search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nagai collector"

    நாகை மண்டலத்தில் 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கே.எம்.எஸ் 2017 - 2018 குறுவை பருவத்திற்கு ஐந்தாம் கட்டமாக 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி சீர்காழி தாலுக்காவில் அரசூர், வைத்தீஸ்வரன் கோயில். மயிலாடுதுறை தாலுக்காவில் நமச்சிவாயபுரம், திருச்சிற்றம்பலம் மற்றும் குத்தாலம் தாலுக்காவில் நக்கம்பாடி, திருவாலங்காடு, அசிக்காடு ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டது.

    இந்த நிலையங்களில் சன்னரகம் நெல் கொள்முதல் விலை ரூ.1660-க்கும் சாதாரணரகம் (பொதுரகம்) நெல் கொள்முதல் விலை ரூ.1600- க்கும் விற்பனை செய்து விவசாயிகள் தங்களின் நெல்லுக்குரிய தொகையினை மின்னணு பண பரிவர்த்தனை முறையில் பெற்று பயனடையலாம். 

    இந்த தகவலை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    நாகை மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி தமிழ்நாடு பொன்விழா தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    கீழ்வேளூர்:

    தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 21 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்வரும் 19.7.18 அன்று காலை 9 மணி முதல் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    தடகள விளையாட்டில் 100மீ. ஓட்டம், உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் 31.12.17 அன்று 21 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.2,500ம், 2ம் பரிசு ரூ.1,500ம், 3ம் பரிசு ரூ.1,000ம் வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். மாநில போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000-ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2ம் பரிசு ரூ.25,000ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3ம் பரிசு ரூ.10,000ம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம் முதலமைச்சரால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×