search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aaradhya"

    • இதன் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்
    • ஐஸ்வர்யாராய் போல ஆராத்யா அழகாக வசீகரமாக உள்ளார்

    பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 - ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். 

    பிரபல இயக்குனர்மணி ரத்னம் ' இருவர் ' படத்தில் தமிழில் அறிமுகமானார். இவர் 2007-ல் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 'ஆராத்யா' என்ற மகள் உள்ளார்.

    இந்நிலையில் குஜராத் ஜாம்நகரில் அம்பானி மகன் திருமண முந்தைய விழா கொண்டாட்டத்தில் ஆராத்யா புதிய சிகை அலங்காரத்தில் பங்கேற்றார்.அதை தொடர்ந்து நேற்று ஐஸ்வர்யா ராயின் தந்தை, கிருஷ்ணராஜ் ராய்,நினைவு தினத்தில் ஆராத்யா கலந்து கொண்டார்.

    இதன் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.இந்த புகைப்படங்களில் தனது தாத்தாவின் போட்டோ முன் சிறுமி ஆராத்யா,ஐஸ்வர்யாராய், அவரது தாய் பிருந்தியாராய் நிற்பது போன்று இடம் பெற்று உள்ளது. 




     

    ஐஸ்வர்யா தனது அப்பாவை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்வது வழக்கம்.இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பார்த்து ரசிகர்கள் வியந்து உள்ளனர்.

    மேலும் ஐஸ்வர்யாராய் போல ஆராத்யா அழகாக வசீகரமாக உள்ளார். மிகவும் நன்றாக வளர்க்கப்பட்டவளாகவும் இருக்கிறார் என புகழ்ந்து உள்ளனர்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்தி சினிமாவில் பிரபலமான அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய்யின் குழந்தையான ஆரத்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அபிஷேக், ஆரத்யாவை கொடுத்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். #AbhishekBachchan #AishwaryaRai
    இந்தி சினிமாவின் பிரபல தம்பதி அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு தமிழ், இந்தியில் திரைக்கு வந்த குரு திரைப் படத்தில் ஐஸ்வர் யாராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்தனர்.

    அந்த படப்பிடிப்பில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதியினர் நேற்று தங்களது மகள் ஆராத்யா பச்சனின் 7-வது பிறந்தநாளை கொண்டாடினர்.

    இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், “குழந்தையின் பிறந்தநாள் அவளின் தாயை கொண்டாடாமல் முடிவடையாது.



    மகளுக்கு பிறப்பை அளித்ததற்கு, அவளின் மேல் அன்பை செலுத்துவதற்கு, அவளை பார்த்துக் கொள்வதற்கு, எல்லாவற்றுக்கும் மேலான ஆச்சரியப் பெண்ணாக இருப்பதற்கு... என்னுடைய திருமதிக்கு வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசான நம் மகளை அளித்ததற்கு நன்றி. என்னுடைய தேவதை ஆராத்யாவுக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். #AbhishekBachchan #AishwaryaRai 

    ×