search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fracture"

    • இப்பள்ளியில் நேற்று மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.
    • வலி தாங்காமல் துடித்த மாணவி, பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரில் வசிக்கும் 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியில் நேற்று மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு வகுப்பு இடைவேளை விடப்ப ட்டது. அப்போது மாணவிகள் வெளியில் அமர்ந்து பேசிக்கொ ண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாணவியின் பின்புறம் அடித்துள்ளார். இதில் அந்த மாணவியின் கையில் பலத்த அடிபட்டது. வலி தாங்காமல் துடித்த மாணவி, பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றார்.

    நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் மாணவியை உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதிய மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் வேப்பூர் போலீ சாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவியிடம் விசாரணை நடத்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா உத்தரவிட்டார். அதன்படி வேப்பூர் போலீசார் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு சென்று மாணவி யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.
    • ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் (40). இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.

    தகராறு

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஓசியில் மது கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அரிதாஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.

    வழக்கு

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு காவலாளியின் மண்டை உடைந்தது.
    • ேபாலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கீழக்கரை

    நேபாள நாட்டை சேர்ந்தவர் நரேன் குமார் சஞ்சேல் (வயது 43). இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு பகுதியில் இரவு காவலாளியாக (கூர்க்கா) உள்ளார்.

    கண்ணாடி வாப்பா தர்கா செல்லும் சாலையில் ரோந்து சென்றார். அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கூர்க்கா நரேன் குமாரை வழிமறித்து மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றனர். இதில் ஏற்பட்ட தகராறில் நரேன்குமாரின் கட்டையால் தாக்கியதில் மண்டை உடைந்தது.

    அவர் கூச்சலிட்டதும் அக்கம், பக்கத்தினர் கூர்க்காவை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சதாம் உசேன் (31), முகம்மது கான் (28), பைசல் கான் (32), முகம்மது ஆதம் (30), ஜாவித் (22), அபுபக்கர் சித்திக் (24) ஆகியோர் மீது கீழக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர்.

    கீழக்கரை நகர் பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ளாததால் அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். கீழக்கரை நகரில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ள ேபாலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சரஸ்வதிக்கு 2 மாதங்களுக்கு முன்னர் இடது கை எலும்பு முறிந்தது.
    • மருத்துவரின் ஆலோசனை பெற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    தென்காசி:

    கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி சரஸ்வதி (வயது43).

    இவருக்கு 2 மாதங்களுக்கு முன்னர் இடது கை எலும்பு முறிந்து சிகிச்சைகாக பல மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். இதயத்தில் இதய வால்வு பிரச்சினை இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய யாரும் முன் வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிகிச்சைக்காக சரஸ்வதியை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு காளிமுத்து கடந்த 4-ந் தேதி அதிக வலியும், வீக்கம் இருப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர்கள் சரஸ்வதியின் இடது கையை பரிசோதித்து, நுண்கதிர் படம் எடுத்துப் பார்த்து அவருக்கு இன்னும் அந்த எலும்பு சேரவில்லை என்றும் அது மாறுபட்ட கோணத்தில் இருப்பதை அறிந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

    மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் அறிவுரை யின்படி உடனடியாக இருதய சிகிச்சை நிபுனர் மற்றும் மயக்க மருத்துவரின் ஆலோசனை பெற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இருதய பரிசோதனை செய்யும் போது இருதயத்தில் மூன்று வால்வுகளில் சுருக்கம் இருந்தது தெரிய வந்தது.

    இடது கையில் உடைந்த 2 எலும்புகளுக்கும் இதயவியல் நிபுணரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை கலெக்டர் ஆகாஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா ஆகியோர் பாராட்டினர்.


    • கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும்.
    • அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமை வகித்தார்.

    ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், பொறியாளர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

    கணக்கர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் பேசுகையில், நகர்மன்ற தலைவர், அதிகாரிகள் வார்டுகளுக்கு ஆய்வு செய்ய செல்லும்போது அந்தப் பகுதியில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து செல்லவேண்டும் என்றார்.

    முழுமதி இமயவரம்பன்:

    எனது வார்டில்கொசு த்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும். பாலமுருகன்: மழைநீர் வடிகால்களில் பெரும்பா லும் செப்டிக்டேங்க் கழிவுநீர் திறந்துவிடப்படகிறது.அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    வேல்முருகன் :

    அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது இதனை முற்றிலும் தடுக்க வேண்டும்.

    நாகரத்தினம்:

    8-வது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அந்த இடத்தை மீட்க நடவடிக்கை வேண்டும்.

    ஜெயந்திபாபு:

    பதினெண் புராணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பணி நடைபெறுவதால் கோயிலுக்கு செல்லும் சாலையை சரி செய்ய வேண்டும்.

    முபாரக்அலி:

    பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நலன் கருதி பாலத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவதாஸ்:

    எனது வாடுக்கு துப்புரவு பணி மேற்கொள்ள ஊழியர்கள் வருவதில்லை.

    இதனால் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இரண்டு இடங்களில் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

    ராஜசேகர்:

    சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையத்தில் உள்ள மின்மோட்டார் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகை யில், ஈசான்ய தெருவில் அமைந்துள்ள எரிவாயு தகணமேடை பராமரிப்பு பணிக்கு ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்து விட்டால் அபராதம் விதிக்கப்படும்.

    நகராட்சி பகுதிகளில்முதற்க ட்டமாக 79 இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்ப டவுள்ளது.

    மின்சாரவாரியம் அனுமதி பெற்று அடுத்து 37 மின்விளக்குகளும் எரியவை க்கப்படும் என்றார்.

    • குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையிலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது.
    • பள்ளி மாணவர்கள் எந்நேரத்திலும் குழியில் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சன்னதி தெருவிலிருந்து கல்லுளி திருவாசல் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் நாகூர், நாகப்பட்டினம், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதும க்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருமரு கல் சன்னதி தெருவில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ள்ளது.

    இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையிலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்ய குழிதோண்ட பட்டு சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது.இதனால் குழிக்கு அருகில் தனியார் மழலையர் பள்ளி மற்றும் அரசு மாணவியர் விடுதிக்கு செல்லும் மாணவர்கள் இந்நேரத்திலும் குழியில் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கல்லுளி திருவாசல் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து குழியினை மூட கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×