search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • சாத்தான்குளம் பேரூராட்சி 9-வது வார்டில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
    • இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சி 9-வது வார்டில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஸ்டெல்லாபாய் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா முன்னிலை வகித்தார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேணுகோபால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் குருசாமி, பிச்சிவிளை சுதாகர், பேரூராட்சி துணைத்தலைவர் மாரியம்மாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப், அலெக்ஸ், சுந்தர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி, மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் வசுமதி, முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஜாக்குலின், தி.மு.க. நகர செயலாளர் மகாஇளங்கோ, அழகம்மன் கோவில் அறங்காவல் குழுத்தலைவர் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் பாபு (பேய்குளம்), கோதண்டராமன் (ஆழ்வார்), ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பாஸ்கர், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×