என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "beauty parlour"
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் மாநில தலைவர் எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது.
- சங்க நிர்வாகிகள் அனைவரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரத்தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாதன், டாக்டர் என்.சிவாநத்தம் இருவரது படத்திற்கும் மலரஞ்சலி செலுத்தினர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், இன்று மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் மாநில தலைவர் எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சங்க நிர்வாகிகள் அனைவரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரத்தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாதன், டாக்டர் என்.சிவாநத்தம் இருவரது படத்திற்கும் மலரஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக மாநகராட்சி பகுதியில் உள்ள கார்பரேட் சலூன், அழகு நிலையங்களால் ஏற்படும் தொழில் பாதிப்பு, அறநிலையத்துறை கோயிலில் நாதஸ்வரம், மேளம் வாசிப்போரை அரசு ஊழியர்கள் ஆக்குவது, நகராட்சி கடைகளின் வரியை சீறமைப்பது, உள்ளிட்டவை நிறைவேற்றபட்டுள்ளது. சங்கத்திற்கு என புதிய இணையதளம் துவங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. மாநில பொது செயலாளர் கரியப்பா டி.கே.ராஜா, பொருளாளர் எஸ்.நடராஜன், செங்கை, காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் ருக்மாந்தகன், சண்முகம், ராஜீவ்காந்தி உட்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பார்லர் தொடங்கப் போகிற ஏரியா மிக முக்கியம். பார்லர் தொடங்கப்படவிருக்கிற இடத்தின் அருகில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கு பார்லர் வர வேண்டிய தேவையும் வசதியும் இருக்குமா எனப் பார்க்க வேண்டும். ‘என்னிடம் திறமை இருக்கிறது.. என்னைத் தேடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் மக்கள் வருவார்கள்’ என்று நினைக்க வேண்டாம். அதெல்லாம் நீங்கள் பார்லர் பிசினஸில் உங்களைத் தக்க வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்ற பிறகுதான் சாத்தியம்.
அடுத்தது வேலை தெரிந்த ஆட்களை நியமிக்க வேண்டியது முக்கியம். கற்றுக்குட்டிகளை வைத்து வேலை வாங்கினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அடுத்த முறை உங்களைத் தேடி வர மாட்டார்கள். மூன்றாவதாக தரமான அழகு சாதனங்களை உபயோகிக்க வேண்டியது முக்கியம். நீங்கள் உபயோகிக்கிற பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு அலர்ஜியையோ, பக்க விளைவுகளையோ ஏற்படுத்தக்கூடாது.
தரத்தில் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக்கூடாது. இன்று பார்லர் ஆரம்பித்துவிட்டு, நாளைக்கே லாபம் கொட்டும் என்கிற கனவில் மிதப்பது மிகவும் தவறு. இந்தத் துறையில் பொறுமை மிக மிக அவசியம். உழைப்பையும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டிருங்கள். லாபமும் நற்பெயரும் தானாக வரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்