search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியநாயக்கன்பாளையத்தில் சிறுவர் பூங்காவை போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
    X

    பெரியநாயக்கன்பாளையத்தில் சிறுவர் பூங்காவை போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்

    • பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைகளிடம் பேசினார்
    • காவலர் குடியிருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் போலீஸ் குடியிருப்பில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் காவலர் குடியிருப்புக்கு வந்தார்.

    அப்போது அவரை குழந்தைகள் பூங்கொந்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்வெட்டு திறந்துவைத்து ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைக ளிடம் பேசினார். அங்கு உள்ள செட்டில்கார்ட் மைதானத்தில் பயிற்சி எடுத்துவரும் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்களிடம் கைகு லுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    தொடர்ந்து காவலர் குடியிருப்பை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு, அங்கு வசிக்கும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் காவலர் குடியி ருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்றவர், அங்கு உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பெரியநாய க்கன்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், கணேசமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி, தனிப்பிரிவு சிறப்பு காவலர் கங்காதரன் விஜயகுமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ், காவலர் அன்சர், மாருதி கல்லூரி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் காவலர்களின் குடும்பத்தி னர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×