என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மடத்துக்குளத்தில் நெல் கொள்முதல் மையம் திறப்பு - விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள்
- நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.
போடிப்பட்டி :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் நடப்பு பருவத்தில் சுமார் 2,400 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையாக சோழமாதேவி, கடத்தூர், கணியூர், காரத்தொழுவு, அக்ரகாரம் கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் சுமார் 1,600 ஏக்கர் நெல் பயிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தற்போது அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால் உடனடியாக நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் திருப்பூர் மண்டல மேலாளர் சின்னுசாமி கலந்து கொண்டு கொள்முதல் மையத்தை தொடங்கி வைத்தார். மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தேவி முன்னிலை வகித்தார். நெல் கொள்முதல் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-'தமிழக அரசாணையின் படி சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,203 மற்றும் ஊக்கத்தொகை ரூ.107 சேர்த்து மொத்தம் ரூ.2,310-க்கு கொள்முதல் செய்யப்படும். இது கடந்த ஆண்டு கொள்முதல் விலையை விட ரூ.150 அதிகம் ஆகும். பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,183 மற்றும் ஊக்கத்தொகை ரூ.82 சேர்த்து மொத்தம் ரூ.2,265-க்கு கொள்முதல் செய்யப்படும். இதுவும் கடந்த ஆண்டை விட ரூ. 150 அதிகம் ஆகும். கொள்முதல் செய்யப்படும் நெல்லில் சேதமடைந்த முளை விட்ட மற்றும் பூச்சி துளைத்த தானியங்கள் 4 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் குறிப்பிடத்தக்க தர நிர்ணயங்களின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். 1.30 மணி முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளையாகும். எனவே விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விற்பனை செய்து பயனடையலாம். ஈரப்பதம் 17 சதவீதம் வரை உள்ள தரமான நெல் எந்தவித பிடித்தமும் இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்'என்று அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்