search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children's Park"

    • திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
    • வடிகால் கால்வாயில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டு வரு கிறது. எனவே உடனடியாக அவற்றை சரி செய்து சுகாதாரத்தை பேண வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் சிறுவர் பூங்கா அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் கண்மணியிடம் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் வழங்கினார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்செந்தூர் நகராட்சி யாக தரம் உயர்த்த ப்பட்டு ள்ளது. மேலும் கோவில் நகர மாக இருப்பதாலும் குழந்தைகள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதி யாக சிறப்பு அம்சங்களுடன் சிறுவர் பூங்கா அமைத்து அதில் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் நடை பயிற்சி செய்யும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும், நகராட்சி சார்பில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுக ளிலும் குடிநீர் வரும் நேரத்தை கரும்பலகை வைத்து அதன் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும், திருச்செந்தூர் மேல்பகுதியில் தோப்பூரில் இருந்து ஜீவா நகர் வரை செல்லும் ஆவுடையார் குளம் வடிநீர் கால்வாயில் கழிவுநீர் கலக்கப்பட்டும், குப்பைகள் கொட்டப்பட்டும் வருகிறது.

    அந்த பகுதியில் அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்செ ந்தூர் நகராட்சி அலுவலகம் ஆகியவைகள் உள்ளன. இதனால் வடிகால் கால்வா யில் கொ சுக்கள் உற்பத்தியாகி கொசு தொ ல்லை மற்றும் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டு வரு கிறது. எனவே உடன டியாக அவற்றை சரி செய்து சுகா தாரத்தை பேண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

    • பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைகளிடம் பேசினார்
    • காவலர் குடியிருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் போலீஸ் குடியிருப்பில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் காவலர் குடியிருப்புக்கு வந்தார்.

    அப்போது அவரை குழந்தைகள் பூங்கொந்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்வெட்டு திறந்துவைத்து ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைக ளிடம் பேசினார். அங்கு உள்ள செட்டில்கார்ட் மைதானத்தில் பயிற்சி எடுத்துவரும் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்களிடம் கைகு லுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    தொடர்ந்து காவலர் குடியிருப்பை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு, அங்கு வசிக்கும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் காவலர் குடியி ருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்றவர், அங்கு உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பெரியநாய க்கன்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், கணேசமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி, தனிப்பிரிவு சிறப்பு காவலர் கங்காதரன் விஜயகுமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ், காவலர் அன்சர், மாருதி கல்லூரி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் காவலர்களின் குடும்பத்தி னர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானிய திட்டத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது.
    • தனலட்சுமி பொன்னுசாமி பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 5வது வார்டுக்கு உட்பட்ட நியூ டவுன் பகுதியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சிறுவர்கள், சிறுமியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாத்தான்குளம் பேரூராட்சி 9-வது வார்டில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
    • இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சி 9-வது வார்டில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஸ்டெல்லாபாய் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா முன்னிலை வகித்தார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேணுகோபால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் குருசாமி, பிச்சிவிளை சுதாகர், பேரூராட்சி துணைத்தலைவர் மாரியம்மாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப், அலெக்ஸ், சுந்தர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி, மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் வசுமதி, முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஜாக்குலின், தி.மு.க. நகர செயலாளர் மகாஇளங்கோ, அழகம்மன் கோவில் அறங்காவல் குழுத்தலைவர் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் பாபு (பேய்குளம்), கோதண்டராமன் (ஆழ்வார்), ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பாஸ்கர், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று.
    • ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

    ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்:

    நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று. கடந்த 1926-ம் ஆண்டில் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. இதை நிறுவிய ஸ்ரீஅரவிந்தர், அவரது தலைமை சிஷ்யையாக விளங்கிய ஸ்ரீஅன்னை ஆகியோரது சமாதிகள் இங்கு உள்ளன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் எராளமான பக்தர்கள் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். யோகா, மன அமைதியை விரும்புவோரை ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் கவர்ந்து வருகிறது.

    ஆரோவில்:

    புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124 நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

    பொட்டானிக்கல் கார்டன்:

    புதுச்சேரி புது பஸ் நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826&ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

    அரிக்கமேடு:

    பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

    இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி. 600-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத் தகுந்தவை.

