search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reading skills"

    • சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவை மேம்படுத்த நடவடிக்கை
    • இந்த தகவலை சிவகங்ககை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளவகையில், மாவட்ட நூலகத்தில் தொடங்கி வைக்கப்ப ட்டுள்ள, வாசிப்புத்திறன் மற்றும் பொதுஅறிவு மேம்பாடு ஆகியவை தொடர்பான நிகழ்வு நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி இதை நேரடியாக பார்வையிட்டு, பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமன்றி, எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உண்டு உறைவிட மாதிரிப்பள்ளிகள் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை ஊக்குவிக்குப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் பல்வேறு வகையான அறிவு சார்ந்த புத்தகங்கள் மற்றும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் ஆகியவைகளை ஒரே இடத்தில் படிப்பதற்கு ஏதுவாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களை, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 50 மாணவர்கள் வீதம், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினந்தோறும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் துணை யோடு அழைத்து வந்து, காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்களை படிப்பதற்கான நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 28 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று, ஓய்வு நேரங்களில் படிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களை நூலக உறுப்பினர்களாக இணைப்பதற்கும், அதற்கான சந்தாத்தொகையினை மாவட்ட நிர்வாகம் மற்றும் வாசகர் வட்டத்தின் சார்பில் செலுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இங்கு வரும் மாணவர்கள் முதலில் நூலகத்தில் எந்தெந்த வகையான புத்தகங்கள் உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்ட நூலகத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில் குடிமைப்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, அதற்கான புத்தகங்களும், பயனுள்ள வகையில் இடம் பெற்றுள்ளது.

    மாணவர்களுக்கு பயனுள்ள வகையில். மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை, பள்ளி மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, பொதுஅறிவுத்திறன் மற்றும் புத்தக வாசிப்புத்திறன் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×