என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy Procurement Center"

    • நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.

    போடிப்பட்டி : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் நடப்பு பருவத்தில் சுமார் 2,400 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையாக சோழமாதேவி, கடத்தூர், கணியூர், காரத்தொழுவு, அக்ரகாரம் கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் சுமார் 1,600 ஏக்கர் நெல் பயிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தற்போது அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால் உடனடியாக நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் திருப்பூர் மண்டல மேலாளர் சின்னுசாமி கலந்து கொண்டு கொள்முதல் மையத்தை தொடங்கி வைத்தார். மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தேவி முன்னிலை வகித்தார். நெல் கொள்முதல் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-'தமிழக அரசாணையின் படி சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,203 மற்றும் ஊக்கத்தொகை ரூ.107 சேர்த்து மொத்தம் ரூ.2,310-க்கு கொள்முதல் செய்யப்படும். இது கடந்த ஆண்டு கொள்முதல் விலையை விட ரூ.150 அதிகம் ஆகும். பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,183 மற்றும் ஊக்கத்தொகை ரூ.82 சேர்த்து மொத்தம் ரூ.2,265-க்கு கொள்முதல் செய்யப்படும். இதுவும் கடந்த ஆண்டை விட ரூ. 150 அதிகம் ஆகும். கொள்முதல் செய்யப்படும் நெல்லில் சேதமடைந்த முளை விட்ட மற்றும் பூச்சி துளைத்த தானியங்கள் 4 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் குறிப்பிடத்தக்க தர நிர்ணயங்களின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். 1.30 மணி முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளையாகும். எனவே விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விற்பனை செய்து பயனடையலாம். ஈரப்பதம் 17 சதவீதம் வரை உள்ள தரமான நெல் எந்தவித பிடித்தமும் இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்'என்று அவர்கள் கூறினர்.

    நாகை மண்டலத்தில் 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கே.எம்.எஸ் 2017 - 2018 குறுவை பருவத்திற்கு ஐந்தாம் கட்டமாக 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி சீர்காழி தாலுக்காவில் அரசூர், வைத்தீஸ்வரன் கோயில். மயிலாடுதுறை தாலுக்காவில் நமச்சிவாயபுரம், திருச்சிற்றம்பலம் மற்றும் குத்தாலம் தாலுக்காவில் நக்கம்பாடி, திருவாலங்காடு, அசிக்காடு ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டது.

    இந்த நிலையங்களில் சன்னரகம் நெல் கொள்முதல் விலை ரூ.1660-க்கும் சாதாரணரகம் (பொதுரகம்) நெல் கொள்முதல் விலை ரூ.1600- க்கும் விற்பனை செய்து விவசாயிகள் தங்களின் நெல்லுக்குரிய தொகையினை மின்னணு பண பரிவர்த்தனை முறையில் பெற்று பயனடையலாம். 

    இந்த தகவலை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    ×