என் மலர்

    நீங்கள் தேடியது "gym"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளைஞர்கள் எதிர்பார்ப்பு
    • சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் ஒட்டியுள்ள பகுதியில் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. பல மாதங்களுக்கு முன்பு வரை அம்மா பூங்கா மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின் பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது.

    இதில் மின் கம்பங்கள், சிமெண்டு கான்கிரீட், பேவா் பிளாக், பொதுமக்கள் மக்கள் அமரும் இருக்கை, கூழாங்கல்லால் 8 வடிவிலான நடைப்பாதை, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் என அனைத்தும் பராமரிப்பின்றி துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்ததால் பூங்கா புதர் மண்டி காட்சியளிக்கிறது.இதேப்போல் பூங்காவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

    அதில் உள்ள நவீன கருவிகள் எல்லாம் இதுவரை பயன்படுத்தவில்லை. இந்தஉடற்பயிற்சி கூடம் இதுவரை திறக்கப்படாமல் இளைஞா்களின் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.

    உடற்பயிற்சி கருவிகள் துருப்பிடித்து நிலையில் உள்ளதாக இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

    மேலும் இங்கு உடைந்த குப்பைகள் அள்ளுவதற்காக பயன்படுத்தும் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிக்குயில் அதிகாரிகள் பலமுறை ஆய்வுக்கு வந்தும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.

    இதனால் அந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சிகூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

    இது குறித்து அந்த பகுதி மக்களும், இளைஞர்களும் கூறியதாவது:-

    இந்த பூங்கா மிகவும் எங்கள் பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக உள்ளது. இந்த பூங்கா சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.

    சிறுவர்கள் விளையாடு வதற்காக அமைக்கப்பட்ட ஊஞ்சல், சறுக்குதல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் உடைந்து காணப்படுகிறது.

    மேலும் பூங்காவுக்கு வருபவர்களின் அவசர தேவைக்காக கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாடுவதால் பூங்காவுக்குள் சென்று வர அணைவரும் அச்சப்படுகின்றனர்.

    எனவே பழுதடைந்து கிடக்கும் பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் இருந்தே எளிய முறையில் வெறும் டம்பள்களை வைத்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
    • உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

    நாம் ஒவ்வொருவரும் உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக ஜிம் சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் சரியான உடல் அமைப்பை பெற முடியும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம்.

    ஆனால் சிலருக்கு ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்வதற்கு நேரம் இருப்பதில்லை. மற்றும் பொருளாதார சூழ்நிலை எல்லோருக்கும் ஜிம்மிற்கு செல்லும்படியாக அமைவதில்லை. எனவே வீட்டில் இருந்தே எளிய முறையில் வெறும் டம்பள்களை வைத்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    இதனை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும். இந்த உடற்பயிற்சியில் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு டம்பள்களை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சிறிது குனிந்துக்கொள்ள வேண்டும். உங்கள் கால்கள் இரண்டையும் சிறிது குறுக்கி கொள்ள வேண்டும்.

    இப்போது கைகளை பூமியை நோக்கி தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். இப்போது உங்கள் டம்பிள் இரண்டையும் உங்கள் கால்கள் பக்கமாக மேல்நோக்கி தூக்க வேண்டும். பிறகு கீழே இறக்க வேண்டும். இதை திரும்ப திரும்ப செய்ய வேண்டும். இப்படி நீங்கள் கைகளை மேலே தூக்கும்போது அவை உங்கள் விலா எலும்பு வரை மட்டுமே வர வேண்டும். இப்படியாக 20 தடவை செய்ய வேண்டும்.

    இந்த பயிற்சியை செய்ய உங்களுக்கு அருகில் ஒரு மேசையை வைத்து கொள்ள வேண்டும். ஒரு காலை அந்த மேசை மீது மடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உங்களது உடலை நிலத்தை நோக்கி சற்று சாய்த்துக்கொள்ள வேண்டும். இப்போது ஒரு கையை மேஜை மேல் ஊன்றிக்கொண்டு உங்கள் ஒற்றை கையை பூமியை நோக்கி கீழே வைத்துக்கொண்டு டம்புளை பிடித்துக்கொண்டு பூமியில் இருந்து மேல் நோக்கி உங்கள் விலா எழும்புகள் வரை இழுக்க வேண்டும். பிறகு மீண்டும் டம்புளை பூமியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இப்படியாக தினமும் 20 முறை செய்ய வேண்டும்.

