search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smart phone"

    • ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    • கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.

    ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.

    இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    அரியலூர்:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி 774 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்‘ போனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், 

    அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையை சிறப்பாக செய்வதற்கும், அங்கன்வாடி பணியார்களிடம் இருந்து துல்லியமாக அறிக்கைகளை பெறவும், திட்ட சேவைகளை உரிய நேரத்தில் உரிய பயனாளிகளுக்கு கிடைக்கச்செய்வதற்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்‘ போன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ‘ஸ்மார்ட்’ போனில் சி.ஏ.எஸ். என்கிற செயலி உள்ளது. அதன் மூலமாக அங்கன்வாடி பணியாளர்கள் குடும்ப நிர்வாகம், தினசரி உணவளித்தல், வீடுகள் பார்வைத் திட்டமிடல், வளர்ச்சி கண்காணிப்பு, வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் இணை உணவு, தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய விவரம், அங்கன்வாடி மைய மேலாண்மை, மாதாந்திர முன்னேற்ற அறிக்கை போன்ற அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என்றார்.

    இதில் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) (பொறுப்பு) புவனேஸ்வரி, உதவித்திட்ட அலுவலர் அன்பரசி, போஜன்அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட திட்ட உதவியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் முதல் முறையாக ஸ்மார்ட் போனில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள க.எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமும், விஞ்ஞான் பிரசார் நிறுவனமும் இணைந்து தேசிய அளவிலான இணைய வழி திறனறிதல் தேர்வினை நடத்தியது.

    இந்த தேர்வை, 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 33 பேர் ஸ்மார்ட் போன், மடிக்கணினியை ஆகியவற்றை பயன்படுத்தி எழுதினர். தேர்வினை பள்ளி தலைமை ஆசிரியை சகுந்தலா தொடங்கி வைத்தார். தேர்வு மைய கண்காணிப்பாளராக ஆசிரியர் ராமச்சந்திரன் செயல்பட்டார்.

    இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியரும், பள்ளி ஒருங்கிணைப்பாளருமான குழந்தைவேல் செய்திருந்தார். பெரம்பலூர் மாவட்டத்திலே முதல் முறையாக அரசு பள்ளியில் இணைய வழி திறனறிதல் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
    ×