search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Watchman"

    • கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை காவலாளி போலீசில் ஒப்படைத்தார்.
    • குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார்.

    மதுரை

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் கதிரேசன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு ரூ.5 ஆயிரம் பணத்தை யாரோ தவற விட்டு சென்றுள்ளனர். பணத்தை எடுத்த கதிரேசன் அதை உடனடியாக அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் ஒப்படைத்தார். கதிரேசனின் இந்த செயலை போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன் (வயது63). இவர் புது ராம்நாடு ரோட்டில் உள்ள வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென்று வாத நோய் வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சண்முகவள்ளி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபாண்டியனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவலாளி திடீரென இறந்தார்.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் கருப்பாயூரணி வீரபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சமயமுத்து(33). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி நெடுகனேந்தலில் நடைபெற்ற மாமனாரின் இல்ல விழாவிற்காக சென்றார். அங்கு உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல்சிகி ச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயமுத்துவின் தந்தை தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு காவலாளியின் மண்டை உடைந்தது.
    • ேபாலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கீழக்கரை

    நேபாள நாட்டை சேர்ந்தவர் நரேன் குமார் சஞ்சேல் (வயது 43). இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு பகுதியில் இரவு காவலாளியாக (கூர்க்கா) உள்ளார்.

    கண்ணாடி வாப்பா தர்கா செல்லும் சாலையில் ரோந்து சென்றார். அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கூர்க்கா நரேன் குமாரை வழிமறித்து மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றனர். இதில் ஏற்பட்ட தகராறில் நரேன்குமாரின் கட்டையால் தாக்கியதில் மண்டை உடைந்தது.

    அவர் கூச்சலிட்டதும் அக்கம், பக்கத்தினர் கூர்க்காவை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சதாம் உசேன் (31), முகம்மது கான் (28), பைசல் கான் (32), முகம்மது ஆதம் (30), ஜாவித் (22), அபுபக்கர் சித்திக் (24) ஆகியோர் மீது கீழக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர்.

    கீழக்கரை நகர் பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ளாததால் அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். கீழக்கரை நகரில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ள ேபாலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஒசுவக்காடு பகுதியில் கார் மோதி வாட்ச்மேன் பலியானார்.
    • நேற்று காலை 6 மணியளவில் பங்க் எதிரே வேலை முடிந்து சாலையை கடந்தார்.

    குமாரபாளையம்

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஒசுவக்காடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இரவு நேர வாட்ச்மேனாக பணியாற்று வந்தார். நேற்று காலை 6 மணியளவில் பங்க் எதிரே வேலை முடிந்து சாலையை கடந்தார்.

    அப்போது வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் அண்ணா துரை பரிதாபமாக இறந்தார். அப்போது சாலையின் மறுபக்கம் இவரது மகன் சுரேஷ், (30), இந்த சம்பவத்தை கண்டு கதறி அழுதார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் ஓட்டிவந்த சேலத்தை சேர்ந்த டாக்டர் மணிகண்டபிரபுவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் `வாட்ச்மேன்' படத்தின் விமர்சனம். #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde
    ஜி.வி.பிரகாஷ் ஸ்டன்ட் சில்வாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார். மறுபுறம் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்‌தா ஹெக்டே இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் பிடிவாதத்தால், சம்யுக்தாவை ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

    அடுத்தநாள் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுவதாக கடன் கொடுத்தவர்கள் மிரட்டுகிறார்கள்.



    இதையடுத்து வேறு வழி தெரியாமல் பங்களா ஒன்றில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு ஒரு நாயிடம் மாட்டிக் கொள்கிறார். நாய் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சுமனை கொல்வதற்காக மர்ம கும்பல் ஒன்று அந்த வீட்டிற்கு வருகிறது.

    கடைசியில், அந்த வீட்டில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா? அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? அவரது நிச்சயதார்த்தம் நடந்ததா? சுமனை கொல்ல வந்தவர்கள் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே வாட்ச்மேனின் மீதிக்கதை.



    ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த படத்தில் நாய்க்கு பயந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிகளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் காட்சிகளில் அழுத்தமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

    யோகி பாபு காமெடி ஆங்காங்கு எடுபடுகிறது. சுமன் அனுபவ நடிப்பையும், ராஜ் அர்ஜூன், ரவி பிரகாஷ், சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.



    காமெடி கலந்த த்ரில்லர் கதையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய். திரைக்கதை ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்ந்தாலும் ஆங்காங்கு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு வீட்டில் ஒருநாள் நடக்கும் சம்பவங்களை வைத்து கதையை நகர்த்துவது என்பது எளிதில்லை. அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் விஜய்.

    ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் `வாட்ச்மேன்' பரபரப்பு. #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde

    தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குறித்து பேசியுள்ளார். #GVPrakash
    ஜிவி.பிரகாஷ் நடிப்பில் இந்த அண்டு, சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

    குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்ட ஜிவி.பிரகாஷின் குழந்தை ரசிகர்களை கவரும் வகையில் ’வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் புருனோ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய் இடம்பெறும் சாகச காட்சிகளை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்பதாலேயே கோடைக் கொண்டாட்டமாக வரும் 12-ம்தேதி ரிலீசாக இருக்கிறது. 

    இப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, வாட்ச்மேன் படம் காமெடியுடன் கூடிய திரில்லர். தண்ணீர் கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் போகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களை கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும். அது செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கும். 



    நாய்க்கு பயப்படும் ஒருவன் நாயுடனே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனை காப்பாற்ற தான் முயற்சி செய்கிறது. ஆனால் அவனோ அந்த நாயை பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் கதை போகும். என்னை காப்பாற்ற நாய் செய்யும் செயல்களை குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள். அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாய் குழந்தைகள் போலத்தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அவற்றின் போக்கில் சென்றுதான் படம் பிடிக்க வேண்டும். புருனோவை நண்பனாக்கி கொண்டேன். இருந்தாலும் சில சமயம் முறைக்கும். பயமாக இருக்கும்’ என்றார்.
    ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை என்று இயக்குனர் விஜய், வாட்ச்மேன் படம் பற்றி கூறியிருக்கிறார். #Watchman #Vijay
    விஜய் வெவ்வேறு வகையிலான முயற்சிகளை செய்தாலும், அது வெறும் சோதனைகளாக மட்டும் நின்று விடாமல், அவரது திறமையை பறைசாற்றுகிறது. திரில்லர், வரலாற்று காதல் படம், நகைச்சுவை படங்கள் என வித்தியாசமான படங்களை கொடுத்த அவர், 'வாட்ச்மேன்' மூலம் புதிய ஒரு களத்தில் தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    இப்படம் குறித்து விஜய் கூறும்போது, "துல்லியமாக சொல்வதென்றால், என் ஆரம்ப கட்டத்தில் இருந்தே வேறு வேறு வகையிலான திரைப்படங்களை உருவாக்க நான் முயற்சிக்கிறேன். பிரபலமான ஒரு ஹீரோவுடன் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு திரில்லர் படத்தை எடுக்கும் எண்ணம் எனக்கு இருந்தது. அது தான் இந்த படம் உருவாக ஒரு விதையாக இருந்தது. படத்தின் தலைப்பை வைத்தே படம் எந்த மாதிரியான படம் என்பதை ரசிகர்கள் யூகித்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். 2 நாட்களில் நடக்கும் இந்த திரில்லர் கதையில் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையில் திரைக்கதை இருக்கும்" என்றார்.



    ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நாயகனாக நடிப்பதை பற்றி விஜய் கூறும்போது, "நானும், ஜி.வி.பிரகாஷும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வருகிறோம், கிட்டத்தட்ட 11 படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அவருடைய இசை மிகச்சிறப்பாக இருக்கும். பாலா சார் இயக்கிய நாச்சியார் படத்தில் அவரை பார்த்து வியந்தேன். அவரை தவிர இந்த கதாபாத்திரத்துக்கு யாரையும் யோசிக்க முடியவில்லை. இந்த படத்திற்காக அவர் மிகவும் கடுமையான உழைத்தார். நிறைய ரிஸ்க் எடுத்தார். குறிப்பாக, ஒரு நாய் உடன் இணைந்து நடிக்க பொறுமை தேவை, ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை" என்றார்.

    ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்தின் பின்னணி இசைக்காக புதிய பாணியை முயற்சித்துள்ளார். அவரது விளம்பரப் பாடல் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளது. நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் ஒளிப்பதிவில், அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படம், வரும் ஏப்ரல் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘வாட்ச்மேன்’ படக்குழுவினர், பாலியல் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தியிருக்கின்றனர். #Watchman
    விஜய் இயக்கத்தில் ‘வாட்ச்மேன்’ என்னும் படம் உருவாகி இருக்கிறது. டபுள் மீனிங் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் வரும் 12-ந்தேதி வெளியாக இருக்கிறது. இந்த பட நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது:-

    ‘இந்த படம் முழுக்க குழந்தைகளோடு குடும்பமாக ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் வித்தியாசமான முறையில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். முக்கியமாக பொள்ளாச்சியில் சமீபத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர்.

    இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் அந்த நகரின் முக்கிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்த இருக்கிறார். வாட்ச்மேன் பொள்ளாச்சி நகரத்தையே கண்காணிப்பார்’.

