என் மலர்
நீங்கள் தேடியது "நாகை கலெக்டர்"
- நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
- சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக "நாகை வாசிக்கிறது" எனும் மாபெரும் வாசிப்பு இயக்கத்தை நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து அவர்கள் புத்தகம் வாசிப்பதை ஆர்வமுடன் பார்வையிட்டார்.
பின்னர் அவரும் மாணவர்களோடு சேர்ந்து புத்தகம் படித்து மகிழ்ந்தார்.
அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டு "நாகை வாசிக்கிறது" எனும் நிகழ்வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.
நம்பியார் நகர் நகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் துரைமுருகு, வட்டாரக்கல்வி அலுவலர்கள் மணி, விமலா, கண்ணன், தலைமை ஆசிரியை உலகாம்பிகை உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 7 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 163 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு தலா ரூ.604 மதிப்புள்ள ஊன்று கோல், 2 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலாக ஈமச்சடங்கு உதவித் தொகை, 1 பயனாளிகளுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிக்கான பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.1500 வழங்க ஆணை மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி மையத்திற்கான மறுபதிவுச் சான்றிதழ் என 21 பயனாளிகளுக்கு ரூ.30 ஆயிரத்து 872 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த நெடுஞ்செழியன் என்பவரது வாரிசுதாரர் அனுசுயா என்பவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) வேலுமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