    இந்த உடற்பயிற்சியை செய்ய இரண்டு கைகளிலும் டம்பிள்ஸ் வைத்திருக்க வேண்டும். இதற்கும் முந்தைய உடற்பயிற்சி போலவே உடலை கீழ் நோக்கி வளைத்துக்கொள்ள வேண்டும். கைகளை டம்பிள்ஸோடு தரையை நோக்கி தொங்கவிட வேண்டும். அதன் பிறகு முதலில் வலது டம்பிள்ஸை விலா எழும்பு வரை மேல் நோக்கி தூக்க வேண்டும். பிறகு அதை கீழே செலுத்த வேண்டும். அடுத்ததாக இடது கை டம்பிள்சையும் அதேபோல செய்யவேண்டும். இப்படியாக தினமும் ஒவ்வொரு கையை கொண்டும் 20 பிரதிகள் செய்ய வேண்டும்.

    இதுவரை கைகளுக்கான உடற்பயிற்சியை பார்த்தோம். இப்போது பார்க்கப்போகும் உடற்பயிற்சி கால்களுக்கான உடற்பயிற்சி ஆகும். இதற்கு முதலில் ஒரு டம்பிளை எடுத்து இடுப்புக்கு நேராக முன்னோக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நேராக நின்றுகொண்டு டம்பிள்ஸை பூமியை நோக்கி செலுத்த வேண்டும்.

    அதே சமயம் உங்கள் ஒரு காலானது தூக்கப்பட வேண்டும். அது பூமியிலிருந்து மேல் நோக்கி வர வேண்டும். இது கிட்டத்தட்ட ஒரு சீசா அமைப்பு போல இருக்கும். டம்பிள் கீழ் நோக்கி போகும்போது உங்களது கால் மேல் நோக்கி வர வேண்டும். இவ்வாறு திரும்ப திரும்ப தினமும் 20 தடவை செய்ய வேண்டும்.

    இந்த உடற்பயிற்சிக்கு உங்களுக்கு ஒரே ஒரு டம்புள் போதுமானது. இது ஒரே ஒரு கைக்கான உடற்பயிற்சி. முதலில் உங்கள் கைகளில் டம்பிளை பிடித்து அதை முன்னோக்கி நகர்த்த வேண்டும். மற்ற உடற்பயிற்சி போல் அல்லாமல் உங்களது உடல் முன்னோக்கி இருக்க வேண்டும். பிறகு மீண்டும் கையை மடித்து சாதரண நிலைக்கு வர வேண்டும். சரியாக உங்கள் கைகள் 90 டிகிரியில் டம்புள்ஸோடு இடம் பெயர வேண்டும்.

    ஒவ்வொரு கைக்கும் இதை தினமும் 20 முறை செய்ய வேண்டும். இதை செய்வதற்கு இரண்டு டம்புள்ஸ்கள் தேவைப்படும். ஒவ்வொரு கையிலும் ஒரு டம்புள்ஸை பிடித்துக்கொண்டு மற்ற உடற்பயிற்சியை போலவே சற்று குனிந்துகொள்ள வேண்டும். பிறகு டம்புள்ஸை கீழ் நோக்கி பிடித்துக்கொண்டு அங்கிருந்து உடலின் பின்புறத்திற்கு மேலாக டம்புள்ஸை கொண்டு செல்ல வேண்டும். பிறகு மீண்டும் கையை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்படியே 20 தடவை செய்ய வேண்டும்.

    இப்படியாக டம்புள்ஸை வைத்தே வீட்டில் எளிமையாக செய்யப்படும் இந்த உடற்பயிற்சி உடலுக்கு நலன் அளிப்பதோடு உங்கள் மாதாந்திர ஜிம்மிற்கு கட்ட வேண்டிய பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு சார்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
    • தனியார் உடற்பயிற்சிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாரணாபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தாய் திட்டம் 2 மூலமாக 2018-ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூட மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த உடற்பயிற்சி கூடமானது நாரணாபுரம், கல்ராசிபாளையம், மாணிக்கம் பாளையம், குன்னத்தூர், குன்னத்தூர் புதூர், மற்றும் நான்தேவகவுண்டன் புதூர் உட்பட்ட கிராமங்களில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாலிபர்கள் மற்றும் முதியோர்களின் உடல் நல ஆரோகியத்திற்காக இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

    தனியார் உடற்பயிற்சிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

    இதனால் அரசு சார்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடமானது பயன்படுத்தபடாமல் வீணாக உள்ளது.

    இதன் சுற்று சுவற்றில் பொதுமக்கள் துணிகளை காயப்போட்டு வருகின்றனர். மேலும் உடற்பயிற்சி கூடத்தில் சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் அங்குள்ள உபகரணங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே உடற்பயிற்சி கூடத்தை ஊராட்சி நிர்வாகம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×