    இவ்வாறு அவர் பேசினார்.



    தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் பேசும் போது, ‘பொள்ளாச்சியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடக்கம் தான். இதுபோல பல நல்ல வி‌ஷயங்கள் செய்ய உள்ளோம். கோடைகாலம் என்பதால் ஆங்காங்கே வெயிலில் தவிக்கும் சிறு வியாபாரிகளுக்கு குடை அமைத்து தர உள்ளோம். சென்னை நகரம் முழுக்க கேமரா பொருத்தி கண் காணித்ததால் குற்றங்கள் குறைந்து இருக்கின்றன என்று கேள்விபட்டோம்.

    அதனால் தான் இந்த யோசனை வந்தது. எங்களை பார்த்து பலர் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிசிடிவி கேமரா அமைக்க முன்வந்தால் மகிழ்ச்சி அடைவோம்’ என்றார்.

    நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, ‘நல்ல வி‌ஷயம் செய்கிறீர்கள். நாங்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். பாதுகாப்புக்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள். என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன். இந்த படம் குழந்தைகளை மகிழ்விக்கும். நாச்சியார், சர்வம் தாளமயம் படங்களுக்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய பெயரை ஏற்படுத்தி கொடுக்கும்’ என்றார்.

    வரும் 10-ந்தேதி புதன் கிழமை பொள்ளாச்சியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஜீ.வி. பிரகாஷ், இயக்குனர் விஜய் கலந்துகொள்கிறார்கள்.
    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குழந்தைகளும் ரசிக்கும்படியாக உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Watchman #GVPrakashKumar
    தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படங்கள் சமீபகாலத்தில் குறைந்துவிட்டன. ஜீவி.பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் அதை பூர்த்தி செய்யும் என்று படக்குழு கூறுகிறது.

    விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாயிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா வாழ்ந்த வீட்டில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் மொழிவர்மன் படம் பற்றி கூறும்போது ‘நாயை பார்த்து பயப்படும் ஒரு இளைஞனுக்கு ஒரு நாயுடன் இரவு முழுக்க தங்க நேரிடுகிறது.



    அந்த நாய் தன்னை காப்பாற்ற முயற்சிக்கிறது என்று தெரியாமல் அதை பார்த்து பயப்படுகிறான். இதுதான் கதை. படம் முழுக்க சிரிக்கவும் வைக்கும். திகில் அடையவும் வைக்கும். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகி இருக்கிறது. கோடை விடுமுறையின் தொடக்கமான 12-ந் தேதி ரிலீசாகிறது’. இவ்வாறு அவர் கூறினார். #Watchman #GVPrakashKumar

    பிரதமர் மோடி பணக்காரர்களுக்குத்தான் காவலாளி சேவை செய்கிறார் என பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். #priyankagandhi #pmmodi
    பிரதமர் மோடி டுவிட்டரில் தொடங்கிய நானும் காவலாளிதான் பிரசாரத்தை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சனம் செய்கிறது.  காவலாளி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். ‘‘பணக்காரர்களுக்குத்தான் காவலாளிகள் சேவை செய்கிறார்கள். அவர்கள் ஏழை எளியோரைப்பற்றி கவலை கொள்வதே இல்லை’’ என பிரியங்கா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    கரும்பு விவசாயிகள் இரவும், பகலும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையினை வழங்குவதற்கு கூட மாநில அரசு பொறுப்பு ஏற்பதில்லை. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளனர். இதன் அர்த்தம், கரும்பு விவசாயிகளின் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிறது. அவர்களது சாப்பாடுக்கு வழியின்றி போகிறது. 

    அவர்களின் சுகாதார தேவைகளை கவனிக்க முடிவதில்லை. அவர்களின் அடுத்த சாகுபடி திட்டமும் அப்படியே நின்று விடுகிறது என பிரியங்கா தெரிவித்துள்ளார். உ.பி.யில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.9 ஆயிரத்து 836 கோடி என தகவல் வெளியாகியது. இதனை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு பிரியங்கா கேள்வியை எழுப்பியுள்ளார். #priyankagandhi #pmmodi
    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். #WatchmanTrailer
    சர்வம் தாள மயம் படத்திற்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக 100 பெர்சண்ட் காதல், குப்பத்து ராஜா, ஐங்கரன், அடங்காதே, ஜெயில், வாட்ச்மேன், 4ஜி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.

    இதில் விஜய் இயக்கியிருக்கும் `வாட்ச்மேன்' படம் ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆக்‌ஷன் திரில்லர் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். ராஜ் அருண், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிரவ் ஷா, சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர். #WatchMan #GVPrakash
    ×