    • சுமார் 1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சி பொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், முத்தூர்பேரூராட்சி, மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம்மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவி ல்நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அமைச்சர் கூறியதாவது:-

    வெள்ளகோவில் நகராட்சியில் 2022-23ம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டு தீத்தாம்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய பகுதியில் 1 லட்சம்கொள்ளளவு கொண்ட மேல்நிலை த்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தமேல்நிலைத் தொட்டியிலிருந்து சுமார் 1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முத்தூர் பேரூராட்சி மகாலட்சுமி நகரில்மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர்பூ ங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்தீர்த்தாம்பா ளையம் மற்றும் தண்ணீர் பந்தலில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தேன் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர்குமரேசன்,வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சி பொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • 4700 நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், முத்தூர்பேரூராட்சி, மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம்மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில்நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அமைச்சர் கூறியதாவது :- வெள்ளகோவில் நகராட்சியில் 2022-23ம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டு தீத்தாம்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய பகுதியில் 1 லட்சம்கொள்ளளவு கொண்ட மேல்நிலை த்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தமேல்நிலைத் தொட்டியிலிருந்து சுமார் 1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

    முத்தூர் பேரூராட்சி மகாலட்சுமி நகரில்மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர்பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தேன் என்றார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர்குமரேசன்,வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சிபொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
    • தியாகராஜநகர், டி.வி.எஸ். நகர், தாமிரபரணி காலனி உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்்கு கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    பாளை தியாகராஜநகரை சேர்ந்த சமூக ஆர்வலரான செல்வகுமார் என்பவர் அளித்த மனுவில், தியாகராஜநகர், டி.வி.எஸ். நகர், தாமிரபரணி காலனி உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே அந்த நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மாநகராட்சி 55- வது வார்டு உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் அளித்த மனுவில், குமரேசன் நகர் முன்பு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரும் அங்கு இதுவரை பூங்கா அமைப்பதற்கான நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே காலம் தாழ்த்தாமல் விரைவில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    • கோட்டக்குப்பம் நகராட்சி சின்ன கோட்டக்குப்பம் 14-வது வார்டில் கலைஞர் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள் பூங்கா அமைக்கப்படுகிறது.
    • இதற்கான பணியை பூமி பூஜை செய்து நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் நகராட்சி சின்ன கோட்டக்குப்பம் 14-வது வார்டில் கலைஞர் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள் பூங்கா அமைக்கப்படுகிறது.

    இதற்கான பணியை பூமி பூஜை செய்து நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் மங்கயர்கரசன், நகர மன்ற துணை தலைவர் ஜீனத்பீவி முபாரக், 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஸ்டாலின் சுகுமார், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், ஜெயஸ்ரீ சுகுமார், வார்டு தி.மு.க. செயலாளர்கள் வரதன், வெங்கடேசன், நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இதுவரை 67 ஆயிரம் இடங்களில் தூய்மை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுவையில் உள்ள தேசிய புள்ளியியல் துணை மண்டல அலுவலக கள செயல் பாட்டு பிரிவு சார்பில் புதுவை இந்திரா காந்தி குழந்தைகள் பூங்காவில் உதவி இயக்குனர் அமெலியா பெட்ஸி தலைமையில் கள மேற்பார்வையாளர்கள், களப்பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை செய்தனர். இதன் மூலம் நமது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை தூய்மையாக வைத்து தேசத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

    • சீரமைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
    • ஊஞ்சல் விளையாட்டு தரைப் பகுதியில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலை களால் சூழப்பட்டுள்ளது. அத்தனாவூர் பகுதியில் படகு இல்லம், இயற்கைபூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, சாகச விளையாட்டுக்கள், சுவாமிமலை, நிலாவூர் ஏரி, ஸ்ரீ கதவ நாச்சி அம்மன் கோவில், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இம்மலையில் அமைந்துள்ளன.

    இதனால் பல மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும், குடும்பத்தோடும், நண்பர்களுடனும், அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் முக்கிய சுற்றுலா திடல்களில் ஒன்றான புங்கானூர் ஏரியான படகு இல்லம் ஆகும்.

    இந்த ஏரி 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ளது. இதன் பக்கத்தில் நிழற்குடம் ஒன்று அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்ப ட்டுள்ளது. மேலும் ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறுவர்களுக்கு ரூபாய் 5 நுழைவுக் கட்டணமும், பெரியவர்களுக்கு ரூபாய் 15 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் ஊஞ்சல் விளையாட்டு தரைப் பகுதியில் குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.

    குழந்தைகள் விளையாடும் போது அசம்பாவிதம் ஏற்படா தவாறு விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் எனக் குழந்தை களின் பெற்றோர்கள், சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×