே தூக்கும்போது அவை உங்கள் விலா எலும்பு வரை மட்டுமே வர வேண்டும். இப்படியாக 20 தடவை செய்ய வேண்டும்.

    இந்த பயிற்சியை செய்ய உங்களுக்கு அருகில் ஒரு மேசையை வைத்து கொள்ள வேண்டும். ஒரு காலை அந்த மேசை மீது மடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உங்களது உடலை நிலத்தை நோக்கி சற்று சாய்த்துக்கொள்ள வேண்டும். இப்போது ஒரு கையை மேஜை மேல் ஊன்றிக்கொண்டு உங்கள் ஒற்றை கையை பூமியை நோக்கி கீழே வைத்துக்கொண்டு டம்புளை பிடித்துக்கொண்டு பூமியில் இருந்து மேல் நோக்கி உங்கள் விலா எழும்புகள் வரை இழுக்க வேண்டும். பிறகு மீண்டும் டம்புளை பூமியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இப்படியாக தினமும் 20 முறை செய்ய வேண்டும்.

    இந்த உடற்பயிற்சியை செய்ய இரண்டு கைகளிலும் டம்பிள்ஸ் வைத்திருக்க வேண்டும். இதற்கும் முந்தைய உடற்பயிற்சி போலவே உடலை கீழ் நோக்கி வளைத்துக்கொள்ள வேண்டும். கைகளை டம்பிள்ஸோடு தரையை நோக்கி தொங்கவிட வேண்டும். அதன் பிறகு முதலில் வலது டம்பிள்ஸை விலா எழும்பு வரை மேல் நோக்கி தூக்க வேண்டும். பிறகு அதை கீழே செலுத்த வேண்டும். அடுத்ததாக இடது கை டம்பிள்சையும் அதேபோல செய்யவேண்டும். இப்படியாக தினமும் ஒவ்வொரு கையை கொண்டும் 20 பிரதிகள் செய்ய வேண்டும்.

    இதுவரை கைகளுக்கான உடற்பயிற்சியை பார்த்தோம். இப்போது பார்க்கப்போகும் உடற்பயிற்சி கால்களுக்கான உடற்பயிற்சி ஆகும். இதற்கு முதலில் ஒரு டம்பிளை எடுத்து இடுப்புக்கு நேராக முன்னோக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நேராக நின்றுகொண்டு டம்பிள்ஸை பூமியை நோக்கி செலுத்த வேண்டும்.

    அதே சமயம் உங்கள் ஒரு காலானது தூக்கப்பட வேண்டும். அது பூமியிலிருந்து மேல் நோக்கி வர வேண்டும். இது கிட்டத்தட்ட ஒரு சீசா அமைப்பு போல இருக்கும். டம்பிள் கீழ் நோக்கி போகும்போது உங்களது கால் மேல் நோக்கி வர வேண்டும். இவ்வாறு திரும்ப திரும்ப தினமும் 20 தடவை செய்ய வேண்டும்.

    இந்த உடற்பயிற்சிக்கு உங்களுக்கு ஒரே ஒரு டம்புள் போதுமானது. இது ஒரே ஒரு கைக்கான உடற்பயிற்சி. முதலில் உங்கள் கைகளில் டம்பிளை பிடித்து அதை முன்னோக்கி நகர்த்த வேண்டும். மற்ற உடற்பயிற்சி போல் அல்லாமல் உங்களது உடல் முன்னோக்கி இருக்க வேண்டும். பிறகு மீண்டும் கையை மடித்து சாதரண நிலைக்கு வர வேண்டும். சரியாக உங்கள் கைகள் 90 டிகிரியில் டம்புள்ஸோடு இடம் பெயர வேண்டும்.

    ஒவ்வொரு கைக்கும் இதை தினமும் 20 முறை செய்ய வேண்டும். இதை செய்வதற்கு இரண்டு டம்புள்ஸ்கள் தேவைப்படும். ஒவ்வொரு கையிலும் ஒரு டம்புள்ஸை பிடித்துக்கொண்டு மற்ற உடற்பயிற்சியை போலவே சற்று குனிந்துகொள்ள வேண்டும். பிறகு டம்புள்ஸை கீழ் நோக்கி பிடித்துக்கொண்டு அங்கிருந்து உடலின் பின்புறத்திற்கு மேலாக டம்புள்ஸை கொண்டு செல்ல வேண்டும். பிறகு மீண்டும் கையை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்படியே 20 தடவை செய்ய வேண்டும்.

    இப்படியாக டம்புள்ஸை வைத்தே வீட்டில் எளிமையாக செய்யப்படும் இந்த உடற்பயிற்சி உடலுக்கு நலன் அளிப்பதோடு உங்கள் மாதாந்திர ஜிம்மிற்கு கட்ட வேண்டிய பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.

    • அரசு சார்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
    • தனியார் உடற்பயிற்சிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாரணாபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தாய் திட்டம் 2 மூலமாக 2018-ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூட மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த உடற்பயிற்சி கூடமானது நாரணாபுரம், கல்ராசிபாளையம், மாணிக்கம் பாளையம், குன்னத்தூர், குன்னத்தூர் புதூர், மற்றும் நான்தேவகவுண்டன் புதூர் உட்பட்ட கிராமங்களில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாலிபர்கள் மற்றும் முதியோர்களின் உடல் நல ஆரோகியத்திற்காக இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

    தனியார் உடற்பயிற்சிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

    இதனால் அரசு சார்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடமானது பயன்படுத்தபடாமல் வீணாக உள்ளது.

    இதன் சுற்று சுவற்றில் பொதுமக்கள் துணிகளை காயப்போட்டு வருகின்றனர். மேலும் உடற்பயிற்சி கூடத்தில் சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் அங்குள்ள உபகரணங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே உடற்பயிற்சி கூடத்தை ஊராட்சி நிர்வாகம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×